அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – தாமம்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  தாமம்

வார்த்தை :  தாமம்

பொருள்

  • சமீபம்
  • புகலிடம்
  • பற்று
  • சார்பு

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

காமம் வெகுளி மயக்கம் இவைகடிந்(து)
ஏமம் பிடித்திருந் தேனுக் கெறிமணி
ஓமெனும் ஓசையி னுள்ளே உறைவதோர்
தாமம் அதனைத் தலைப்பட்ட வாறே.

திருமந்திரம் – திருமூலர் – 8ம் தந்திரம் – முக்குற்றம்

கருத்து உரை

`காமம், வெகுளி, மயக்கம்` என்னும் மூன்று குற்றங்களையும் நான் முற்றிலும் விலக்கி, எனக்குப் பாதுகாவலாய் உள்ள பொருளை நோக்கிக்கொண்டிருந்தேன். அப்பொழுது, அடிக்கப்பட்ட மணியினின்றும் எழும் ஓசை போல, `ஓம்` என்னும் ஓர்ஓசை என் உடம்பினின்றும் எழுந்தது. அவ்வோசையை நுணுகி நோக்கியபோது அதனுள்ளே ஓர் அரியபொருள் வெளிப்பட அதனை நான் அடைந்தேன். இது வியப்பு.

விளக்க உரை

  • திருவள்ளுவர். “காமம், வெகுளி, மயக்கம்“* என மூன்றாக்கிக் கூறியதை சாங்கிய நூல் ஐந்தாக கூறும். காமம் – விருப்பம். வெகுளி – சினம்; வெறுப்பு. மயக்கம் – அறியாமை. `வேட்கை` என்பதையும் காமம் ஆக்கியும், `செருக்கு` என்பதையும் மயக்கம் என வகுத்து `பஞ்சக்கிலேசம்` என்பர்.
  • யோகமார்கத்தால் (தச தீட்சையில் கேட்கப்படும் ஒரு ஒலி) கேட்கப்படும் உந்தியினின்றும் எழுந்த `ஓம்` என்னும் ஓசை இரண்டு மாத்திரையைக் கடந்து தொடர்ந்து ஒலித்தது.

துக்கடா

  • தளை என்ற சொல் பிணைப்பு என்னும் பொருள்படும்.
  • செய்யுள்களில் அருகருகே வரும் சீர்களுக்கு இடையேயான தொடர்பு தளை எனப்படுகின்றது. தளை அமைவதற்கு இரண்டு சீர்கள் வேண்டும்.
  • செய்யுளில் முதலில் வரும் சீர் நிலைச்சீர் எனப்படுகின்றது.
  • அதை அடுத்து வரும் சீர் வருஞ்சீர் என அழைக்கப்படுகின்றது.

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *