வடிவம்
· ஞானம் செல்வம் இரண்டையும் தரும் வடிவம்
· சங்கன் என்ற அரசன் சிவன் மீது பற்றும், பதுமன் என்ற அரசன் திருமால் மீது பற்று கொண்டு யார் பெரியவர் என்ற வாதத்தினால் அம்மையிடம் முறையிட அவர்களுக்கு இருவரும் ஒருவரே என குறிக்க எடுத்த வடிவம்.
· சுவாத்தை மாற்றுவதால் ப்ரமத்தை அறியலாம். மேல்விவரங்களை குரு மூலமாக அறியவும்.
வலது – பிங்களை(சூரிய கலை நாடி)
இடது – இடகலை(சந்திர கலை நாடி)
சுழுமுனை – இரு பக்கங்களிலும் காற்றை செலுத்துதல்
எண்
|
வலது பாதி(சிவன்)
|
இடது பாதி(திருமால்)
|
|
1
|
தலை
|
கங்கை, பிறைச்சந்திரன், அக்னி, ஜடாமுடி. பின்புறம் சிரசக்கரம் அல்லது ஒளிவட்டம்,சடாமுடி
|
கிரீடம்
|
2
|
திருமுகம்
|
நெற்றிக் கண்(அர்த்தநேத்திரன்), திருநீறு
|
திருநாமம்
|
3
|
காது
|
தாடங்கம், மகர குண்டலம், சர்ப்ப குண்டலம்
|
மகர குண்டலம்
|
4
|
கைகள்
|
· மழு, அபய ஹஸ்தம்
· பரசு மற்றும் நாகம்
|
சக்கரம், சங்கு அல்லது கதை மற்றும் ஊரு ஹஸ்தம்/(கடக முத்திரை) சங்க ஹஸ்தம். கேயூரம், கங்கணம்
|
5
|
மார்பு
|
ருத்ராட்சம்
|
திருவாபரணங்கள்
|
6
|
இடுப்பு
|
புலித்தோல் ஆடை
|
பஞ்சகச்சம்
|
7
|
திருவாட்சி
|
நாக வடிவில் சங்கன் குடை பிடித்தபடி
|
|
8
|
வண்ணம்
|
வெண்மை
|
நீலநிற மேனி
|
9
|
தோற்றம்
|
கோரம்
|
சாந்தம்
|
10
|
வாகனம்
|
வலது புறம் நந்தி
|
இடது புறம் கருடன்
|
* கேசாதி பாதமாக விவரிக்கப்பட்டுள்ளன. சோழர் கால வடிவமும், பல்லவர் கால/இதர வடிவமும் சில இடங்களில் வேறு வேறாக இருக்கின்றன.
வேறுபெயர்கள்
சங்கர நாராயணர்
ஹரியர்த்தமூர்த்தி
வடிவம் அமையப் பெற்ற திருக்கோயில்கள்
· சங்கரன் கோவில், திருநெல்வேலி மாவட்டம்
· தஞ்சைப் பெரிய கோயில்
· சங்கர நாராயண சுவாமி திருக்கோவில், தஞ்சை மேலராஜவீதி
· கங்கை கொண்ட சோழபுரம்
· சிதம்பரம்
· திருஅறையணிநல்லூர் (தற்போது அரகண்டநல்லூர் )- திருக்கோவிலூருக்கு எதிர்க்கரையில் பெண்ணையாற்றின் வடகரையில் உள்ள ஒரு சிறு குன்றின் மீது திருக்கோவில்
· திருச்செந்தூர்
· திருப்பெருந்துறை
· மீனாட்சி அம்மன் வசந்த மண்டபம், மதுரை
· நாகேஸ்வரர் கோவில், கும்பகோணம்
· குடுமியான் மலை குடவறைச் சிற்பங்கள்
· ஹரிஹர், ஹோஸ்பெட் அருகே துங்கபத்ரா நதிக்கரை, தாவன்கெரே மாவட்டம், கர்நாடகா
· கூடலி, சிவமோகா எனப்படும்ஷிமோகா– துங்காவும்(திருமால்) பத்ராவும்(சிவன்) சங்கமம்
இதரக் குறிப்புகள்
·
சங்கர நாராயணர் கோயிற் கோமதியம்பிகை பிள்ளைத்தமிழ் என்றொரு நூலை முத்துவீரக் கவிராயரவர் என்பவர் இயற்றி இருக்கிறார்.
· வாமன புராணம்
· பேயாழ்வார் பாசுரம்
தாழ் சடையும் நீள் முடியும் ஒண் மழுவும் சக்கரமும்
சூழ் அரவும் பொன் நாணும் தோன்றுமால் சூழும்
திரண்டு அருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு
இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து
புகைப்படம் : வலைத்தளம்
புகைப்படம் : வலைத்தளம்