அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – பாராதி

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  பாராதி

பொருள்

  • நில உலகம்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

பாராதி ஐந்துக்கும் பன்னும்அதி தெய்வங்கள்
ஆரார் அயனாதி ஐவராம் – ஓரோர்
தொழிலவர்க்குச் சொல்லுங்கால் தோற்றமுதல் ஐந்தும்
பழுதறவே பண்ணுவர்காண் பார்.

திருநெறி 4 –  உண்மை விளக்கம் – மனவாசகங்கடந்தார்

கருத்து உரை

பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம் ஆகிய பஞ்சபூதங்கள் அல்லது ஐம்பூதங்கள் ஆகியவைகளின் சேர்கையினால் ஆன இப் பிரபஞ்சத்திற்கு அவர்கள் செய்யும் தொழிலை வைத்து அதிதெய்வங்கள் யாவர் எனின், முறையே பிரமா, விஷ்ணு, உருத்திரர், மகேசுவரர், சதாசிவர் என ஐந்து பேர்கள். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் மற்றும் அருளல் ஆகிய ஐந்து தொழிலையையும் குற்றமில்லாதவாறு செய்வார்களென்று அறிவாயாக.

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

நவந்தரு பேதங்களுள் அருவுருத்திருமேனி எது?
சதாசிவம்

Loading

சமூக ஊடகங்கள்