அமுதமொழி – விசுவாவசு – ஆடி– 22 (2025)


பாடல்

தானென்ற வாலையிவள் ரூபங் காணச்
சமர்த்துண்டோ ஆண்பிள்ளை தானு முண்டோ?
பானென்ற வாமத்துக் குள்ளே யப்பா
பராபரையாள் பலகோடி விதமு மாடிக்
தேனென்ற மொழிச்சியிவள் சித்தர்க் கெல்லாஞ்
சிறுபிள்ளை பத்துவய துள்ள தேவி;
ஊனென்ற வுடலுக்குள் நடுவு மாகி
உத்தமியாள் வீற்றிருந்த வுண்மை தானே

கருவூரார் – பூஜாவிதி

கருத்து – வாலையின் பெருமைகளைக் கூறும் பாடல்.

பதவுரை

தன்னில் தானாகவே பூரணம் பெற்றவளாகிய வாலையின் ரூபத்தை காண எவருக்கேனும் திறமை இருக்கின்றதா? தன்னை ஆணென்று கர்வத்தினால் உரைப்பவர்களும் அறிவார்களோ? பால் போன்ற வெண்மை நிறம் கொண்டவளும்  இடது பாகம் இருப்பவளும் ஆகிய பராபரையானவள் நினைத்த மாத்திரத்தில் பல கோடி வடிவம் எடுக்கக் கூடியவள்; தேன் போன்ற இனிய மொழியினை உடையவள்; சித்தர் பெருமக்களால் வணங்கப் பெறும் பத்து வயது கொண்ட சிறு பெண் பிள்ளை போன்றவள்; உத்தமியான அவள் இந்த உடலில் நடு நாயகமாக வீற்றிருப்பது என்பதே உண்மை.

விளக்கஉரை

  • தானென்ற – தானாகவே / தன்னால்
  • பானென்ற – பால் போன்ற

#அந்தக்கரணம் #கருவூரார் #சித்தர்_பாடல்கள் #வாலை #பராபரை

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – சித்திரை – 5 (2019)


பாடல்

தானென்ற வாலையிவள் ரூபங் காணச்
     சமர்த்துண்டோ ஆண்பிள்ளை தானு முண்டோ
பானென்ற வாமத்துக் குள்ளே யப்பா
     பராபரையாள் பலகோடி விதமு மாடித்
தேனென்ற மொழிச்சியிவள் சித்தர்க் கெல்லாம்
     சிறுபிள்ளை பத்துவயது உள்ள தேவி
ஊனென்ற உடலுக்குள் நடுவு மாகி
     உத்தமியாள் வீற்றிருந்த உண்மை தானே

கருவூரார் பூஜாவிதி

*கருத்துவாலையின் தன்மைகளையும் இருப்பிடம் பற்றியும் உரைத்தப் பாடல்*

பதவுரை

பாலப் பருவத்திலுள்ளவளும், சக்தி பேதங்களில் ஒன்றும் ஆன வாலையின் ரூபம் காண யாருக்கு திறமை உள்ளது? சமர்த்தனும் வீரனும் ஆகிய ஆண்பிள்ளையாலும் அவளை அறிய முடியுமோ? அழகும், ஒளி பொருந்தியும் இருக்கக் கூடியவளும் அகப்புறச்சமயம் சார்ந்தவளும் இடப்பாகம் கொண்டவளுமான பராபரை ஆனவள் பல கோடிவிதமாய் வடிவம் கொள்ளக் கூடிய திறமை கொண்டவள்; தேன் போன்ற மொழிகளை உடையவள்;  சித்தர் பெருமக்களால் பத்து வயது கொண்ட சிறு பிள்ளையாக வழிபடக் கூடியவள்; உத்தமி ஆன அவள் ஊன்னெற உடலுக்குள் உச்சிக்கு கீழே அண்ணாக்குக்கு மேலேஆன உயிர்ஸ்தானத்தின்  நடுவில் வீற்றிருப்பவள் இது உண்மை தான்.

விளக்க உரை

  • வலது கண் அகாரம்; இடதுகண் உகாரம், இரண்டும் உள்ளே சேரும் இடமே மகாரம் ஆகிய வாலையின் இருப்பிடம் என்று உரை பகர்வார்களும் உளர். ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
  • வாலை பூசை செய்யாதவர்கள் சித்த தன்மை அடைவது இல்லை என்பதே உண்மை.
  • வாமம் – தொடை, அழகு, ஒளி, இடப்பக்கம், நேர்மையின்மை, எதிரிடை, தீமை, அகப்புறச்சமயம், பாம்பு வகை, முலை, செல்வம்

Loading

சமூக ஊடகங்கள்