சித்த(ர்)த் துளிப்பு – 27-Dec-2020


பாடல்

வஞ்சகம் அற்று வழிதன்னைக் கண்டோர்க்குச்
   சஞ்சலம் ஏதுக்கடி – குதம்பாய்
   சஞ்சலம் ஏதுக்கடி ?
ஆதாரமான அடிமுடி கண்டோர்க்கு
   வாதாட்டம் ஏதுக்கடி – குதம்பாய்
   வாதாட்டம் ஏதுக்கடி ?

அருளிய சித்தர் : குதம்பைச் சித்தர்

பதவுரை

நகை அணிந்த காதுகளை உடைய பெண்ணே! பிறரை ஏமாற்றுவதான வஞ்சித்தலை விலக்கி தான் யார் எனக் கண்டவர்களுக்கு துன்பம் தரத்தக்கதான குழப்பங்கள் எப்படி வரும்? வினைகளை அறுத்து பிறவி அறுத்தலை செய்யக்கூடியதற்கு ஆதாரமாக இருக்கும் தலை முதல் திருவடிவரை கண்டவர்களுக்கு மற்றவர்களிடம் தர்க்கம் செய்தல் எதற்காக?

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.