சித்த(ர்)த் துளிப்பு – 24-Dec-2020


பாடல்

ஆன்மா பரத்தோடு அமருந் திருக்கூத்தை
நான்வாயி னாலே நவில்வனோ மாங்குயிலே
அஞ்செழுத்தைக் கண்டு அதன் உண்மை யும்தெரிந்து
வஞ்சகங்கள் அற்று மகிழ்ந்திருந்தேன் மாங்குயிலே

அருளிய சித்தர் : சதோக நாதர் என்ற யோகச் சித்தர் பாடல்

பதவுரை

உயிர்களிடத்தில் உறையும் ஆன்மாவானது பரம்பொருளான பரமான்மாவோடு அமர்ந்து திருக்கூத்து நிகழ்த்தும் விதத்தினை என்னுடைய சொற்கள் கொண்டு வாயினால் சொல்ல இயலுமோ? அண்டத்திலும் பிண்டத்திலும் இருந்தும், அதற்கு மூலமாகவும் இருக்கும் ஐந்தெழுத்தினைக் கண்டும் அதன் தன்மைகளை உணர்ந்தும் அதனால் வஞ்சங்களை விலக்கி மகிழ்வுற்று இருந்தேன்

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.