
பாடல்
ஆன்மா பரத்தோடு அமருந் திருக்கூத்தை
நான்வாயி னாலே நவில்வனோ மாங்குயிலே
அஞ்செழுத்தைக் கண்டு அதன் உண்மை யும்தெரிந்து
வஞ்சகங்கள் அற்று மகிழ்ந்திருந்தேன் மாங்குயிலே
அருளிய சித்தர் : சதோக நாதர் என்ற யோகச் சித்தர் பாடல்
பதவுரை
உயிர்களிடத்தில் உறையும் ஆன்மாவானது பரம்பொருளான பரமான்மாவோடு அமர்ந்து திருக்கூத்து நிகழ்த்தும் விதத்தினை என்னுடைய சொற்கள் கொண்டு வாயினால் சொல்ல இயலுமோ? அண்டத்திலும் பிண்டத்திலும் இருந்தும், அதற்கு மூலமாகவும் இருக்கும் ஐந்தெழுத்தினைக் கண்டும் அதன் தன்மைகளை உணர்ந்தும் அதனால் வஞ்சங்களை விலக்கி மகிழ்வுற்று இருந்தேன்