
பாடல்
பொல்லாக் கொலையும் புலைஅவா விட்டு உன்றன்
வல்லபதம் காண மயங்கித் திரிகிறண்டி
துன்பமெல்லாம் போக்கிச் சுகானந்த மானநின்தாள்
இன்பம் அனுபவிக்க ஏங்கித் தவிக்கிறண்டி
அருளிய சித்தர் : சத்திய நாதர் என்ற ஞானச் சித்தர்
பதவுரை
மனோண்மணித் தாயே! உடலுக்கு கேட்டினை ஏற்படுத்துவதான கொலையினையும், உயிர்க் கொலையினை குறிப்பிடுவதுமான புலால் உண்ணும் விருப்பத்தினையும் விட்டு வலிமை உடையாதன உன்னுடைய பதத்தினைக் காண மயக்கம் கொண்டு திரிகின்றேனடி; வினைபற்றி ஏற்படுவதான துன்பம் நீங்குமாறு அதனை போக்கி, சுகானந்தத்தினை தருவதான உன்னுடைய திருத்தாள் பற்றி பேரின்பம் அனுபவிக்க ஏங்கித் தவிக்கின்றேன்.