சித்த(ர்)த் துளிப்பு – 16-Dec-2020


பாடல்

பொல்லாக் கொலையும் புலைஅவா விட்டு உன்றன்
   வல்லபதம் காண மயங்கித் திரிகிறண்டி
துன்பமெல்லாம் போக்கிச் சுகானந்த மானநின்தாள்
   இன்பம் அனுபவிக்க ஏங்கித் தவிக்கிறண்டி

அருளிய சித்தர் : சத்திய நாதர் என்ற ஞானச் சித்தர்

பதவுரை

மனோண்மணித் தாயே! உடலுக்கு கேட்டினை ஏற்படுத்துவதான கொலையினையும், உயிர்க் கொலையினை குறிப்பிடுவதுமான புலால் உண்ணும் விருப்பத்தினையும் விட்டு வலிமை உடையாதன உன்னுடைய பதத்தினைக் காண மயக்கம் கொண்டு திரிகின்றேனடி; வினைபற்றி ஏற்படுவதான துன்பம் நீங்குமாறு அதனை போக்கி, சுகானந்தத்தினை தருவதான உன்னுடைய திருத்தாள் பற்றி பேரின்பம் அனுபவிக்க ஏங்கித் தவிக்கின்றேன்.

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *