வடிவம் | சிறிது சினந்த திருமுகம் |
மேனி வண்ணம் | சிவந்த மேனி |
திருக்கைகள் | வேதாளம், வேல், அம்பு, வில், சக்கரம், கத்தி, கேடகம், சம்மட்டி, கதை, அங்குசம், நாகம், பாசம், சூலம், குந்தாலி, மழு, கொடி கொண்ட பதினாறு திருக்கரங்கள் |
பலன் | வழிபடும் பக்தர்களுக்கு தைரியம், வீரம், தன்னம்பிக்கை ஆகியவற்றை தருபவர். |
மற்றவை | சில வட இந்திய வடிவங்களில் நான்கு திருக்கரங்களுடன் வில், சூலம், பாசம் மற்றும் அங்குசம் கொண்டு காணப்படுகின்றன. |
மந்திரம்
வேதாள ஸக்தி ஸரகார்முக சக்ர கட்க
கட்வாங்க முத்கர கதாங்குஸ நாகபாஸாந்|
ஸூலஞ்ச குந்த பரஸூத்வஜ முத்வஹந்தம்
வீரம் கணேஸ மருணம் ஸததம் ஸ்மராமி||
விளக்கம்
வேதாளம், வேல், வில், அம்பு, சக்ரம், வாள், கேடயம், சம்மட்டி, கதை, அங்குசம், நாகம், பாசம், சூலம், குந்தாலி, மழு, கொடி ஆகியவற்றைத் தாங்கிய பதினாறு திருக்கரங்களுடன்`அருளுபவரும், செந்நிறத்திருமேனியை உடையவருமான வீர கணபதியை எந்நாளும் தொழுகிறேன்.