மெய்ப் பொருள் – 4. வீர கணபதி

 

வடிவம் சிறிது சினந்த திருமுகம்
மேனி வண்ணம் சிவந்த மேனி
திருக்கைகள் வேதாளம், வேல், அம்பு, வில், சக்கரம், கத்தி, கேடகம், சம்மட்டி, கதை, அங்குசம், நாகம், பாசம், சூலம், குந்தாலி, மழு, கொடி கொண்ட பதினாறு திருக்கரங்கள்
பலன் வழிபடும் பக்தர்களுக்கு தைரியம், வீரம், தன்னம்பிக்கை ஆகியவற்றை தருபவர்.
மற்றவை சில வட இந்திய வடிவங்களில் நான்கு திருக்கரங்களுடன் வில், சூலம், பாசம் மற்றும் அங்குசம் கொண்டு காணப்படுகின்றன.

 

மந்திரம்

வேதாள ஸக்தி ஸரகார்முக சக்ர கட்க
கட்வாங்க முத்கர கதாங்குஸ நாகபாஸாந்|
ஸூலஞ்ச குந்த பரஸூத்வஜ முத்வஹந்தம்
வீரம் கணேஸ மருணம் ஸததம் ஸ்மராமி||

விளக்கம்

வேதாளம், வேல், வில், அம்பு, சக்ரம், வாள், கேடயம், சம்மட்டி, கதை, அங்குசம், நாகம், பாசம், சூலம், குந்தாலி, மழு, கொடி ஆகியவற்றைத் தாங்கிய பதினாறு திருக்கரங்களுடன்`அருளுபவரும், செந்நிறத்திருமேனியை உடையவருமான வீர கணபதியை எந்நாளும் தொழுகிறேன்.

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *