முடிவற்ற தேடல்கள்

பெருங்கூட்டமொன்று
கூடிக் கலந்து தேடிக் கொண்டிருந்தது.
ஒருவன் தான் தொலைத்த பணத்தை
தேடுவதாகச் சொன்னான்.
மற்றொருவன் தொலைத்த புகழைத்
தேடுவதாகச் சொன்னான்.
மற்றொருவன் தொலைத்த குடும்பத்தை
தேடுவதாகச் சொன்னான்.
மற்றொருவன் தொலைத்த சந்தோஷங்களை
தேடுவதாகச் சொன்னான்.
கிடைத்த காலவெளியில்
அவரவர் தொலைந்தது கிடைத்ததாக உரைத்தார்கள்.
ஊழி ஓட்டத்தில் ஒருவன் வந்து
உரை பகன்றான் எதைத் தேடுகிறாய் என்று.
என்னைத் தேடுவதாக உரைத்தேன்.
கண நேரத்தில் கூட்டம் கலைந்திருந்தது
‘அவன் கிறுக்கு பயல் என்று’

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

6 thoughts on “முடிவற்ற தேடல்கள்”

  1. Would like to see an exhibition of your photos in a gallery. Maybe, it's a bit late to do so in the current Madras Week celebrations being organised by friend Vincent D'Souza.

  2. என்னைத் தேடுவதாக உரைத்தேன்.
    கண நேரத்தில் கூட்டம் கலைந்திருந்தது
    'அவன் கிறுக்கு பயல் என்று'//

    மனம் கவர்ந்த அருமையான கவிதை
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *