வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 23

புகைப்படம் : இணையம்

உமை

பானத்தின் குற்றங்களையும், குடிப்பதற்கும் குடிக்காமல் இருப்பதற்கும் ஆன காரணத்தை கேட்க விருப்புகிறேன்.

சிவன்

ஆதிகாலத்தில் எல்லா மனிதர்களும் சிறந்த ஒழுக்கம் உடையவர்களாகவும், நல்ல புத்தி உடையவர்களாகவும், சிறந்தான ஆசாரத்தை அனுட்டிப்பவர்களாகவும் , உயர்ந்த எண்ணம் உடையவர்களாகவும் இருந்தார்கள். இவ்வாறான காலத்தில் ஏவல் தொழில் செய்ய ஆட்கள் இல்லாததால்மனிதர்களுக்கு மயக்கத்தை உண்டு பண்ணுங்கள்என்ற கட்டளையை இட்டார். தேவர்கள் தமோ குணத்தின் சாரத்தை எடுத்து புத்தியை கெடுப்பதும், மனிதர்களுக்கு மயக்கத்தை தருவதும், பாவத்தை உண்டாக்குவதுமான பானத்தை மனிதர்களிடத்தில் சேர்பித்தனர். அதுமுதல் இதை அருந்துபவர்கள் செய்யத்தக்கது, செய்யத்தகாகது, சொல்லத்தக்கது, சொல்லத்தகாது, குணம், குற்றம் இவற்றை அறியாது அருந்தி மயங்கினார்கள். தகாத விஷயங்களைப் பேசுதல், கலகம் செய்தல் போன்ற தகாத செய்கைகளை செய்து பெரும் பாவங்களைச் செய்கின்றனர். மது அருந்துதல் வெட்கம், தைரியம், புத்தி ஆகியவற்றை அழித்துவிடும். நாணமும் கூச்சமும் அற்றவர்களாக செய்துவிடும்குடிப்பவர்கள் குடியை விரும்பி கொடுப்பவர்களுக்கு வேலைக்காரர்களாக ஆகிவிடுகின்றனர். இவர்கள் கயிற்றில் கட்டப்பட்ட பசுக்களைப் போல் வேலைகளைச் செய்கின்றனர். காரண காரியம் அறியாமல் நினைவு கொண்டபடி செய்வதால் பாவத்தை பற்றுகிறான். சினேகத்தை கெடுப்பவனாகவும், அசுத்தனாகவும், அவமதிக்கப்பட்டவனாகவும், உண்ணத் தகாத உணவுகளை உண்பவனாகவும், கலகம் செய்வதில் விருப்பம் உள்ளவனாகவும், கடும் சொற்களை அனைவரிடத்திலும் சொல்பவனாகவும், பெரியோர்களை இழிவு படுத்தி பேசுபவனாகவும், பிறர் மனைவி கொள்பவனாகவும், யாரிட்டத்திலும் நல்ல வார்த்தைகளை கேளாதவனாகவும் இருப்பான். இவ்வாறு பல குற்றம் உடையதால் அவர்கள் நரகம் அடைவார்கள். ஆகவே தம் இதம் கருதும் சாதுக்களால் இப்பானம் விலக்கப்பட்டிருக்கிறது

உமை

புண்ணியத்தின் முறையைக் கூறுங்கள்.

சிவன்

ஔபரமிகம், நிருபத்ரவம், ஸோபகரணம் என புண்ணியம் மூன்று வகைப்படும்.

ஔபரமிகம்

பாப காரியங்களை செய்யாதிருப்பதாகிய ஔபரமிகம், மனோ வாக்கு காயங்களால் ஏற்படும் பாவங்களை விடுதல் மற்றொரு புண்ணியம் ஆகும். இந்த பாவங்களையும் மனதால் நினைத்து அவற்றை விலக்குபவன் பாவங்களில் இருந்து விடுபடுவான். (மூன்று வகையான பாவங்களையும் விடுதல் தபோவிரதம் எனப்படும்.) எல்லா பாவங்களையும் ஒன்றாகவோ அல்லது தனித்தனியாகவோ விடவேண்டும். பாவங்களை விடுவது அசாத்தியம் எனினும் மனிதன் பாவங்களை விட்ட உடனே உயர்ந்ததாகிய ரிஷி ஆகிறான். புத்தி குறைவான மனிதர்கள் இந்த வழி அறியாமல் நரகத்தில் வதைபடுகின்றனர்.

நிருபத்ரவம்

சான்றோர்களிடம் இருந்து சாஸ்திரங்களை கேட்டல், ஐம்புலன்களை அடக்குதல், உள்ளத்தில் எப்பொழுதும் திருப்தியாக இருத்தல் ஆகியவற்றால் பாவங்களை விலக்க முடியும். இது நிருபத்ரவம் எனப்படும்.

ஸோபகரணம் (அல்லது) நிருபஸாதனம்

உலகம் முழுவதும் நன்றாக இருக்கும்படி நினைத்தல், சத்தியம், மனத்தூய்மை, உபவாசங்களில் மகிழ்வு கொள்ளுதல், காமக் குரோதங்களை விடுதல், மனதையும், இந்திரியங்களையும் அடங்குதல் மற்றும் உள்ள நற்கருமங்கள் அனைத்தும் நிருபஸாதனம் எனும் புண்ணிய வகையைச் சார்ந்தவை.

சத்யமானது சுவர்கத்திற்கு படி போலவும், துன்பக்கடலில் கப்பல் போலவும் இருக்கிறது. கண்டதையும் கேட்டதையும் உள்ளபடி உரைக்கும் சத்தியத்திற்கு மேலான தானமும் இல்லை; தவமும் இல்லை.

உயர்வு தாழ்வுகளை அறிந்ததால் சத்தியத்தை பேசுவதால் தீர்க்க ஆயுள் உண்டாகும். அவன் சந்ததியின் தொடர்ச்சியை காண்பவனும், உலகின் வரம்பை நிலை நிறுத்துபவனும் ஆகிறான்.

உமை

மனிதன் விரதத்தை எப்படி செய்தால் புண்ணியம் அடைவான்?

தொடரும்..

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *