சலனத்தில் இருந்து மௌனம் நோக்கி – ‘கணபதியும், பைரவரும்’

 

வினா :
சில நாமாவளிகள் கணபதிக்கும், பைரவருக்கும் பொதுவாக இருக்கின்றன.

உ.ம்
ஓம் நாக யக்ஞோபவீதவதே நமஹ

இது போன்றவைகளை முன்வைத்து கணபதியை உக்ர வழிபாட்டு தெய்வமாக (தாந்திரிக் வழிபாடு) எண்ணலாமா?

அறிதலின் பொருட்டே இக்கேள்வி.

 

திரு. ஸ்ரீனிவாசன் :
Even Bhairavar is not ugra devata in all the forms.

 

அடியேன்:
யோக, போக மற்றும் வேக வடிவங்களில் பைரவர் வேக வடிவமாக தான் குறிப்பிடப்படுகின்றது.

 

மதனா அண்ணா :
மிக மிக சுருக்கமாக கூற வேண்டுமென்றால் கணபதி ஆதி பைரவர் அந்தம். இந்த இரு தெய்வ வடிவங்களுமே வாசியுயர்த்தும் முயற்சிகளுக்கு ஆதாரமாக விளங்குகின்றன. நாகம் என்பது மூலாதாரத்தில் உறங்கும் குண்டலினி சக்தியைக் குறிக்கும். இதை வாசியோகத்தால் உயரெழுப்பி சகஸ்ராரமாகிய அந்தத்தை அடையச் செய்வதே யோகத்தில் தலையுயர்ந்த யோகமாக குறிக்கப்படுகிறது. காணாபத்யம் மற்றும் வைரவ வழிபாடுகளின் குறிக்கோள் இதுவே ஆகும். பாதை மாறினும் பயணக் குறி ஒன்றே.

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *