அமுதமொழி – விளம்பி – வைகாசி – 19 (2018)

பாடல்

மண்ணின் ஓர் ஐங்குணமாகி வதிவான் எவன் நீரிடை நான்காய்
நண்ணி அமர்வான் எவன்தீயின் மூன்றாய் நவில்வான் எவன் வளியின்
எண்ணும் இரண்டு குணமாகி இயைவான் எவன் வானிடை ஒன்றாம்
அண்ணல் எவன் அக்கணபதியை அன்பிற் சரணம் அடைகின்றோம்

விநாயகர் அஷ்டகம் – கச்சியப்பர்

பதவுரை

ஒலி, தொடு உணர்வு, உருவம், சுவை,  வாசனை ஆகியவை கொண்டு மண்ணின் தத்துவமாகவும், ஒலி, தொடு உணர்வு, உருவம், சுவை ஆகியவை கொண்டு நீரின் தத்துவமாகவும், ஒலி, தொடு உணர்வு, உருவம் ஆகியவை கொண்டு  நெருப்பின் தத்துவமாகவும், ஒலி,தொடு உணர்வு கொண்டு ஆகியவை கொண்டு காற்றின் தத்துவமாகவும், ஒலியினை அடிப்படையாக கொண்டு ஆகாயத்தின் தத்துவமாகவும் இருக்கும் போற்றுதலுக்கு உரிய அந்த கணபதியை அன்பினால் சரணம் அடைகின்றோம்.

விளக்க உரை

  • மண்ணில் ஐந்து வகையாக குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்பது போன்று சில இடங்களில் விளக்கங்கள் நீள்கின்றன. மூலாதார மூர்த்தி என்பதாலும், மனித உடலில் அனைத்து தத்துவங்களும் உறைவதாலும், இப்பாடல்கள அனைத்தும் சூட்சமானது என்பதாலும் இது போன்ற விளக்கங்கள் விலக்கப்படுகின்றன.
  • எண்ணிக்கை முன்வைத்து எழுதப்படும் பாடல்களில் இறங்கு முகத்தில் இருக்கும் பாடல் இது. ஐங்குணமாகிய நிலம் ஸ்தூல ரூபம், ஒரு முகமாகிய ஆகாயம் சூட்சம ரூபமாக இருப்பதாகவும் இவ்வாறு எழுதப்பட்டு இருக்கலாம். அஃதாவது ரூபத்தில் இருந்து அருபம் வரை அனைத்துமாக இருப்பவன் எனும் பொருளில் எழுதப்பட்டு இருக்கலாம்.

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *