அமுதமொழி – விளம்பி – சித்திரை – 25 (2018)

பாடல்

தந்தை தாயுநீ என்னுயிர்த் துணையுநீ சஞ்சல மதுதீர்க்க
வந்த தேசிக வடிவுநீ உனையலால் மற்றொரு துணைகாணேன்
அந்தம் ஆதியும் அளப்பருஞ் சோதியே ஆதியே அடியார்தஞ்
சிந்தை மேவிய தாயுமா னவனெனுஞ் சிரகிரிப் பெருமானே.

தாயுமானவர்

பதவுரை

திருவடியையும் திருமுடியையும் முறையே அரியும் அயனும் தேடிய பொழுது அவர்கள் அறியமுடியாதபடி அழலாக நின்ற பெரும் சுடர்ப் பிழம்பே! உண்மையான அடியார்களுடைய  தூய உள்ளத்தில்  பொருந்தியும், தாயுமானவன் எனும் தனிப்பெயர் வாய்ந்த சிரகிரிப் பெருமானே, அடியேனுக்கு  தந்தையும் நீயே, தாயும் நீயே, எளியேனுடைய உயிர் ஈடேறத் துணைபுரிய வந்த உயிரினுக்கு உயிரான துணையும் நீயே; உள்ளத்தில் தோன்றும் கவலைகளை நீக்கி, ஆட்கொண்டு அருளும்படி எழுந்து அருள வந்த சிவகுருவும் நீயே;

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *