அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – அவ்வியம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  அவ்வியம்

பொருள்

  • பொறாமை
  • அழுக்காறு

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

அவ்வியம் பேசி அறங்கெட நில்லன்மின்
வெவ்விய னாகிப் பிறர்பொருள் வவ்வன்மின்
செவ்விய னாகிச் சிறந்துண்ணும் போதொரு
தவ்விகொ டுமின் தலைப்பட்ட போதே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து உரை

பொறாமை உடையவர்களாக ஆகி, அறத்தின் வழியில் இருந்து விலகி,  தீக்குணம் உடையவர்களாக பிறர் பொருளைக் கொள்ளாதீர்கள். நற்பண்பு உடையவர்களாக உயர்ந்து, உண்ணும்போது சிறிதாயினும் பிறருக்குக் கொடுத்து உண்ணுங்கள். 

விளக்க உரை

  • இவ்வாறான நெறியில் நின்றால் நிலையாமை நீங்கி இன்பம் பெறலாம்` என்பது குறிப்பு.
  • `உணர்வு நிலையாமையை உணர்ந்து நிலைபெறுவதற்கு உரிய நெறியில் நிற்றல் வேண்டும்` என்பது பற்றி கூறப்படும் பாடல்.
  • ‘அவ்வியம் தீர்த்து என்னை ஆண்ட பொற்பாதமும் ஆகி வந்து வெவ்விய காலன் என் மேல் வரும் போது வெளி நிற்கவே’ எனும் அபிராமி அந்தாதி யாண்டும் சிந்திக்கத் தக்கது.

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

இறைவனின் குணங்கள் யாவை?
சத்து, சித்து, ஆனந்தம்

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *