அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – சூகரம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  சூகரம்

பொருள்

  • பன்றியினம்
  • மான்வகை

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

மூலம்

யான்றானெ னுஞ்சொல் லிரண்டுங் கெட்டாலன்றி யாவருக்குந்
தோன்றாது சத்தியந் தொல்லைப் பெருநிலஞ் சூகரமாய்க்
கீன்றான் மருகன் முருகன் க்ருபாகரன் கேள்வியினாற்
சான்றாரு மற்ற தனிவெளிக் கேவந்து சந்திப்பதே.

சொல் பிரிவு

யான், தான் எனும் சொல் இரண்டும் கெட்டால் அல்லது யாவருக்கும்
தோன்றாது சத்தியம் தொல்லைப்பெருநிலம் சூகரம் ஆய்
கீன்றான் மருகன் முருகன் கிருபாகரன் கேள்வியினால்
சான்று ஆரும் அற்ற தனி வெளிக்கே வந்து சந்திப்பதே.

கந்தர் அலங்காரம் – அருணகிரிநாதர்

கருத்து உரை

கேள்விகளால் எல்லாவற்றையும் சாதிக்கலாம் என்று நினைப்பவர்களுக்கு இறை அனுபவம் வராது. சொல் எனும் சுட்டு என்ற ஒன்று இருக்கும் வரை இன்ப அநுபூதி இல்லை. சுட்டிக்காட்ட பயன்பாடு உரிய சொற்களில் ‘யான்’ எனும் தன்னிலை சொல்லும், ‘தான்’ என்னும் படர்க்கை சொல்லும் அடங்கிய பிறகே சத்தியமாகிய அனுபவம் தலைப்படும். அப்பொழுது பழமை பொருந்திய பெரிய பூமியை வராகமாய் உருவெடுத்து பிளந்தவராகிய திருமாலின் திருமருகனும் முருகனின் கருணைக்கு உறைவிடமாகிய கிருபாகரனது உபதேசக் கேள்வியினால் சாட்சி ஒருவரும் இல்லாத ஒப்பற்ற ஞான வெளியில் திருமுருகப்பெருமானின் திருவருளால் சொல் இறந்த அனுபவமாகிய முருகன் தனி வெளியே வந்து சந்திப்பது எனும் அனுபவம் கிட்டும்.

விளக்க உரை

  • ‘யான் ஆகிய என்னை விழுங்கி, வெறும் தானாய் நிலைநின்றது தற்பரமே எனும் கந்தர் அநுபூதிப்பாடல் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.
  • இரண்டற்ற அத்துவித நிலையில் யான் தான் என்னும் சொற்களுக்கு இடம் இல்லாமல் இரண்டும் ஒன்றாகி  சொல்ல அற்ற அனுபவ நிலை உண்டாகிறது.

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *