‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – திருந்தடி
பொருள்
- மாறுதல் அற்ற செம்மையான திருவடிகள்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
தேடிச் சென்று திருந்தடி யேத்துமின்
நாடி வந்தவர் நம்மையு மாட்கொள்வர்
ஆடிப் பாடியண் ணாமலை கைதொழ
ஓடிப் போம்நம துள்ள வினைகளே.
தேவாரம் – ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசர்
கருத்து உரை
ஈசன் இருக்குமிடமாகிய அண்ணாமலையைத் தேடிச்சென்று, அப்பெருமான் மாறுதலின்றிச் செம்மைப் பொருளாக உள்ள திருவடிகளை ஏத்துவீராக; அங்ஙனம் தேடிச்செல்லும் நம்மையும் அவர் நாடிவந்து நம்மை ஆட்கொள்வர்; ஆடியும் பாடியும் திருவண்ணாமலையைக் கைதொழுதால் நமது நிகழ்வினைகள் ஓடிப்போகும்.
விளக்க உரை
- நம்மையும் – நம்மைப் போன்ற வினைப்பற்றி இழிவு உடையவர்களையும்