அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – ஆகம்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  ஆகம்

பொருள்

  • உடல்
  • மார்பு
  • மனம்
  • சுரை

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

ஆகத்தோர் பாம்பசைத்து வெள்ளே றேறி
அணிகங்கை செஞ்சடைமே லார்க்கச் சூடிப்
பாகத்தோர் பெண்ணுடையார் ஆணு மாவர்
பசுவேறி யுழிதருமெம் பரம யோகி
காமத்தால் ஐங்கணையான் தன்னை வீழக்
கனலா எரிவிழித்த கண்மூன் றினார்
ஓமத்தால் நான்மறைகள் ஓதல் ஓவா
ஒளிதிகழும் ஒற்றியூ ருறைகின் றாரே

தேவாரம் – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து உரை

அசையும் பாம்பினை மார்பில் சூடி, வெண்ணிறக் காளையில் அமர்ந்து உலகங்களைச் சுற்றி உலவும் மேம்பட்ட யோகியாய்,  ஆரவாரிக்குமாறு  இருக்கும் கங்கையைச் சடையில் சூடியவராய், பார்வதி பாகராய், ஆண்மையின் இலக்கணம் கொண்டவராய், காமவேட்கையை தரும்  ஐந்து மலரம்புகளை உடைய மன்மதன் சாம்பலாகி விழுமாறு வெகுண்டு மூன்றாம் கண்ணில் இருந்து  தீப் புறப்பட விழித்த பெருமானாய், வேள்விகளோடு நான்கு வேதம் ஓதுதலும் நீங்காத ஞான ஒளி விளங்கும் ஒற்றியூரில் உகந்து அருளுகின்றார்.

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

பிரபஞ்சத்தின் துணைக் காரணம் எது?
திருஅருட்சக்தி

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *