ஓவியம் : இணையம்
பொருள்
- பகைவர்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
உறுநர்த் தாங்கிய மதன் உடை நோன்தாள் – – – – – –
செறுநர்த் தேய்த்த செல் உறழ் தடக்கை
மறு இல் கற்பின் வாள்நுதல் கணவன் … ” – – – – – –
திருமுருகாற்றுப்படை – நக்கீரர்
கருத்து உரை
தம்மைச் சார்ந்தவர்களாகிய அடியார்களையும், பக்தர்களையும் தாங்கிக் காத்தது அருளும், அழகும் வலிமையும் பொருந்திய திருவடிகளை உடையவரும், பகைவர்களை அழிக்கின்ற, இடியை ஒத்த பெருமை சார்ந்த திருக்கரங்களையும் உடையவரும் ஆன திருமுருகப்பெருமான், குற்றம் சிறிதும் அற்ற கற்பினையும் ஒளி பொருந்திய நெற்றியினையும் உடைய தெய்வயானையின் கணவன் ஆவார்.