அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – ஏதன்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  ஏதன்

பொருள்

  • மூலகாரணன்
  • ஆதிகாரணன்
  • முதல்வன்
  • கடவுள்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

ஏதனை, ஏதம் இலா இமையோர் தொழும்
வேதனை, வெண்குழை தோடு விளங்கிய
காதனை, கடிபொழில் கோழம்பம் மேவிய
நாதனை, ஏத்துமின், நும் வினை நையவே!

தேவாரம் – 2ம் திருமுறை – திருஞானசம்பந்தர்

கருத்து உரை

மூலக்காரணனனாகவும், ஆதிகாரணனனாகவும், முதல்வனனாகவும் இருப்பவன்; குற்றம் அற்று இமையாது இருக்கும் யோகியர்களால் வழிபடப் பெறும் வேதவடிவினன்; வெண்குழையும் தோடும் அணிந்த செவிகளை உடையவன்; மிகுந்த சோலைகள் சூழ்ந்த கோழம்பம் எனும் ஊரில் மேவிய தலைவன். அவனை உம் வினைகள் அறுந்து கெடுமாறு ஏத்துமின்.

விளக்க உரை

ஏதன் – குற்றமுடையவன் எனும் பொருளில் ‘நாம் செய்யும் குற்றங்கட்குக் காரணமானவன்’ எனும் விளக்கம் பட இடங்களில் தென்படுகிறது. ‘ நமது குற்றங்களுக்கு ஈசன் என்றும் காரணமாகான்’ எனவே இவ்விளக்கம் இதில் இடம் பெறவில்லை. ஆன்றோரும் பொருள் அறிந்தோரும் உரைத்தால் பொருள் அறியும் வாய்ப்பு எமக்குக் கிட்டும்.

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *