எங்கே எதிர்காலம்?

நண்பன் ஒருவனை சந்திக்கச் சென்றிருந்தேன். வீட்டில் தொலைக்காட்சி அலறிக் கொண்டிருந்தது.

தொகுப்பாளர் ஊர் ஊராக சென்று கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார்.

தொகுப்பாளர் : இராவணன் தவறு செய்வதாக சொல்லி அவனிடம் இருந்து விலகி வந்த தம்பியின் பெயர் என்ன?
பதில் : …
தொகுப்பாளர் : விஜய் சினிமா துறைக்கு வந்து இருபது வருடம் ஆகிறது. அவர் நடித்த முதல் படம் எது?
பதில் : நாளைய தீர்ப்பு.
தொகுப்பாளர் :  மிக அருமையான பதில்
பார்வையாளர்கள் மத்தியில் மிக்க சந்தோஷம்.

கண்ணிர் விட்டா வளர்த்தோம் இப்பயிரை கண்ணீரால் காத்தோம்

Loading

சமூக ஊடகங்கள்

ஒலிக் குறிப்புகள்

மெட்டி ஒலி என் நெஞ்சை காதொடு தாலாட்ட ..

மூன்று பெண்கள் பேசிக் கொண்டே நடக்க துவங்குகிறார்கள். மெல்லியதாய் humming  ஆரம்பிக்கிறது. இந்த humming விஷயங்கள் தற்கால படங்களில் அரிதாகவே காணப்படுகின்றன. (உ.ம் – திருமலை – அழகூரில் )

மிக சாதரண நடுத்தர வர்க்கத்தின் நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கைவீசி நடத்தல், குடத்தில் முகம் பார்த்தல், விரும்பி சுவைக்கும் கடலையில் வீணானதை துப்புதல்.

சொல்ல முடியா சுகம் கொண்டிருக்கும் இறந்த காலத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது.

மறந்து போன பழைய தலைமுறையின் சந்தோஷங்களை மீட்டுக் கொண்டுவருகிறது.

காலம் எல்லா காயங்களையும் ஆற்றி விடும் ஆற்றல் உடையது. இசை அதனினும் ஆற்றல் உடையதாய் இருக்கிறது.

Loading

சமூக ஊடகங்கள்

மருத்துவர்களின் குறியீடு

மருத்துவர்களின் குறியீடு இது.

பழங்கால குறியீடு இது. இது சூரிய கலை, சந்திர கலை மற்றும் சுழுமுனை ஆகியவற்றைக் குறிக்கிறது.

இந்த சூரிய கலை, சந்திர கலை இரண்டும் 6 இடங்களில் சேரும். அதுவே ஆறு ஆதாரங்கள்.

மூலாதாரம்
சுவாதிஷ்டானம்
மணிபூரகம்
அனாகதம்
விசுத்தி
ஆஞ்ஞா

எல்லா இடங்களுக்கும் தனித்தனி ஆற்றல் உண்டு. குரு முகமாக மேலும் விவரங்களை அறியவும்.

Loading

சமூக ஊடகங்கள்

செவ்வாய் தோஷம்

பெரும்பாலான பெற்றோர்கள் பயம் கொள்ளும் விஷயம் செவ்வாய் தோஷம்.

அறிவியல் பூர்வமான உண்மைகள்.

செவ்வாய் தோஷம் கொண்டவர்கள் உடலில் சூடு அதிகம் இருக்கும். மற்றவர் செவ்வாய் தோஷம் அற்றவராக இருந்து திருமணம் செய்தால் குழந்தை பிறப்பு கடினமாகும். இருவருக்கும் செவ்வாய் தோஷம் இருப்பின் குழந்தை பிறப்பினில் குறை இருக்காது.

இது என் வரையினில் உணரப்பட்ட விஷயம்.

Loading

சமூக ஊடகங்கள்

விளம்பரம்

மிகப் பெரிய குளிர் பான நிறுவனத்தின் விளம்பரம்.

வயலின் கற்றுக் கொண்டிருக்கிறான் ஒருவன். இருவர் வருகிறார்கள். நன்றாக வாசிக்கிறார்கள். ஆசிரியை வருகிறார். இருவரையும் நன்றாக வாசிப்பதாக கூறி இருவரையும் அனுப்பி விடுகிறார். வயலின் கற்றுக் கொண்டிருப்பனை தன்னுடன் இருக்குமாறு கூறுகிறார்.

அவன் சந்தோஷமாக தலையட்டுகிறான்.
அருவெறுப்பின் உச்ச கட்டம்.

இதற்கு யாரும் மாற்று கருத்து தெரிவித்தார்களா என்று தெரியவில்லை.

மாத்ரு தேவோ பவ;
பித்ரு தேவோ பவ;
ஆச்சார்ய தேவோ பவ;

காலம் நம்மைக் காக்கட்டும்.

Loading

சமூக ஊடகங்கள்

சொர்க்கம்

சமீபத்தில் திருமண விழா ஒன்றிற்கு சென்றிருந்தேன். வாசலில் நுழையும் போது இசைக் கச்சேரி. வேண்டாம் மச்சான் வேண்டாம்  இந்த .. என்ற பாடல். மிகப் பெரும்பாலான மனிதர்கள் ரசித்தார்கள். (வேறு என்ன சொல்ல)

திருமண தம்பதியருக்கு அன்பளிப்பு அளிக்க காத்திருக்கும் ஒரு கூட்டம்.  ஒரு புறம் ஏறி, மற்றொரு புறம் இறங்க வேண்டும். தீடிரென இரண்டு பேர் எதிர் முனையில் ஏறி, அன்பளிப்பு கொடுத்து விட்டு இறங்கி விட்டனர்.சினிமா அரங்கமா என சந்தேகம் வந்து விட்டது.

உணவு அரங்கத்தில் மீண்டும் கூட்டம். பந்தி ஆரம்பித்து சாம்பார் தான் சாப்பிடுகிறார்கள். அதற்கும் சரவண பவனில் சீட்டு வைத்து காத்திருப்பது போல். சாப்பிட்டுக் கொண்டிருப்பவரின் பின்னால் காத்திருக்கும் கூட்டம்.

இந்த அக்கினி நம்மை காக்கட்டும் என்று தொடரும் மந்திரங்கள் எங்கே போயின.

திருமணங்கள் சந்தோஷ தருணங்கள். ஆனால் எது சந்தோஷ தருணங்கள் என்பதில் சந்தேகம்.

Loading

சமூக ஊடகங்கள்

தொடரும் நினைவுகளும் பாடலும்

விழியில் விழுந்து – இந்த பாடலை பல ஆயிரம் முறை கேட்டிருப்பேன். ஆனாலும் ஒவ்வொரு முறையும் புதுமையாகத்தான் இருக்கிறது. காட்சியா, இசையா, பாடலை பாடிய சசிரேகாவா அல்லது வரிகளா தெரியவில்லை. என் சிறு பிராயத்தின் வரிகள் என்பதாலா. எனக்கு மட்டும் சொந்தம் உந்தன்… என்ற வார்தைகளின் தொகுப்பா. கோடையில் குளிரினையும், குளிரினில் ஒரு வெம்மையையும் தரும் இந்த பாடலை உங்களுக்கு பிடிக்குமா?

பார்க்க ரசிக்க
http://www.youtube.com/watch?v=H3cs6IXfqQ8

Loading

சமூக ஊடகங்கள்

அடைப்புக்குறிக்குள் அடைபடா அனுபவங்கள்

வீசிச் செல்லும் பனிக்காற்று வழிச் செல்லும் எல்லா செடிகளிலும் தன் இருப்பை உறுதிப்படுத்தி செல்லும். தடையங்கள் மட்டும் மாறிக்கொண்டே இருக்கும். நினைவு ஓடையில் வரும் சில நினைவுக் குறிப்புகள் மட்டும் இங்கே. 

Loading

சமூக ஊடகங்கள்

இராவணண்

இராவணண் பற்றி சில செய்திகள். அவன் மிகப் பெரிய சிவ பக்தன் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். அவனது கொடி முத்திரை என்ன தெரியுமா? வீணை. அரக்கனாக இருந்தும் மிகப் பெரிய/கடினமான இசைக் கருவியை தன் கொடியாக உடையவன். அவனுக்கு பத்து தலை என்பது உருவமாகப் படுகிறது. பத்து விஷயங்களை ஓரே நேரத்தில் செய்பவர்களை தசாவதானி என்று அழைப்பார்கள். அப்படிதான் தோன்றுகிறது. வரலாற்றுப் பதிவுகளில் சில சதாவதானிகள்(நூறு விஷயங்களை ஓரே நேரத்தில் செய்பவர்கள்) இருக்கிறார்கள்.

மீண்டும் தியானிப்போம்.

Loading

சமூக ஊடகங்கள்

காளிங்க நர்த்தனம்

கண்ணன் பற்றி மற்றொரு சிந்தனை.

கண்ணன் மடுவில் சென்று காளிங்க நர்த்தனம் செய்தான் என்று செய்திகள்.
ஆறு,
காளிங்கன் பாம்பு – 5 தலை நாகம்.

இது யோக மார்க்க உருவமாக படுகிறது.
கண்ணன் மிகப் பெரிய யோகி.
இக லோக வாழ்க்கையில் பஞ்ச இந்திரியங்களை வெல்லுவதாகப் படுகிறது.

மீண்டும் சிந்திப்போம்.

Loading

சமூக ஊடகங்கள்

கண்ணன்

வினாயகரைப் பற்றி எழுத வேண்டும் என்ற தோன்றியது. பின் வினாயகரால் எழுத்தப்பட்ட மகாபாரத்தில் இருந்து தொடங்க எண்ணம்.

கண்ணனை கடவுளாக காண்பதை விட மிகப் பெரிய திட்ட வல்லுனராகவே நான் காண்கிறேன். இது கதை, இது நிஜம் என்பதல்ல நோக்கம். பஞ்ச இந்திரியங்கள். ஒரு மனம். ஒரு ஆத்மா இவற்றின் உருவகமாகத்தான் பஞ்ச பாண்டவர்கள். கிருஷ்ணை மற்றும் கண்ணன்.

96 வகைத் தத்துவத்திற்கும்(சைவ சித்தாந்தக் கருத்துப்படி), 4 வகை செயல்களான மனம், சித்தம்,புத்தி மற்றும் அகங்காரம் ஆக 100.  இவற்றின் உருவகமாக துரியோதனாதிகள்.

மீண்டும் தியானிப்போம்.

Loading

சமூக ஊடகங்கள்
error: Content is protected !!