ஒலிக் குறிப்புகள்

மெட்டி ஒலி என் நெஞ்சை காதொடு தாலாட்ட ..

மூன்று பெண்கள் பேசிக் கொண்டே நடக்க துவங்குகிறார்கள். மெல்லியதாய் humming  ஆரம்பிக்கிறது. இந்த humming விஷயங்கள் தற்கால படங்களில் அரிதாகவே காணப்படுகின்றன. (உ.ம் – திருமலை – அழகூரில் )

மிக சாதரண நடுத்தர வர்க்கத்தின் நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கைவீசி நடத்தல், குடத்தில் முகம் பார்த்தல், விரும்பி சுவைக்கும் கடலையில் வீணானதை துப்புதல்.

சொல்ல முடியா சுகம் கொண்டிருக்கும் இறந்த காலத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது.

மறந்து போன பழைய தலைமுறையின் சந்தோஷங்களை மீட்டுக் கொண்டுவருகிறது.

காலம் எல்லா காயங்களையும் ஆற்றி விடும் ஆற்றல் உடையது. இசை அதனினும் ஆற்றல் உடையதாய் இருக்கிறது.

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *