சித்த(ர்)த் துளிப்பு – 25-Nov-2020


பாடல்

சும்மா இருந்துவிடாய் அகப்பேய்
சூத்திரஞ் சொன்னேனே
சும்மா இருந்தவிடம் அகப்பேய்
சுட்டது கண்டாயே

அருளிய சித்தர் : அகப்பேய்ச் சித்தர்

பதவுரை

மனமாகிய பேயே! மனம், மொழி, காயம் ஆகியவை விட்டு மௌனம் பற்றி நிற்கும் இடம் சுட்டி உணர்த்தப்பட்டதைக் கண்டாயே, இதுவே உனக்கான சூத்திரம் என்று சொன்னேன். அதை கேட்டு மறந்துவிடாமல் இருப்பாயாக.

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 20-Nov-2020


பாடல்

அத்தி வரைவாடி அகப்பேய்
ஐம்பத்தோ ரட்சரமும்
மித்தையாங் கண்டாயே அகப்பேய்
மெய்யென்று நம்பாதே

அருளிய சித்தர் : அகப்பேய்ச் சித்தர்

பதவுரை

மனமாகிய பேயே! உலகில் பிறப்பெடுத்து சித்தர் பெருமக்களால் விவரிக்கபடுவதான ஐம்பத்து ஓர் அட்சரம் கண்ட பின் மரணித்தாலும் அதனை மெய் என்று நம்பிவிடாதே.

சமூக ஊடகங்கள்