மகேசுவரமூர்த்தங்கள் 16/25 காமாரி
வடிவம்(பொது)
· உருவத் திருமேனி
· கிழக்கு முகமான தத்புருஷத்தில் இருந்து தோன்றிய வடிவம்
· அழித்தல் தொழிலுக்குரியவர்
· உமையவள் அற்று தனித்த வடிவம்
· இடக்காலை மடித்து
· வலக்காலைத் தொங்கவிட்டு
· வலக்கை அபய முத்திரை
· இடக்கையை மடக்கிய கால் மீது வைத்து அமர்ந்த நிலை
· காமனை எரித்து தகனம் செய்ததால் காம தகன மூர்த்தி
· யோகத்தில் வெல்ல காமதகனம் அவசியம் என்பதை சூட்சமாய் உணர்த்தும் வடிவம்
· மன்மதன் தேவபாகன் வசந்தன் என்ற இரு நண்பர்களோடு கூடியதாகவோ அல்லது இல்லாமலோ இருப்பார்.
· மன்மதனின் ஐந்து சரங்கள் லிம்பனி, டாபினி, வேதினி, திராவினி, மாலிநி, என்ற ஐந்து விதமாக அமைக்கலாம்.
· சுத்தமான தங்கத்தை போல் பிரகாசித்துக் கொண்டு ஐந்து புஷ்ப பாணங்கள் கரும்பு வில்லோடு கூட மீன் கொடியோடு கூடிய மன்மதன்
· மாரினீ என்ற அம்புகள் , வில்லை இடது கையிலும் அம்புகளை வலது கையில் வைத்திருக்கும் வடிவமாக மன்மதன்.
வேறு பெயர்கள்
· காமதகன மூர்த்தி
· சக்தி ”மோகவிக்நவிநாசினி”
· காம அந்தக மூர்த்தி
காமனைக் காய்ந்தான்
காமனைக் காய்ந்தான்
வடிவம் அமையப் பெற்ற திருக்கோயில்கள்
· குறுக்கை, மயிலாடுதுறை
· கங்கைகொண்ட சோழபுரம்
· மீனாட்சி அம்மன் கோவில், மதுரை
· திருவைகாவூர், சுவாமிமலை
இதரக் குறிப்புகள்
1.
நிலத்துளங்க மேருத் துளங்க நெடுவான்
தலத்துளங்கச் சப்பாணி கொட்டும் – கலந்துளங்கொள்
காமாரி ஈன்ற கருங்கைக் கடதடத்து
மாமாரி ஈன்ற மணி.
2.
கரிபு ராரி காமாரி திரிபு ராரி தீயாடி
கயிலை யாளி காபாலி …… கழையோனி
திருப்புகழ் 577 கரிபுராரி காமாரி (விராலிமலை)
3.
“காமாரி காமாம் கமலாஸனஸ்தாம்” – காமாக்ஷி ஸ்தோத்திரம். ‘மாரனை ஜெயிச்ச மஹேஸ்வரனையும் உன் சௌந்தரியம் மயங்கச் செய்கிறதே’
4.
பஞ்சாட்சர சக்திகளின் சூட்சுமங்களை உணர்த்தும் சூக்குமப்பஞ்சாட்சர தீட்சை வரிசையில் ய வ சி ம ந என்று அறியப்படும்.
5.
உத்தரகாமிக மஹாதந்திரத்தில் காலாரி பிரதிஷ்டை முறையில் விவரிக்கப்பட்டுள்ளது.
புகைப்படம் : இணைய தளம்