அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – சீயன்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  சீயன்

பொருள்

  • திருமால்
  • செல்வன்
  • மூன்றாம் பாட்டன் / குரு
  • ஒரு நாடு

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

சீயனம் போதி யெனவாய் புதைத்துச் செவித்தரத்தோல்
சீயனம் போதி யமலையிற் றாதை சிறுமுநிவன்
சீயனம் போதி கடைந்தான் மருகன்செப் பத்திகைத்தார்
சீயனம் போதி லரனா திருக்கென் செயக்கற்றதே

சொற்பிரிவு

சீயன் நம் பொதி என வாய் புதைத்து செவி தர தோல்
சீய நம்பு ஓதிய மலையின் தாதை சிறு முனிவன்
சீயன் அம்போதி கடைந்தான் மருகன் செப்ப திகைத்தார்
சீ அனம் போதில் அரன் ஆதி ருக்கு என் செயக் கற்றதே.

கந்தர் அந்தாதி – அருணகிரிநாதர்

கருத்து உரை

பார்வதியினை ஒரு பாகத்தில் உடைய சிவபெருமான் ‘நமக்கு உபதேசம் செய்வாய்’ என்று கேட்டு பணிவுடன் வாயை மூடிக்கொண்டு காதால் கேட்க, யானைகளும், சிங்கங்களும், தஞ்சமாக உறைகின்றதும் கல்வி ஒழுக்கத்திற்கு இருப்பிடமாகிய பொதிக மலைக்கு தலைவனாகிய அகத்திய முனிவனின் குருவானவரும், பாற்கடலை கடைந்தவனாகிய திருமாலின் மருகனாகிய குமரக் கடவுள் அப்போது உபதேசம் செய்ய, அன்னத்திலும் தாமரையிலும் இருக்கும் மிகவும் இழிவு தர தக்கதாகிய பிரம்மன் திகைத்து பழமையான வேதத்தை எதற்காக கற்றுக் கொண்டான்?

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – கொளுவுதல்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  கொளுவுதல்

பொருள்

  • கொள்ளச்செய்தல்
  • தீமூட்டுதல்
  • பூட்டுதல்
  • தூண்டிலிடுதல்
  • அகப்படுதல்
  • மிதியடிமுதலியனஅணிதல்
  • வேலையில்அமர்தல்
  • சிக்குதல்
  • தந்திரஞ்செய்தல்
  • குடல்தூக்கிகொள்ளதல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

உடையவர்க ளேவ ரெவர்களென நாடி
   யுளமகிழ ஆசு …… கவிபாடி
உமதுபுகழ் மேரு கிரியளவு மான
   தெனவுரமு மான …… மொழிபேசி
நடைபழகி மீள வறியவர்கள் நாளை
   நடவுமென வாடி …… முகம்வேறாய்
நலியுமுன மேயு னருணவொளி வீசு
   நளினஇரு பாத …… மருள்வாயே
விடைகொளுவு பாகர் விமலர்திரி சூலர்
   விகிர் தர்பர யோகர் …… நிலவோடே
விளவு சிறு பூளை நகுதலையொ டாறு
  விடவரவு சூடு …… மதிபாரச்
சடையிறைவர் காண உமைமகிழ ஞான
  தளர் நடையி டாமுன் …… வருவோனே
தவமலரு நீல மலர்சுனைய நாதி
  தணிமலையு லாவு …… பெருமாளே.

திருப்புகழ் (திருத்தணிகை) – அருணகிரிநாதர்

 

கருத்து உரை

ரிஷபத்தை வாகனமாகப் பூட்டிச்  செல்பவரும், குற்றமற்றவரும், தூயவரும், திரிசூலத்தை ஏந்தியவரும், மிக உயர்ந்தவரும், மேலான யோகம் படைத்தவரும், பிறைச்சந்திரன், வில்வத் தளிர், சிறிய பூளை / தேங்காய்ப்பூக் கீரை / சிறுபீளை என்று அழைக்கப் பெறும் பூளாப்பூ, பற்களுடன் கூடிய மண்டையோடு, இவற்றோடு கங்கை ஆறு, விஷப்பாம்பு ஆகியவற்றைத் தரித்துள்ள மிகுந்த பாரமான ஜடாமுடியுடைய சிவபெருமான் கண்டு களிக்கவும், உமாதேவி பார்த்து மகிழவும், ஞானத் தளர் நடையிட்டு அவர்கள் முன்னே வருபவனே, மிகுத்து மலரும் நீலோத்பலப் பூக்கள் உள்ள சுனையுடையதும், ஆதியில்லாததுமான மிகப் பழைய திருத்தணிகை மலை மீது உலாவும் பெருமாளே,  செல்வம் படைத்தவர்கள் எவர் எவர்கள் என்று தேடி, அவர்கள் மனம் மகிழுமாறு அவர்கள் மீது எதுகை மோனையுடன் கூடிய ஆசுகவிகளைப் பாடி, ‘உன்னுடைய புகழ் மேருமலை அளவு உயர்ந்தது’ எனக் கூறியும், அவர்களை வலிமையான புகழ்ச்சி மொழிகளைப் பேசியும், பல முறை நடந்து பலநாள் போய்ப் பழகியும், அவர்கள் தனம் ஈயாததால் தரித்திரர்களாகவே மீண்டு, ‘நாளைக்கு வா’ என்றே கூற, அதனால் அகம் வாடி,முகம் தனது களை இழந்து, வருந்தும் முன்னதாகவே, உனது சிவந்த ஒளி வீசுகின்ற தாமரை போன்ற இரு பாதங்களையும் தந்தருள்வாயாக.

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

இறைவன் சச்சிதானந்தமாய் இருத்தல் என்ன இயல்பு?
சிறப்பு இயல்பு(சொரூப இலக்கணம்)

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – மாடை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  மாடை

பொருள்

  • பொன்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

மக மாயை களைந்திட வல்ல பிரான்
முகம் ஆறும் மொழிந் தொழிந்திலனே
அகம் மாடை, மடந்தையர் என்(று) அயரும்
சகமாயையுள் நின்று தயங்குவதே.

கந்தர் அனுபூதி – அருணகிரிநாதர்

கருத்து உரை

மிகப் பெரியதான வலிமைமிக்க மாபெரும் மாயைகளை எல்லாம் நீக்க வல்லவராக முருகப் பெருமான், தன் அறுமுகத்தில் இருக்கும் ஆறு வாயினால் உபதேசங்களை தந்து அருளிய போதிலும், வீடு, பொன் (செல்வம்), மாதர் என்று இவைகளை எப்பொழுதும் நினைத்து சோர்வு அடையச் செய்கிற உலக மாயைக்குள் கிடந்து கலங்குவதை நான் இன்னும் விடவில்லையே.

விளக்க உரை

  • முருகப் பெருமான் தன்னுடைய திருவாக்கால் ஷடாச்சர உபதேசம் செய்தும் நான் தேறவில்லையே என்கிறது மற்றுமொரு உரை.
  • ‘எனக்கு சம்சார மாயை நீங்கவில்லையே’ என பொருள் கொண்டால் முருகனின் பரதத்துவத்திற்கு இழுக்கு ஏற்படும் என்றும் உபதேசம் செய்தவர் எப்படிப்பட்டவர், செய்த உபதேசம் எப்படிப்பட்டது என்பதின் தரமே குறைந்துவிடும் என்று சில குறிப்புகளில் காணப்படுகிறது. அருளாளர்களின் பாடல்கள் அனைத்தும் அவர்களுக்காக எழுதப்பட்டவை அல்ல. சாதாரணமாக இருக்கும் கடை நிலை மனிதர்களின் நிலையில் இருந்து அவர்கள் உய்வதன் பொருட்டு எழுதப்பட்டவை.

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

மூவகை அளவைகள் எவை?
காட்சி, கருதல், உரை

Loading

சமூக ஊடகங்கள்