குருவும் தற்போதமும் – 5

புகைப்படம் : திரைப்பட இயக்குநர் திரு.ஐயப்ப மாதவன் அவர்கள்

வசதிக்காக

குரு நாதர் (தமிழக அரசின் மிகப் பெரிய பதவியில் இருப்பவர்)
குரு நாதரின் குரு – ஆதி மூர்த்தி

பல நாட்களுக்கு முன்

ஒரு முறை எம் குரு நாதரும், ஆதி மூர்த்தியும் காசியில் கோயிலுக்கு சென்றார்கள்.

ஆதி மூர்த்தியின் உருவம் கண்டு எப்பொழுதும் இடையன் ஒருவன் அவரை எப்பொழுதும் திட்டிக் கொண்டே இருப்பான். இடையனின் மனைவி மிகுந்த பக்தி கொண்டவள்.

சில நாட்களுக்கு முன்

ஆதி மூர்த்தி எம் குரு நாதரை அழைத்து ‘போகலாமா’
..
அதே தான் எப்பொழுதும் நம்மைத் திட்டிக் கொண்டே இருப்பானே, அந்தத் தெரு வழியாக செல்ல வேண்டும்.

வழக்கம்போல் அவன் திட்டிக் கொண்டே இருந்தான்.

அந்தத் தெருவழியே கடந்து சென்ற குரு நாதரும், ஆதி மூர்த்தியும் திரும்பி வந்தார்கள்.

ஆதி மூர்த்தி : உன் வீட்டில் பசு கன்று ஈன இருக்கிறதா?
இடையன் பதில் சொல்ல வில்லை.
ஆதி மூர்த்தி : உன் பசு ஒரு கன்று ஈன இருக்கிறது. அது வெண்மை நிறம் கொண்டதாக இருக்கும். அதன் பிறப்பிற்குப் பின் உன் நிலை மாறும்.

சில வருடம் சென்றப்பின் குரு நாதரும் ஆதி மூர்த்தியும் அந்த வழியே சென்றபோது வீடு செல்வம் படைத்தவர்களின் வீடாக மாறி இருந்தது.

இடையன் ஆதி மூர்த்தியை வந்து வணங்கினான்.

ஆதி மூர்த்தி : இனியாவது சந்நியாசிகளை வைது கர்மாக்களை ஏற்றிக் கொள்ளாதே என்று உபதேசித்து அவ்விடம் அகன்றார்கள்.
(குரு நாதர் உத்தவிற்குப்பின் எழுதப்பட்டது.)

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *