அமுதமொழி – விளம்பி – சித்திரை – 2 (2018)

பாடல்

சூக்கும வாக்க துள்ளோர் சோதியாய் அழிவ தின்றி
ஆக்கிடும் அதிகா ரத்திற் கழிவினை தன்னைக் கண்டால்
நீக்கமில் அறிவா னந்தம் முதன்மைநித் தியமு டையத்தாய்ப்
போக்கோடு வரவி ளைப்பும் விகாரமும் புருட னின்றாம்.

திருநெறி 2 – சிவஞான சித்தியார்

பதவுரை

தான் அழிவது மட்டும் அல்லாமல், தனது தன்னதிகாரத்திற்கும் அழிவை உண்டாகும் சிவதத்துவமான சுத்த மாயையின் வழியில் வினைகள் முற்றிலும் அழிக்கப்பட்ட பிறகே ஆராய்வதற்கு எதும் இல்லாமலும், காட்சி அளவை எவ்வாறு இயல்பானதோ அது போல அதி சூக்கும வாக்கினை உடையவன் தன்னைக் கண்டு இனி புறக்காட்சி இல்லை எனும் நிலையில்,  குண சரீரம், கஞ்சுக சரீரம், காரண சரீரம் ஆகிய இம்மூன்றன் தொகுதி ஆன பர சரீரம் அல்லது அதி சூக்கும சரீரத்தின் உள்ளே விளங்கும் நாதத்திற்கு இலக்கணத்தையுடையதுமான சூக்கும வாக்கானது தன்நிலை அழிந்தப்பின் பைசந்தி, மத்திமை, வைகரியாய் வெளிப்படும். பெரும் தவத்தினால் அதனை அனுபவ வாயிலாக காணப்பெறுவார்க்குச் சுத்தமாயா புவனத்தின் கண் எனப்படும் அபரமுத்தி இயல்பாக உண்டாகும்.

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

யோக வடிவம் என்பது என்ன?
தட்சிணா மூர்த்தி போல் உயிர்களுக்கு ஞானத்தை வழங்கும் திருமேனி

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *