‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – போந்த
பொருள்
- தகுந்த
- பழகின
- தீர்மானமான
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
வேதியர் விண்ணவரும் மண்ணவ ரும்தொழநற்
சோதிய துருவாகிச் சுரிகுழ லுமையோடும்
கோதிய வண்டறையுங் கூடலை யாற்றூரில்
ஆதிஇவ் வழிபோந்த அதிசயம் அறியேனே
தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்
கருத்து உரை
வேதங்களைப் பின்பற்றி நடப்பவராகிய அந்தணரும், விண்ணில் வாழும் தேவரும், மனிதர்களும் வணங்கி தொழுது நிற்க, நல்ல ஒளி உருவமாய், சுருண்ட கூந்தலையுடைய உமாதேவியோடும், பூக்களில் உறையும் வண்டுகள் ஓசையைச் செய்கின்ற திருக்கூடலையாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற முதல்வன், இந்த வழியே என்முன் வந்த வியத்தகு செயலை அடியேன் அறியாதே ஒழிந்தேன்; இஃதே என்னே ஏழ்மை!
துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை
படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்கள் எதனிடத்தே செய்யப்படுகின்றன?
மாயை ஆகிய சடப் பொருளில்