அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – சேணி

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  சேணி

பொருள்

  • ஏணி
  • விஞ்சயர் உலகம்
  • வித்தியாதரர் உலகு
  • குழு

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

செப்பத் தமதிலை மாற்றார் கொளுமுன்னங் செல்வர்க்கிடச்
செப்பத் தமதிலை யெங்ஙனுய் வார்தெய்வ வேழமுகன்
செப்பத் தமதிலை வாணுத னோக்கினர் சேணில்வெள்ளிச்
செப்பத் தமதிலை வென்றார் குமாரவத் திக்கரசே

கந்தர் அந்தாதி – அருணகிரிநாதர்

கருத்து உரை

தெய்வீகமாகிய யானை முகம் கொண்டவ வினாயகர் புகழ்ந்து பேசிய தம்பியே, ஒளி பொருந்திய நெற்றியில் முன்றாவது கண்ணை உடையவரும், ஆகாசத்தில் வெள்ளி செம்பு தங்கமான  மதிலை உடைய திரிபுரத்தை ஜெயித்த ஈசனின் மைந்தனே, தில்லை நடேசனராகிய சிவனின் குமாரனே, தெய்வயானை மணாளனே, செல்வமுடையார் அது நிலையாக இருக்காது என்பதைத் தெரிந்து கொண்டு தானதர்மங்களைச் செய்யாவிடில் எப்படிக் கடைத்தேறுவார்கள்?

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

படைத்தல் என்பது என்ன?
உயிருக்கு தனு, புவன, போகங்களை உண்டாக்கும் தொழில்.

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *