அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – மகோதரம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  மகோதரம்

பொருள்

  • பூதம்
  • பெருவயிற்று நோய் – வயிறு வீக்கம்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

பாரப்பா பனிரெண்டு மூன்றாரெட்டில்
பலமுள்ள அசுரகுரு அதனில் தோன்ற
வீரப்பாவிதிகுறைவுவெதர்நோய்வாதம்
விளங்குகின்ற செம்பொன்னும்மனையும் நஷ்டம்
கூறப்பா குழவிக்கு மகோதரமும் பாண்டு
கொற்றவனே குன்மமொடு சயமும்சோகை
சீரப்பா ஈராறில் சுங்கன் ஆட்சி
சிவசிவா சயனசுகம் யோகஞ்சொல்லே

புலிப்பாணி ஜோதிடம்

கருத்து உரை

ஒருவனுக்கு லக்னத்தில் இருந்து 12,3,6,8 ஆகிய இடங்களில் அசுர குருவான சுக்கிரன் பலமுடன் சஞ்சாரம் செய்யும் போது,  அவர்களுக்கு ஆயுள் குறைவதுடன், பீசத்தில் நோயுறுதலும்,வாதநோயும் ஏற்படும்; மிகவும் சிறப்பு பெற்ற செம்பொன் மற்றும் வாழும் மனையும் நஷ்டமாகும்; மேலும் வயிறு வீக்கம், பாண்டு எனப்படும் காமாலை மற்றும் நீர்க்கோவை, குன்மம், சயம், சோகை ஆகிய நோய்களும் ஏற்படும்; ஆயினும் 12ஆம் இடத்தில் சுக்கிரன் ஆட்சி பெற்றால் சிவன் பேரருளால் சயன சுகமும் நல்ல யோகமும் ஏற்படும் எனக் கூறுவாயாக.

விளக்க உரை

  • சுக்கிரன் இலக்கினத்திலிருந்து 12,3,6,8 ஆகிய இடங்களில் அமரப் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கும் பாடல்

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *