‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ – திரிகை
பொருள்
- அலைகை
- எந்திரம்
- குயவன் சக்கரம்
- இடக்கை மேளம்
- கூத்தின் அங்கக்கிரியை வகை
- முந்திரி, கொடிமுந்திரி
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
நேர்தரு மந்திர நாயகி யானவள்
யாதொரு வண்ணம்? அறிந்திடு பொற்பூவை
கார்தரு வண்ணம் கருதின கைவரும்
நார்தரு வண்ணம் நடந்திடு நீயே.
திருமந்திரம் – நான்காம் தந்திரம் – திருமூலர்
கருத்து உரை
வழிபடுவார்க்கு நேரில் வந்து அருள் புரிகின்றவளும், அழகிய தேவி ஆனவளும் ஆகிய அந்த நவாக்கரி சக்கர சத்தி என்ன நிறத்தை உடையவள் எனில், மழை தரும் மேகம் போன்ற நிறத்தை உடையவள். இதனை அறிந்து அவள்பால் உனது அன்பினை செலுத்தி அவ்வண்ணம் நீ நட; அப்பொழுது நீ மனதால் நினைத்தவை எல்லாம் உனக்குக் கைகூடும்.
விளக்க உரை
- இச்சக்கரத்தின் தியானவண்ணம் கூறும் பாடல்.
- திரிகை என்பது கடைக்குறைந்து ‘தரு’ என நின்றது
துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை
இறைவன் உயிருக்கு வேறாய் நிற்கும் நிலைக்கு பெயர் என்ன?
பேதம்