‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ – பரம்
பொருள்
- மேலானது
- திருமால்நிலை ஐந்தனுள் ஒன்று –முதல் நிலை
- கடவுள்
- மேலுலகம்
- திவ்வியம்
- மோட்சம்
- பிறவி நீக்கம்
- முன்
- மேலிடம்
- அன்னியம்
- சார்பு
- தகுதி
- நிறைவு
- நரகம்
- பாரம்
- உடல்
- கவசம்
- கேடகவகை
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
படைத்துடை யான்பண் டுலகங்கள் ஏழும்
படைத்துடை யான்பல தேவரை முன்னே
படைத்துடை யான்பல சீவரை முன்னே
படைத்துடை யான்பர மாகிநின் றானே.
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
கருத்து உரை
சிவபெருமான், இவ்வாறு பல உலகங்கள் பலவற்றையும் படைத்து, பிறவாமையால் அமரர் எனும் பொருள் பற்றி நிற்கும் தேவர்களையும் படைத்து, தேவர் ஒழிந்த பிற உயிர்களையும் படைத்து,அவற்றுள் சித்துப்பொருளை அடிமைகளாகவும், சடப் பொருளை உடைமைகளாகவும் கொண்டு தான் தலைவனாய் நின்று அவை அனைத்தையும் ஆள்கின்றான்.
விளக்க உரை
- உயிர்கட்குப் பந்தமும், வீடும் தருதலும் அவனுக்குக் கடனாதல் என்பது பற்றி கூறப்பட்டப் பாடல்
- ‘அடிமைகளாகிய உயிர்கட்கு, வேண்டும் காலத்து வேண்டுவனவற்றைத் தருதல் அவனுக்குக் கடன்` என்பது குறிப்பு.