ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ – வெஞ்சம்
பொருள்
- வஞ்சம்
- பழி
- சினம்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
அஞ்சுமுகம் தோன்றில்
ஆறு முகம்தோன்றும்;
வெஞ்சமரில் அஞ்சல்என
வேல்தோன்றும் ;- நெஞ்சில்
ஒருகால் நினைக்கில்
இருகாலும் தோன்றும்;
முருகா என்று ஒதுவார் முன்
திருமுருகாற்றுப்படை – நக்கீரர்
கருத்து உரை
‘முருகா’ என்று ஓதுவார் மனதில் எப்பொழுதாவது அச்சம் வந்து தோன்றும் போது ஆறுமுகம் தோன்றும்; கடுமையான மனப் போராட்டத்தில் இருக்கும் போது ‘அஞ்சேல்’ என்று வேல் தோன்றும்! மனதில் ஒரு பொழுது நினைத்தால் அவனது திருத் தாள் தோன்றும்.
விளக்க உரை
- எண்ணலங்காரம் சார்ந்தது இப்பாடல் – ஐந்து முகம், ஆறுமுகம், ஒருக்கால், இருக்கால்
- அஞ்சு முகம் (ஈசானம், தத்புருடம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம்) எனும் சிவ பெருமானின் ஐந்து முகம் தோன்றும் பொழுதினில் மேல் குறிப்பிட்ட ஐந்து முகங்குகளுடன் ஆறாவது முகமாகிய அதோமுகமும் உடைய முருகப் பெருமான் தோன்றுவான். (சடாட்சரம் என்று பொருள் கொள்வாரும் உண்டு). அஃதாவது சிவபெருமான் இருக்கும் இடத்தில் எல்லாம் முருகப் பெருமான் சிவ வடிவமாகத் தோன்றுவான்!
- யோக மார்க்கம் முறைப்படி
- சிவ வடிவம் கண்ணுறும் போது ஆறு ஆதார நிலைகளும் காட்சி பெறும்.
- வாசியினை கால் என்று அழைப்பது சித்தர் மரபு. சுழுமுனை (ஒரு கால்) வழியாக வாசி செல்லும் போது திருத்தாள் (இரு கால்) காட்சி தோன்றும்.
துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை
காட்சி அளவையின் வேறு பெயர்கள் என்ன?
பிரத்தியட்சப் பிரமாணம், காண்டல் அளவை