ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – செப்புதல்
பொருள்
- சொல்
- விடை
- செம்பு
- சிமிழ்
- நீர்வைக்கும்குடுவை
- சிறுமியர்விளையாட்டுப்பாத்திரம்
- இடுப்பு
வாக்கிய பயன்பாடு
நீ செப்புற எதுவுமே காதுல ஏறல.
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
ஓரில் இதுவே உறையும் இத் தெய்வத்தைத்
தேரில் பிறிதில்லை யானொன்று செப்பக்கேள்
வாரித் திரிகோணம் மாவின்ப முத்தியும்
தேரில் அறியும் சிவகாயந் தானே.
திருமந்திரம் – 10ம் திருமுறை – திருமூலர்
கருத்து உரை
யான் உனக்கு ஒரே முடிவைச் சொல்லுகின்றேன்; கேள்; முடிவான உண்மையை ஆராயுமிடத்து மேற்கூறிய பதினைந்தெழுத்து மந்திரமே(`க, ஏ, ஈ, ல, ஹ்ரீம்ஹ, ஸ, க, ஹ, ல, ஹ்ரீம்,ஸ, க, ல, ஹரீம்` ) மந்திரங்களில் முதன்மையாயது. இம்மந்திரத்திற்கு உரிய தேவியின் பெருமையை ஆராந்தால் இவளையன்றித் தெய்வம் வேறில்லை என்பதை அறியலாம். இம்மந்திரத்தைக் கொண்ட `ஸ்ரீசக்கரம்` எனப் படுகின்ற முக்கோணச் சக்கரமே பேரின்பமாகிய வீட்டின் கடலாகவும் விளங்கும். ஸ்ரீசக்கரமே மெய்யுணர்ந்தோர் காணும் சிவன் சரீர வடிவாகிய சிதாகாசமாம்.
விளக்க உரை
- மேலே கூறப்பட்ட மந்திரத்தின் சிறப்பும், அதனோடு தொடர்புடையவற்றின் சிறப்பினையும் விளக்கும் பாடல்.
துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை
புற சந்தானத்தின் வேறு பெயர் என்ன?
பூதப்பரம்பரை