ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – மூங்கை
பொருள்
- ஊமை
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
வாக்கும் மனமும் இரண்டும் மவுனமாம்
வாக்கு மவுனத்து வந்தாலும் மூங்கையாம்
வாக்கும் மனமும் மவுனமாம் சுத்தரே
ஆக்கும்அச் சுத்தத்தை யார்அறி வார்களே
திருமந்திரம் – 7ம் தந்திரம் – திருமூலர்
கருத்து உரை
வாக்கு, மனம் என்னும் இரண்டாலும் மௌனமாக இருத்தலே `மௌனம்` என்பதற்குப் பொருளாகும். `அவ்வாறு இல்லாமல் மனம் எவ்வாறு செயற்பட்டாலும் வாக்கு மட்டும் செயற்படாது இருத்தல்தான் மௌனம் எனக் கூறினால் உலகில் ஊமைகளாய் உள்ளார் யாவரும் மௌன நோன்பு மேற்கொண்டவர்களாக ஆகி விடுவர். வாக்கு, மனம் என்னும் இரண்டும் அடங்கிய தூய நிலையே `சுத்த நிலை` எனப் படுகின்ற வீடுபேற்றைத் தரும். அந்த உண்மையை அறிகின்றவர் யாவர்?