அமுதமொழி – விளம்பி – ஆடி 7 (2018)

பாடல்

தன்னை வியப்பிப்பான் தற்புகழ்தல் தீச்சுடர்
நன்னீர் சொரிந்து வளர்ந்தற்றால் – தன்னை
வியவாமை அன்றோ வியப்பாவது! இன்பம்
நயவாமை அன்றோ நலம்

நீதிநெறி விளக்கம் – குமரகுருபரர்

பதவுரை

மற்றவர்கள் மூலமாக பிறர் வியக்கும்படித் தன்னை புகழ்ந்து பேசும்படி செய்யும்  செயலானது, எரியும் நெருப்பில் தண்ணீரை ஊற்றி வளர்ப்பது போன்றது. தன்னைத் தான் வியக்காமல் இருப்பதுதான் வியப்புக்கு உரித்தான ஒன்றாகும். எனவே அவ்வாறான் புகழ் இன்பத்தைத் விரும்பிச் செல்லாமைதான் நலம் பயக்கும்.

விளக்க உரை

  • தானே தன் புகழைக் கூறச் செய்தல் குற்றம் என்று கூறும் பாடல்.

Loading

சமூக ஊடகங்கள்