அமுதமொழி – விளம்பி – வைகாசி – 4 (2018)

பாடல்

நிலத்துக்கு மேலாறு நீடுலகத் துச்சித்
தலத்துக் மேலேதா னென்பர் சொலத்தக்க
சுத்தர்கள் சேர்காழிச் சுரன்ஞான சம்பந்தன்
பத்தர்கள்போய் வாழும் பதி

ஆளுடையபிள்ளையார் திருமும்மணிக்கோவை – நம்பியாண்டார் நம்பிகள்

பதவுரை

திருஞானசம்பந்தரின் அடியவர்கள் சென்று வாழும் பதியானது, பூவுலகம் மேல் இருக்கும்  ஆறு நிலையான உலகங்களான, சூரிய சந்திர நட்சத்திர மண்டலங்களையுடைய புவர் லோகம் எனும்  சுடர் உலகத்தில் வாழ்பவர்களும், இந்திராதி தேவர் வாழ் உலகமாகிய சுவர் லோகத்தில்  வாழ்பவர்களும், மரீசி முதலிய மகான்கள் வாழும் உலகமாகிய மக லோகத்தில் வாழ்பவர்களும், சன்னு முதலிய பொது ஞானியர் வாழும்  சன லோக உலகத்தில் வாழ்பவர்களும், சனகர் முதலிய சிறப்பு ஞானியர் வாழும்  தவ லோகத்தில் வாழ்பவர்களும், பிரம்ம தேவனுடைய உலகமாகிய சத்திய லோகம், திருமாலினுடைய வைகுந்தம் மற்றும் இவற்றிற்கெல்லாம் மேலே உள்ள சீகண்டருத்திரர் உலகம் எனும் சிவலோக சிறப்பித்துச் சொல்லத் தக்க சுத்தர்கள் எனப்படுவோராகிய மலம் நீங்கிய தூயோர், முத்தர்கள், பல ஊழி காலமாக உச்சித் தலத்துக்கு மேலும் அவைகளுக்கு அப்பால் என்று சொல்லும் மெய்யுணர்ந்தோர் கூறுவார்கள்.

விளக்க உரை

  • 19-May-2018 : நம்பியாண்டார் நம்பிகள் குரு பூஜை ( வைகாசி பூராடம்)

Loading

சமூக ஊடகங்கள்