பாடல்
எவ்வுருவில் யாரொருவர் உள்குவார் உள்ளத்துள்
அவ்வுருவாய்த் தோன்றி அருள்கொடுப்பான் எவ்வுருவும்
பதினொன்றாம் திருமுறை – சேரமான்பெருமாள் நாயனார் – திருக்கயிலாய ஞானஉலா
பதவுரை
(அவரவர் வினைப்பயன் கொண்டு) எவர் எந்த உருவத்தில் வைத்து உள்ளத்தில் இடை விடாது நினைக்க்கின்றார்களோ, அவர்களுக்கு அந்த நினைப்பு உருவமாய்த் தோன்றி அந்த வழியில் அருள் ஈந்து ஆட்கொள்ளும் தன்மை உடையவன் சிவபெருமான்.
விளக்க உரை
- உள்குதல் – உள்ளுதல், நினைத்தல், உள்ளழிதல், மடிதல், நினைதல், ஆராய்தல், நன்கு மதித்தல், மீண்டும் நினைத்தல், இடைவிடாது நினைத்தல்.
- எந்த உருவத்தையும் தனது உருவமாகவே கொண்டு அருள்புரிகின்ற சிவபெருமான் பிறர், இவ்வாறு அந்த உருவமாய் நிற்பதை எவரும் காணத நிலையை உடையவன்.
- எனவே உயிர்வர்க்கத்தினர் அனைவரும் ‘பசு’ எனவும், சிவபெருமானே அனைவர்க்கும் தலைவனாகிய ‘பதி’ எனவும் விளக்கம் பெறப்படும்
துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை
சிவனுக்கு உரிய வாமதேயம் எந்த உறுப்பு?
உந்தி