அமுதமொழி – விளம்பி – சித்திரை – 28 (2018)

பாடல்

சக்கரமாய் மேலெழுந்து, சலந்திரனைக் கடிந்து
    தலையறுத்து யிரத்தமுண்டு நமஸ்கரித்த அப்பால்
அக்கணமே அறிந்து அரி சிவனைப் பூஜித்தான் 
    அம்புயக்கண் ணோடேஅர்ச் சித்தானப்பா
மிக்கசிவன் வெளிப்பட்டு வேண்டியதே தென்ன
    மெய்யான சக்கரந்தான் வேணு மென்றான்
முக்கியமாய்ச் சக்கரத்தை யீய்ந்தாரப்பா
    முன்னடந்த சிவன்பெருமை மொழியக்கேளே.

அகத்தியர் தத்துவம் 300

பதவுரை

சக்ர வடிவத்தில் மேலே எழுந்து, சலந்திரனை அழித்து, அவன் தலையை அறுத்து, அவன் ரத்தத்தினை அருந்திய தருணம் அறிந்து, தாமரை மலர் போன்ற கண்களை உடைய திருமால் சிவனை பூசித்தார்; அவ்வமயம் சிவன் வெளிப்பட்டு ‘வேண்டியது என்று’ கேட்க, உண்மையான ‘இச் சக்கரம் வேண்டும்’ என்றார்; காலத்தால் மாறாத பெருமை உடைய சிவன் இந்த முக்கியமான சக்கரத்தை திருமாலுக்கு ஈந்தார்.

விளக்க உரை

  • 25 மகேச மூர்த்தங்களில் ஒன்றான ‘சக்ரவரதர்’ இத்துடன் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.
  • கடிதல் – விலக்குதல், ஓட்டுதல், அழித்தல், கண்டித்தல், அரிதல், அடக்குதல்

Loading

சமூக ஊடகங்கள்