
பாடல்
கண்ணன் பிறப்பிலி காண்நந்தி யாய்உள்ளே எண்ணுந் திசையுடன் ஏகாந்த னாயிடும் திண்ணென் றிருக்குஞ் சிவகதி யாய்நிற்கும் நண்ணும் பதமிது நாடவல் லார்கட்கே - 10.3.14.24
பத்தாம் திருமுறை - திருமந்திரம் – திருமூலர்
கருத்து – சிவனே அகத்திலும் புறத்திலும் நிறைந்து காலமாகி நிற்பவன் என்பதை உணர்த்தும் பாடல்.
பதவுரை
பூரண அருள் உடையவனாகவும், பிறப்பில்லாதவனும் ஆகிய சிவன் உயிர்களின் அகத்தின் உள்ளே அவர்கள் காண்கின்ற குரு மூர்த்த வடிவாகவும், புறத்தே எட்டுத் திசைகளாயும், பிரளய முடிவில் ஒருவனாகவும் இருப்பான். அவனே நிலைத்த பேரின்ப வீட்டினையும் அருளுபவன். இந்த உண்மையை ஆராய்ந்து உணர் வல்லவர்க்கு அவர்களால் அடையத்தக்க, முடிவான பயன் இவையே என்று உணர்தலே ஆகும்.
விளக்கஉரை
- கண்ணன் – கண்ணோட்டம் உடையவன். அஃதாவது சிருட்டி காலத்தில் நிகழ்வதை அறிந்தவனும், சம்ஹார காலத்தில் நிகழ்வதையும் பிறர் உதவி இல்லாமல் தானே அறிந்தவன்.
- நந்தி – குரு
- சிவகதி – சிவம், இன்பம், பதம், பதவி, பயன்
#அந்தக்கரணம் #அமுதமொழி #சைவம் #திருமந்திரம் #திருமூலர் #திருமுறை #பத்தாம்_திருமுறை #மூன்றாம்_தந்திரம் #கால_சக்கரம்
![]()



