செய்தி


குடுகுடுப்பைகாரனின்
கையினில் இருக்கும் கைப்பேசி
யாருக்கு செய்தி சொல்ல?

சமூக ஊடகங்கள்

தலை நிமிர்ந்த மிருகங்கள்


உற்ற பொருள் தேடி
உரெல்லாம் பயணம்
விதை துளிர்க்க துவங்குகையில்
உறுமாறும் வெறுமை
துளிர்தல் தாண்டி துளைத்தல் நிகழும்
ம்ண்ணின் கீழ் வேர்களாய்
துளிர்தவை பரவுதலில்
பரவசம் ஏற்படுத்தும்
அதையும் தாண்டி அனைத்தும் மாறும்
பூக்களாய் கனிகளாய்
காலத்தின் மாற்றத்தால்
நிலைப்புகள் நீக்கம் கொள்ளும்
விழ்ந்து கிடக்கும் பொருள் தேடி
விரையும் காகங்கள்
கவிதையும் கவிதை சார்ந்த இடமும்
பசியோடு ஆயினும்
கவிஞன் என்னும் கர்வத்தோடு
தலை நிமிர்ந்து நிற்கும் மிருகங்கள்

சமூக ஊடகங்கள்

இருக்கும் இடம்


குப்பை பொறுக்குபவள்
கூந்தல் நிறைய
மல்லிகைப் பூக்கள்.

சமூக ஊடகங்கள்

வாசனைகள்


எப்போதாவது பூக்கின்றன
குறிஞ்சிப் பூக்கள்.
தாயின் மடியினில் இருந்து
தலையசைக்கின்றன சில பூக்கள்.
கைகளை அகல விரித்து
கண்களைக் காட்டி
பயமுறுத்துகின்றன சில பூக்கள்.
முடிவில்லா பயணத்தில்
முழுநீள புன்னகையோடு சில பூக்கள்.
பூக்களின் சிந்தனையில்
பூரணமான வலி வயிற்றினில்
கருமை நிறைந்த இரவுப் பொழுதினில்
எங்கு சென்று தேடுவது
மளிகைக் கடையையும் மருந்துக் கடையையும்
எப்பொதும் பூக்கின்றன
காட்டுச் சாமந்திகள்

சமூக ஊடகங்கள்

ஒரு மாதிரி


சூழ்ந்து செல்லும் ஆறு,
சுழன்று வீசும் காற்று,
கண்களுக்கு இனிய பசுமை,
காதுகளுக்கு இனிய ஒலிகள்,
மனதுக்கு இனிய வாசம்
சந்தோஷத்தின் சாயலில் ஏற்றுக் கொண்ட போது
ஒரு மாதிரி என்றார்கள்.
கால சுழற்சியில் மாறின காட்சிகள்
மூடின கண்கள், சாயல் அற்ற நினைவுகள்
சதா சர்வ காலமும் ஏகாந்ததில் திளைப்பு
இப்பொழுதும் கூறுகிறார்கள் ஒரு மாதிரி
எப்படிதான் வாழ்வது என்ற கேள்விக்கு
எவருமே விடையளிக்கவில்லை.

சமூக ஊடகங்கள்

கவிஞன்

ஏதோ ஒரு கணத்தில்
நிகழ்த்து விடுகிறது கவிதைக்கான நிகழ்வு
கவிஞனுக்கான் முகவரியில்
காணக் கிடைக்கின்றன
நீண்ட தாடியும், நீளமான முடியும்
உலர்ந்த தேகமும், உறுதியான மனமும்
மானம் மிகுந்த கவிஞன்
விளிக்கிறது வெளி உலகம்
மானம் கெட்ட உனக்கு என்ன வாழ்வு
விளிக்கிறது உள் உலகம்
வலிகளற்ற கவிஞன் யார்?

சமூக ஊடகங்கள்

கலைஞன்


ஏதோ ஒரு கணத்தில்
வந்து விடுகிறது
வயிற்றுக்கும் கைகளுக்குமான போட்டி
மயிர் நீப்பீன் உயிர் வாழா கவரிமான்
மானம் கெட்ட வயிற்றுக்கு தெரிகிறதா என்ன
வயிற்றுக்கான வலிகளில்
கைநீட்டி யாசகம் கேட்க எத்தனிக்கையில்
எதிர்படுகின்றன வார்த்தைகள்
அவன் பிறவிக் கலைஞன்
பிழைப்புக்காக கை ஏந்துவானா?
அடை மழை வந்து நனைக்கிறது
வயிற்று நெருப்பின் வலிகளை.

சமூக ஊடகங்கள்

ஐயனார்


யாருமற்ற இடத்தில் ஐயனார்
கைவிடப்பட்ட வயதான மனிதர்களின்
வலியும், வலி சார்ந்த நினைவுகளுடன்

சமூக ஊடகங்கள்

பொம்மைகள்


அறை நிறைய பொம்மைகள் கொட்டிகிடந்தன
குழந்தை சொன்னது
எனக்கு விளையாட பொம்மைகளே இல்லை என்று

சமூக ஊடகங்கள்

குழந்தைப் பருவங்கள்


திரை மறைவில்
மறைந்து கொண்டு
என்னை கண்டுபிடியுங்கள் பார்கலாம்
என்று மகள் அழைக்கையில் தெரிகிறது
நான் தொலைத்து விட்ட
எனது குழந்தை பருவங்கள்

சமூக ஊடகங்கள்

கடவுளை விற்றல்

கடவுள் பொம்மைகளை விற்றால் தான் காசு
தெரு ஒர விற்பனை கலைஞன்

சமூக ஊடகங்கள்

மழை

மழை தூறலுக்கு முன்பே
தொடங்கி விடுகின்றன்
மழைக்கான நினைவுகள்
ஒரு முறை நான் நடந்து
கொண்டிருந்தபோது தொடங்கும் குரல்
எனக்கு மழை பிடிக்காது
மற்றொரு குரல் ஒலிக்கும்
இன்னைக்கு எல்லா பாடலும்
மழை பாடல்கள்
குரல் மீண்டும் ஒலிக்கும்
மழைக்கான புரிதல்
தொடங்கும் முன்
மழை நிற்கும்
மழை நின் பின்னும்
நிற்கிறது மனதின் வாசனை

சமூக ஊடகங்கள்

பட்டாம் பூச்சி


விற்பனை சிறுமியின்
கைகளில்
படபடத்து நிற்கின்றன
பலூன்களும் பட்டாம் பூச்சிகளும்

சமூக ஊடகங்கள்

வலிகள்


என்றாவது உற்று
கவனித்து இருக்கிறீர்களா
எனது மகன்
அமெரிக்காவில் வேலை பார்கிறான்
எனது மகள்
சிங்கப்பூரில் இருக்கிறாள்
என்று கூறுபவர்களின்
தனிமையையும்
தனிமை சார்ந்த வலிகளையும்

சமூக ஊடகங்கள்

சுயம் இழத்தல்


வாழ்வினில் என்ன
சுவாரசியம் இருக்கிறது
சுயம் இழத்தல் தவிர

சமூக ஊடகங்கள்

தேனிர்


வெயிலில் ஐஸ்
வண்டிக்காரன்
கையில் தேனிர்

சமூக ஊடகங்கள்

வேஷம்


கடவுள் வேஷம் போட்டுக்
கொண்டு தெருவில் நடந்தாலும்
குரைக்கின்றன நாய்கள்

சமூக ஊடகங்கள்

மனசு


தரும ராசா
உதவி பண்ணுங்கள்
சொன்னவனிடம் மறுதலித்து
சட்டை பையை தொட்டு பார்க்கின்றது கைகள்
உள்ளுகுள் மனைவியிடம்
வாங்கிய ஒற்றை நாணயம்

சமூக ஊடகங்கள்

இடமாற்றம்


கலைத்த குருவி கூட்டின் இடத்தில்
கத்தும் குருவி பொம்மை

சமூக ஊடகங்கள்

அழுகை ஓலி


வெட்டுகையில் கவனித்து பாருங்கள்
மரங்களின் அழுகை ஓலி

சமூக ஊடகங்கள்