ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – கஞ்சம்
பொருள்
- ஒருவகை அப்பம்
- கஞ்சா
- துளசி
- வெண்கலம்
- கைத்தாளம்
- பாண்டம்
- தாமரை
- நீர்
- வஞ்சனை
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
அஞ்சு முகத்தி நவ முகத்தி
ஆறு முகத்தி சதுர் முகத்தி
அலையில் துயிலும் மால் முகத்தி
அருண முகத்தி அம்பரத்தி
பஞ்சா ஷரத்தி பரிபுரத்தி
பாசாங்குசத்தி நடுவனத்தி
பதுமா சனத்தி சிவபுரத்தி
பாரத்தனத்தி திரிகுணத்தி
கஞ்ச முகத்தி கற்பகத்தி
கருணாகரத்தி தவகுணத்தி
கயிலாசனத்தி நவகுணத்தி
காந்தள் மலர்போல் சதுர்கரத்தி
மஞ்சு நிறத்திபரம்பரத்தி
மதுர சிவந்தி மங்களத்தி
மயிலாபுரியில் வளரீசன்
வாழ்வே அபயாம்பிகை தாயே!
அவயாம்பிகை சதகம் – நலத்துக்குடி கிருஷ்ண ஐயர்
கருத்து உரை
சிவனைப்போல ஐந்து முகமும், ஒன்பது சக்திகளின் முகமும், கௌமாரி நிலையில் ஆறு திருமுகமும், ப்ராமி நிலையில் நான்கு முகமும், கடலில் தூங்கும் திருமாலை ஒத்த முகமும், மகேஸ்வர நிலையில் சிவந்த முகமும், ஆகாயமே வடிவாகவும், பஞ்சாட்சரத்தை இடமாகவும், கையிலே பாசமும் ,அங்குசமும், பூமிக்கு நடுவில் இருக்கும் விந்திய அடவியில் இருக்கின்றவளும், தாமரையில் வீற்றிருப்பவளும்,. சிவபுரத்தை ஆட்சி செய்வவளும், கருணை மிகுந்த மார்பகங்களை கொண்டவளும், படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று தொழிலையும் செய்பவளும், தாமரை முகம் கொண்டவளும், கற்பக மரத்திற்கும் சக்தி கொடுப்பவளும், கருணை கொண்டவளும், திருக்கயிலை மலையில் ஈசனின் கூட இருப்பவளும். நவரச குணங்கள் கொண்டவளும், காந்தள் மலர் போன்ற நான்கு கரங்கள் கொண்டவளும். மேகம் போன்ற நிறம் உடையவளும், சிவந்த உதடுகள் உடையவளும் ஆன அழகான அபயாம்பிகைத்தாய் மயிலாடுதுறையில் வாழ்கின்றாள்.
விளக்க உரை
- வழிபடும் தெய்வங்கள் அனைத்திலும் அன்னையே அந்த தெய்வ வடிவாக இருக்கிறாள் எனும் பொருளில் இப்பாடல்
- அவயாம்பிகை சதகம் – சிறு குறிப்பு – http://areshtanaymi.in/?p=91
துக்கடா
சைவ சித்தாந்தம் வினா விடை
சித்தாந்தம் – முடிந்த முடிவு