வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 19

உமாமகேஸ்வரஸம்வாதம்

புகைப்படம் : இணையம்

உமை

உலகில் செய்யப்படும் தொழில்கள் யாவும் தெய்வத்தாலே நடக்கிறது என சிலரும், செய்யப்படும் முயற்சி முன்வைத்து முயற்சியால் நடக்கிறது என சிலரும் நிச்சயிக்கின்றனர். இந்த காரணத்தால் மனம் சந்தேகம் கொள்கிறது. இதன் காரணத்தை விளக்குங்கள்.

சிவன்

உலகில் நல்ல செய்கையும், கெட்ட செய்கையும் மனிதர்கள் செய்கின்றனர். அவர்களிடத்து அந்தக் கர்மங்கள் இருவகைகளாகக் காணப்படுகின்றன. முன் செய்யப்பட்ட கர்மங்கள், தற்போது செய்யப்படும் கர்மங்கள் என அவைகள் இருவகைப்படும். காட்சிக்கு புலனாகாதது தெய்வம் என்றும், கருவிகளால் செய்யப்படுவது மானுஷம் என்றும் கூறப்படுகிறது. மானுஷம் செய்கை மட்டுமே, தெய்வத்தினாலே தான் பலன் நிறைவேறுகிறது. பயிர்த் தொழிலாகிய விவசாயம் செய்யும் போது உழுவது, விதைப்பது, நாற்று நடுவது, அறுப்பது முதலியவை முயற்சிகள். இவை இரண்டு விதங்களால் கை கூடாமல் இருக்கும், ஒன்று தெய்வத்தின் சங்கல்பம், மற்ரொன்று முயற்சியின் பிழை. நல்ல முயற்சியால் புகழ்ச்சியும், தீய முயற்சியால் இகழ்ச்சியும் உண்டாகும்.

உமை

ஆத்மாவானது கர்மத்தின் அடிப்படையில் கர்பத்தில் வருவது எப்படி என்பதை எனக்குச் சொல்லவேண்டும்?

சிவன்

இது ரகசியங்கள் எல்லாவற்றிலும் மேலானது. தேவ ரகசியத்தைக் காட்டிலும் ஆத்ம ரகசியம் பெரிதானது. தேவர்களும், அசுரர்களும் ஆத்மா போவதையும் வருவதையும் அறிய மாட்டார்கள். ஆத்மா நுட்பமானதாலும், எதிலும் பொருந்தி இராமல் இருப்பதாலும் அது மனிதர்களால் காண இயலாததாக இருக்கிறது. மாயைகளுக்குள் ஆத்மாவே பெரிய மாயை.

ஆத்ம மாயையால் தான் முட்டையிலிருந்து பிறக்கும் அண்டஜம், வேர்வையிலிருந்து பிறக்கும் ஸ்வேதஜம், வித்து முதலியவற்றை  பிளந்துகொண்டு  பிறக்கும் உத்பித்ஜம், கருப்பையிலிருந்து  பிறக்கும் ஸராயுஜம் ஆகியவற்றில் அந்த ஆத்மா சேருகிறது. இதற்கு புணர்ச்சி, சுக்கிலம், சோணிதம் மற்றும் தெய்வம் ஆகியவை காரணங்கள்.

சுக்கில, சோணிதங்களின் சேர்க்கையால் ஆத்மா கர்பத்தில் பிரவேசித்து கட்டியான உருவமாகிறது. இது அண்டஜம், ஸராயுஜம் இரண்டுக்கும் பொதுவானது.

கர்மங்களுக்கு ஏற்ப அதன் அங்கங்கள் உருவாகின்றன.இவ்வாறு கர்ப்பம் வளர வளர அதன் கூடவே கர்மத்துடன் சேர்ந்த ஆத்மாவும் வளர்கிறது.

பயிர்த் தொழில் காரணம்  முயற்சி என்றும், மழை பெய்விப்பது, முளைப்பது போன்றவை தெய்வம் காரணம் என்பது விளங்கும். ஐந்து பூதங்கள் நிலைகள், கிரங்களின் சஞ்சாரம்,மனிதர் புத்திக்கு எட்டப்படாத, கருவிகளால் செய்யப்படாத நல்லவை, தீயவைகள் அனைத்திற்கும் தெய்வம் காரணம் என்று அறி. இவ்வாறு ஆத்மா கர்மத்தின் அடிப்படையில் கர்பத்தில் வருகிறது.

முன்னொரு ஆதிகாலத்தில் மனிதர்கள் நல்வினைகளைச் செய்து இரண்டு உலகங்களை அறிந்து இருந்தனர். உலகம் இவ்வாறு இருந்தபோது எல்லோரும் தர்மத்தை விரும்பி இருந்தனர். இதனால் சுவர்கள் எளிதில் நிறைந்தது. இதனால் பிரம்ம தேவர் மனிதர்களை மயங்கச் செய்தார். அது முதல் மனிதர்கள் முன்வினையை அறியவில்லை. அதோடு காம, குரோதங்களையும் சேர்த்தபிறகு அவற்றால் கெடுக்கப்பட்ட மனிதர்கள் சுவர்க்கம் செல்லவில்லை. எனவே இவர்கள் முன்வினை எதுவும் இல்லை என மேலும் பாவங்களைச் செய்தனர். தன்னுடைய லாபத்திற்காக தர்ம காரியங்கள், பரலோகப் பயன்  ஆகியவற்றை மறந்து அழிவு உண்டாக்கும் அஞ்ஞானம் கொண்டனர். இவ்வாறு அஞ்ஞானத்தால் சூழப்பட்ட மாயா உலகில் ஆத்மா பிரவேசிக்கிறது.

உமை

‘ஒருவன் இறந்ததும் பிறந்ததாக நினைக்கப்படுகிறான். அப்படிப் பிறக்கையில் ஆத்மா எப்படி இருக்கும்? கர்ப்பம் ஆரம்பிக்கும் போதே ஆத்மா சேருகிறதா?

தொடரும்..

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 18

உமாமகேஸ்வரஸம்வாதம்

புகைப்படம் : இணையம்

உமை

மனிதர்களின் கர்ம பலன்களை அறிந்து கொண்டேன். மற்றவர்களுக்கு துன்பம் செய்பவன் நன்மை அடையும் வகை எது? அது ஒரு ஜென்மத்தில் உண்டாகுமா அல்லது பல ஜென்மாக்களில் உண்டாகுமா?

சிவன்

பிறர் நன்மைக்காக அவர்களுக்கு துன்பத்தை செய்பவன் சுகம் பெறுவான். அரசன் ஜனங்களை தண்டித்து, பயமுறுத்தி நல்வழிப்படுத்துதல், வழி தவறி நடக்கும் சீடர்களை தண்டித்து ஆச்சாரியன் நல்வழிப்படுத்துதல், வைத்தியம் செய்பவன்  என இவ்வாறு நல் எண்ணத்துடன் துன்பம் செய்பவன் சுவர்க்கம் அடைவான். அயோக்கியனான ஒருவன் கொல்லப்பட்டால் மற்றவர்கள் சுகப்படுவர் எனில் அதில் தர்மம் மட்டுமே இருக்கும். பாவம் இருப்பதில்லை.

உமை

இவ்வுலகில் நான்கு வகையான உயிர்கள் காணப்படுகின்றன. அவைகளின் அறிவு இயற்கையானதா அல்லது உண்டாக்கப்படுவதா?

சிவன்

உலகம் தாவரம், ஜங்கமம் என்று இருவகைப் பொருளாக கூறப்படுகிறது. அவற்றில் பிராணிகள் நான்கு வகைகளில் உற்பத்தி ஆகின்றன.

பெயர் ஆத்மா / அறிவு இனங்கள் உண்டாகும் முறை
1 உத்பிஜ்ஜம் ஸ்பரிசம் எனும் ஒர் அறிவு நிலம் + நீர்
2 ஸ்வேதஜம் ஸ்பரிசம்,பார்வை எனும் இரு அறிவு கொசு, பேன் வெப்பம்
3 அண்டஜம் ஐந்து அறிவு பறவை வீர்யம் + நீர்
4 ஜராயுஜங்கள் ஐந்து அறிவு பசு, காட்டுமிருகங்கள், மனிதர்கள் சுக்லம் + சோணிதம்


இரவில் உண்டாகும் இருள் ஒளியால் அழிந்து போகும். தேக இருள் மாயையால் சூழப் பட்டிருப்பதால் உலக ஒளிகள் அனைத்தும் சேர்ந்தாலும் விலகாது.தேக இருளைப் போக்க பிரம்மர் பெரும் தவம் செய்து உலக நன்மையின் பொருட்டு வேதம், வேதாகமம், உபநிஷத்துகள் ஆகியவற்றைப் பெற்று தேக இருளை ஒழித்தார். இது நன்மை பயக்கும்; இது தீமை பயக்கும் என்பதை சாஸ்திரங்கள் தெரிவிக்கா விடில் உலகினில் மனிதர்களும், விலங்குகளும் வேற்றுமை இல்லாமல் இருப்பார்கள். எனவே உயிர்களுக்கு ஞானத்தைவிட சிறந்தது எதுவும் இல்லை. பிறக்கும் போது பிறவி கொண்டு பிறந்த ஞானம் முதன்மையானது. கற்பிக்கப்படும் ஞானம் இரண்டாவதானது. சாத்திரங்களைக் கற்றப்பின் ஒருவன் பிறவி பயன் பெற்றவனாகிறான். அவன் தேவதை போல் மனிதர்களுக்குள் பிரகாசம் உடையவன் ஆகிறான். அவன் பெற்ற அந்த ஞானம் காமம், குரோதம், பயம், கர்வம், விபரீத ஞானம் இவற்றை மேகங்களை காற்று விலக்குவது போல் ஒதுக்குகிறது. இவர்கள் செய்யும் சிறிய தர்மமும் பெரிதாகும். ஞானமுள்ளவன் பொருள்களின் உயர்வுதாழ்வுகளையும், உண்மையையும் அறிந்தவன் ஆகிறான். இவ்வாறான சாத்திர ஞானத்தின் பலன்களை சொன்னேன்.

உமை

சிலர் முன் ஜென்மத்தின் நினைவுகளை அறிந்தவர்களாகப் பிறக்கிறார்களே, அது எவ்வாறு?

சிவன்

திடீரென இறந்த மனிதர்கள் உடனே பிறக்கும் போது முந்தய ஜன்மத்தின் நினைவு சிறிது இருக்கும். அவர்கள் உலகில் பிறந்து அவ்வாறான ஞானம் கொண்டு இருக்கிறார். அவர்கள் வளர வளர அந்த அறிவு கனவு போல் மறைந்து விடுகிறது.

உமை

சிலர் இறந்தபிறகும் அதே தேகத்தை அடைகிறார்களே, அது எவ்வாறு?

சிவன்

எம தூதர்கள், உயிர்கள் அதிக இருக்கும் போது அவர்களால் கொல்லப்பட்டு பகுத்தறிவின்றி தான் கொண்டு செல்லும் உயிர் விடுத்து மற்றொரு உயிரை கொண்டு செல்கின்றனர். எமன் ஒருவன் மட்டுமே ஒருவனது புண்ணிய பாவங்களை அறிந்திருக்கிறான். எனவே அவர்கள் ஸ்ம்யமனி எனும் எமன் இடத்திற்குச் சென்று அவரால் கர்மங்களை அனுபவிப்பதற்காக திரும்ப அனுப்பப்படுகின்றனர். அவர்கள் கர்மம் முடியும் வரை எமன் இருப்பிடம் செல்ல இயலாது.

உமை

மனிதர்கள் தூங்கிய உடன் கனவு காண்கின்றனர், இது இயற்கையா? அல்லது வேறு காரணமா?

சிவன்

தூங்குபவர்களின் சஞ்சரிப்பதான மனம் நடந்ததையும் வருவதையும் அறிகிறது.  எனவே கனவு வருவதைக் குறிப்பதாக இருக்கும்.

உமை

உலகில் செய்யப்படும் தொழில்கள் யாவும் தெய்வத்தாலே நடக்கிறது என சிலரும், செய்யப்படும் முயற்சி முன்வைத்து முயற்சியால் நடக்கிறது என சிலரும் நிச்சயிக்கின்றனர். இந்த காரணத்தால் மனம் சந்தேகம் கொள்கிறது. இதன் காரணத்தை விளக்குங்கள்.

தொடரும்..

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 17

உமாமகேஸ்வரஸம்வாதம்

புகைப்படம் : இணையம்

உமை

மனிதர்கள் தீர்க்க ஆயுள் உள்ளவர்களாகவும், ஆற்ப ஆயுள் உள்ளவர்களாகவும் இருப்பது எதனால்?

சிவன்

உயிர்களைக் கொல்லாமை, பொய்யாமை, வெகுளாமை , பொறுமை, உண்மை கொண்டு இருத்தல், குருவின் இடத்தில் எப்பொழுதும் பணிவுடன் இருத்தல், பெரியோர்களை பூஜித்தல், சுத்தமாக இருத்தல், செய்யத்தகாத  தீய செயல்களை விடுதல், எப்பொழுதும் பத்தியமான ஆகாரங்களை உண்ணுதல் ஆகியவை நல்லொழுக்கங்கள் ஆகும். இந்த நல்லொழுக்கங்களால் மனிதர்கள் வெகுகாலம் நீண்ட ஆயுளுடன் இருப்பார்கள். தவம், இந்திரியங்களை வெற்றி கொள்ளுதல், தேக ஆரோக்கியம் தரும் மருந்துகளை உட்கொள்ளுதல், எப்பொழுதும் மகிழ்வுடன் இருத்தல் போன்றவற்றாலும் மனிதர்கள் நீண்ட ஆயுள் பெறுகிறார்கள். மற்றவர்கள் பாவங்களைச் செய்தும், பிறரை ஹிம்சை செய்தும், பொய் சொல்லியும், பெரியோர் இடத்தில் பகைகொண்டும், பிறரை இழிவாக பேசியும், நற்கருமங்களையும், சுத்தத்தினை விட்டவர்களாகவும், நாஸ்திகர்களாகவும், மது மாமிசங்களை கொண்டும் கொடிய செய்கை உடையவர்களாகவும் இருக்கின்றனர். போகக்கூடாத இடங்களுக்குச் சென்றும்,  ஆச்சாரியர்களை பகைத்தும், கோபம் கொண்டும், கலகம் கொண்டும் இருக்கும் இவர்கள் நரகத்தில் வெகு காலம் இருந்து மானிட ஜென்ம அடையும் போது குறைந்த ஆயுளுடன் பிறக்கின்றனர். இவையே ஆயுள் குறைவின் விஷயமாகும்.

உமை

ஆத்மா, ஆண் தன்மை உடையதா? பெண் தன்மை உடையதா? இதில் எவ்வாறு ஆண் பெண் தன்மைகள் வந்தன? ஆண் உயிரும், பெண் உயிரும் ஒன்றா? வெவ்வேறானவைகளா? இவைகளை எனக்கு விளக்கிக் கூறுங்கள்.

சிவன்

உயிர் ஆணும் அன்று, பெண்ணும் அன்று. ஆத்மா விகாரம் அற்றது. உயிர் போன்றே ஆத்மாவும் ஆணும் அன்று, பெண்ணும் அன்று. கர்மங்கள் செய்வதால் அந்தந்த கர்மங்களுக்கு ஏற்றவாறு ஆண் பெண்ணாகவும், பெண் ஆணாகவும் பிறக்கிறார்கள்.

உமை

ஆத்மா தனக்கு விதிக்கப்பட்ட கர்மங்களை செய்யாவிடில் தேக கர்மங்களை செய்வது யார்?

சிவன்

ஆத்மா கர்மங்களைச் செய்வதில்லை. அது பிருகிருதியோடு கூடி எப்பொழுதும் கர்மங்களை செய்கிறது. சத்வம், ரஜோ மற்றும் ரஜோ குணங்களால் தேகம் எப்பொழுதும்  மூடப்பட்டிருக்கிறது. சத்வகுணம் – பிரகாச ரூபம், ரஜோ குணம் – துக்க ரூபம் , தமோ குணம் – அறிவின்மையான ரூபம். இக்குணங்களால் உலகின் செயல்கள் நடைபெறுகின்றன.

  • பொறுமை, அடக்கம், நன்மையில் விருப்பம் முதலியவை சத்வ குணத்தால் உண்டாகின்றன.
  • வேலைத்திறமை, சோம்பல் இல்லாமை, பொருள் ஆசை, விதியினை நம்பாமை, மனைவி மேல் பற்று, செல்வத்தின் மேல் பற்று முதலியவை ரஜோ குணத்தால் உண்டாகின்றன.
  • பொய், கடுமை, பிடிவாதம், அதிக பகை, நாஸ்திகத்தனம், தூக்கம், சோம்பல் முதலியன தாமஸ குணத்தினால் உண்டாகின்றன.

ஆகையால் நல்லவைகள், கெட்டவைகள் குணங்களால் உண்டாகின்றன. எனவே ஆசை அற்றவன் விகாரங்கள் அற்றவன் என்று அறிந்து கொள். சத்வ குணம் உடையவர்கள் புண்ய லோகங்களிலும், ரஜோ குணம் உடையவர்கள் மனிதர்களாகவும், தமோ குணம் உடையவர்கள் நரகத்திலும் இருப்பார்கள்.

ஜென்மம் எடுத்தப்பிறகு பிராணிகளுக்கு எவ்வையிலாவது துன்பம் நேரும். ஆத்மாவானது அந்த சரீரம் அழியும் போது கர்மத்தை அனுசரித்து அதை விட்டுப் போகிறது. தேகத்தில் நோய் ஏற்பட்டாலும் அவை ஆத்மாவை தீண்டுவதே இல்லை. கர்ம பலன் உள்ளவரையில் ஆத்மா இருக்கும். அது முடிந்த உடன் ஆத்மா போய்விடும். ஆதிகாலத்தில் இருந்து இவ்வாறு நடைபெறுகிறது.

உமை

மனிதர்களின் கர்ம பலன்களை அறிந்து கொண்டேன். மற்றவர்களுக்கு துன்பம் செய்பவன் நன்மை அடையும் வகை எது? அது ஒரு ஜென்மத்தில் உண்டாகுமா அல்லது பல ஜென்மாக்களில் உண்டாகுமா?

தொடரும்..

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 16

உமாமகேஸ்வரஸம்வாதம்

புகைப்படம் : இணையம்

உமை

மனிதர்கள், உலகின் நன்மை தீமைகள் அனைத்தும் நவகிரகங்களால் செய்யப்பட்டவை என்று நினைத்து அந்த கிரகங்களையும், நட்சத்திரங்களையும் பூசை செய்கின்றனர். இதில் எனக்கு சந்தேகம் உள்ளது. இதை தீர்க்க கடவீர்

சிவன்

நட்சத்திரங்களும் கிரங்கங்களும் தாமே காரியங்களை செய்வதில்லை. மனிதர்களின் நன்மைக்காக அவைகள் நல்லவைகளாகவும், கெட்டவைகளாகவும் தெரிகின்றன. நல்ல கர்மங்கள் சுப கிரங்கங்களாலும், கெட்ட கர்மங்கள் பாப கிரங்களாலும் தெரிவிக்கப்படுகின்றன. ஆதலினால் பாப கிரங்கங்கள் இருக்கும் போது ஜனங்கள் கெடுதலைச் செய்கிறார்கள். சுப கிரங்கங்கள் இருக்கும் போது தாமே சரியாக செய்வதாக நினைத்து நல்ல காரியங்களைச் செய்கிறார்கள். எப்பொழுதும் கிரக, நட்சத்திரங்கள் நன்மை தீமை செய்வதில்லை. எல்லா வினைகளும் அந்தந்த உயிர்களால் செய்யப்பட்டவை. கிரகங்கள் வேறு, செய்பவன் வேறு. வினைகளை செய்தவன் கிரங்கங்களால் தூண்டப்பட்டு தன் பலன்களை அனுபவிக்கிறான்.

உமை

நல்ல வினைகள், தீய வினைகள் ஆகியவற்றை செய்த மனிதர்கள் அடுத்து வரும் பிறப்புகளில் எதை முதலில் அனுபவிக்கிறார்கள்?

சிவன்

சிலர் நல்லவினைகள் முன்பு அனுபவிக்கின்றனர் என்றும், சிலர் தீய வினைகளை பின்னர் அனுபவிக்கின்றனர் என்றும் கூறுகிறார்கள். இது தவறு. முன் ஜென்மங்களில் எவ்வாறு இரு வினைகளும் செய்யப்பட்டனவோ அவ்வாறே அதற்குத் தக்க பலன்களை அனுபவிக்கின்றனர். இந்த பூமியில் மனிதர்கள் செல்வம், வறுமை, இன்பம், துன்பம்,அச்சமின்மை, பயம் போன்றவற்றை வரிசையாக அனுபவிக்கின்றனர். செல்வம் உடையவர்கள் துயரப்படுகிறார்கள். வறியவர்கள் நிம்மதியாக இருக்கிறார்கள். இது மானிட வர்கங்களுக்கு பொருந்தும். சுவர்க்க, நரகத்தில் அவ்வாறு இல்லை. இடையறாத சுகம் சுவர்கத்திலும், இடையறாத துன்பம் நரகத்திலும் இருக்கும். மிகப் பெரியதான வினைகளை முதலில் அனுபவித்து மிகச் சிறிய வினைகளை பின்னர் அனுபவிக்கின்றனர்.

உமை

உலகில் உயிர்கள் பிறந்து பிறந்து நில்லாமல் உயிர் விடுத்து இறப்பது எதனால்?

சிவன்

தேகமும் ஆத்மாவும் இணைந்திருப்பதை பிராணிகள்/உயிர்கள்  என்று சொல்லப்படுகிறது. இதில் ஆத்மா நித்தியம், உடம் அநித்தியம், இவ்வாறு தேகத்துடன் சேரும் ஆத்மா நாளடைவில் தேகத்தின் வலிமை குன்றிய பிறகு அதை விட்டு விடுகிறது. இதை உலகில் உள்ளவர்கள் மரணம் என்கிறனர். இது தேவர், அசுரர், மனிதர் ஆகிய எல்லாருக்கும் பொருந்தும். உயிரற்ற பொருள்களை எப்படி ஆகாயம் தன்னிடத்தில் கொள்வது இல்லையோ அது போலவே காலமும். இவ்வாறு உயிர்கள் மீண்டும் மீண்டும் பிறப்பு எடுத்து தேகம் அடைகின்றன.

உமை

சில உயிர்கள் இளமையிலே இறக்கின்றன. சில உயிர்கள் வயது முதிர்ந்து உயிரோடு இருக்கின்றன. இதனால் காலத்தினால் மரணம் நிச்சயமாகவில்லை. இந்த சந்தேகத்தை தெளிவியுங்கள்.

சிவன்

காலமானது தேக தளர்ச்சியை மட்டும் செய்கிறது. அது தேகம் விழ்ந்து போகச் செய்வதில்லை. கர்மம் முடிந்தால் தேகம் தானாகவே விழும். முந்தைய கர்மத்தின் படியே இருப்பதும் இறப்பதும். முன் செய்த கர்மம் இருக்கும் வரையில் மனிதன் உயிரோடு இருக்கிறான். அந்த கர்மத்தின் அடிப்படையில் தான் அவன் வெகு காலம் உயிரோடு இருப்பதும்.

 உமை

மனிதர்கள் தீர்க்க ஆயுள் உள்ளவர்களாகவும், ஆற்ப ஆயுள் உள்ளவர்களாகவும் இருப்பது எதனால்?

 தொடரும்..

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 15

உமாமகேஸ்வரஸம்வாதம்

புகைப்படம் : இணையம்

உமை

அரசர்களால் தண்டிக்கப்பட்ட மனிதர்களுக்கு அவர்களின் பாவம் போகுமா? போகாதா, அதை விளக்க வேண்டும்.

சிவன்

அரசர்களால் தண்டிக்கப்பட்டவர்கள் எமனால் தண்டிக்கப்படுவதில்லை. தவறாக தண்டிக்கப்பட்டாலும், சரியான தண்டனை செய்யப்படா விட்டாலும் அவர்களை எமன்  தண்டித்தே விடுவான். அவர்களின் செய்கைகள் அனைத்தும் அவனுக்குத் தெரியும். கருமம் செய்த மனிதன் எவரும் எமனிடம் இருந்து தப்ப முடியாது. எமனாலும் அரசனாலும் தண்டிக்கப்பட்டவன் தண்டிக்கப்படாவிட்டாலும் அவன் வினை முழுவதையும் அனுபவிப்பான். செய் கர்மத்தின் வினைப்பயன்களை அறுத்தவர்கள் எந்த உலகிலும் இல்லை.

உமை

பூமியில் மனிதர்கள் நித்திய பாவத்தை செய்து அதை தொலைப்பதற்காக பிராயசித்தமும் செய்கின்றனர். அஸ்வமேத யாகம் போன்ற யாகங்களை செய்தும் மற்றும் இன்ன பிற உபாயங்களாலும் பிராயச்சித்தம் செய்கின்றனர். இதை எனக்கு விளக்குங்கள்.

சிவன்

நல்லவர்களும் கெட்டவர்களும் வேண்டும் என்றே நினைத்தும், தவறுதலாகவும் இரு வகையான பாவங்களைச் செய்கின்றனர். பலன் கருதியும், வைராக்கியங்களுடனும் செய்யப்படும் கர்மங்கள் எந்த வகையிலும் அழிவதே இல்லை. தெரிந்து செய்த கர்மம் ஆயிரம் அஸ்வமேத யாகம் செய்வதாலும் நூற்றுக்கணக்கான பிராயச்சித்தங்களாலும் அழிவதில்லை, தவறுதலாகவும் தற்செயலாகவும் செய்யப்பட்ட பாவங்கள் அஸ்வமேத யாகம் மற்றும் பிராயச் சித்தங்களால் அழியும். உலக நன்மைக்காகவும் பிராயச்சித்தம் முதலியவை விதிக்கப்படுகின்றன. இதை நீ அறிந்து கொள்.

உமை

இவ்வுலகில் மனிதர்களும் மற்ற பிராணிகளும் காரணத்தோடும் காரணம் இன்றியும் மரணிக்கின்றனர். இது எந்த கர்மத்தின் பலன்?

சிவன்

பூர்வ ஜென்மத்தில் மனிதர்கள் எவ்விதம் கொன்றார்களோ அதன் பலனை இப்பிறவியில் அனுபவிக்கின்றனர், விஷம் கொடுத்தவர் விஷத்தாலும், ஆயுதத்தால் அடித்து கொன்றவர் ஆயுதங்களாலும் , வேறு எந்த வகையிலும் மற்றவர்களை கொல்லுகின்றனரோ அவ்வகையில் இப்பிறவியில் தம் உயிர் சேதத்தை அடைகின்றனர். இதில் சந்தேகமில்லை. உலகில் இதுதான் விதிபற்றிய சத்தியம் என்று அறிந்துகொள்வாயாக. தன்வினையை அனுபவிக்காமல் இருப்பதற்கு தேவர், அசுரம் மற்றும் மனிதர் எவரும் விதிவிலக்கல்ல. உலகமானது ஆதிகாலம் தொடங்கி கர்மத்தில் கோர்க்கப்பட்டிருக்கிறது. என்னால் சொல்லப்படா கர்மங்களை உன் புத்தியால் ஊகித்து அறிந்து கொள்வாயாக.

உமை

உங்களது கருணையினால் நன்மை தீமை கர்மங்கள் மாலைபோல் தொடுக்கப்பட்டிருக்கின்றன என்பதையும், பசுவின் மடிதேடி கன்று செல்வதைப்போலவும், பள்ளத்தை நோக்கி நீர் பாய்வதைப் போலவும் கர்மங்கள் பற்றிச் செல்கின்றன என அறிந்து கொண்டேன். இவ்வாறான புண்ணிய பாப கர்ம வினைப் பயன்களை அவர்கள் இந்த ஜென்மாவில் அனுபவிக்கின்றனரா அல்லது மறுமையிலா?

சிவன்

போன ஜென்மத்தின் பலன்களை இந்த பிறவியிலும் இந்த ஜென்மத்தின் பலன்களை அடுத்து வரும் பிறவியிலும் அனுபவிக்கின்றனர். இது மானிடர்களுக்கு மட்டும் பொருந்தும். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் மரணமின்மை என்பதாலும், தவத்தாலும் அந்த அந்த பிறவியிலேயே கர்மங்களின் பலன் ஒரே சரீரத்தில் அனுபவிக்கப்படும்.

உமை

மனிதர்கள், உலகின் நன்மை தீமைகள் அனைத்தும் நவகிரகங்களால் செய்யப்பட்டவை என்று நினைத்து அந்த கிரகங்களையும், நட்சத்திரங்களையும் பூசை செய்கின்றனர். இதில் எனக்கு சந்தேகம் உள்ளது. இதை தீர்க்க கடவீர்!

தொடரும்..

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 14

உமாமகேஸ்வரஸம்வாதம்

புகைப்படம் : இணையம்

உமை

சில மனிதர்கள் அரசர்களாலும், திருடர்களாலும் மற்றும் நீராலும் எல்லா பொருள்களும் அபகரிக்கப்பட்டவர்களாக இருக்கின்றனரே, அது ஏன்?

சிவன்

எவர்கள் பூர்வ ஜென்மத்தில் அசுரத் தன்மை அடைந்து பகையினாலும், ஆசையினாலும் பிறருடைய வருமானத்தை கெடுத்தும், அவரை  நோகச் செய்தும், கோட் சொல்லியும், களவினாலும் மற்றவகையினாலும் பிறர் பொருட்களை அபகரித்தும், கொடியவர்களாகவும், நாத்திகத்தில் பற்றுக் கொண்டும் பொய் சொல்கிறவர்களாகவும் பிறர் பொருளை அபகரித்தும் இருப்பவர்கள் நெடுநாள் நரகத்தில் இருந்து துன்பப்பட்டு மானிட ஜென்மம் அடையும் போது தீடிரென பொருள் நஷ்டம் அடைவது நிச்சயம்.

 

உமை

சில மனிதர்கள் பந்தங்களை விட்டு விலகுகின்றனர். சிலர் பந்தம் உடைய மனிதர்களால் ஆயுதத்தாலோ மற்ற கருவிகளாலோ தாக்கப்பட்டு உயிர் சேதம் அடைகின்றனர். அது ஏன்?

சிவன்

எந்த மனிதர்கள் பூர்வ ஜென்மத்தில் அசுரத் தன்மை அடைந்து, பொய் பேசுகிறவர்களாகவும், பிறர் பொருட்களை அபகரித்தும், பிற உயிர்கள் இடத்து அன்பு இல்லாமல் மிக்க விருப்பத்துடன் அவைகளை கொன்றும், புலால் உணவுகளைக் உண்டும்., நம்பினர்களை கெடுப்பவர்களாகவும், தூக்கத்தைக் கெடுப்பவர்களாகவும், பெரும்பாலும் பொய் சொல்கிறவர்களாகவும் இருந்தவர்கள் யமனால் தண்டிக்கப்பட்டு நரகத்தில் இருந்து அதை அனுபவித்து விலங்கு பிறவி அடைந்து துயருற்று மானிட பிறவி அடையும் போது கொலையையும் கட்டுப்படுத்தலையும் அடைவார்கள். செல்வமுள்ளவர்களும், ஏழைகளும் தம் வினைப்பயனை அனுபவிக்கின்றனர். தமது வினையின் காரணமாக தூக்கத்திலோ, மயக்கத்திலோ தாம் செய்த வினையின் காரணமாக சுற்றத்தாருடனோ, இன்ன பிற மனிதர்களாலோ கொலைக்கருவிகளால் தாக்கப்பட்டு அழிவுறுகின்றனர்.

 

உமை

சில மனிதர்கள் நீதி சாஸ்திரத்தில் தேர்ந்தவர்களால் தண்டிக்கப்படுகின்றனர், அது என்ன தோஷத்தினால்?

சிவன்

சில மனிதர்கள் பூர்வ ஜென்மத்தில் மனிதர்களையும், பிராணிகளையும் வதைப்பதையும் துன்பறுத்துவதையும் தினமும் செய்து கொன்டு இருப்பார்கள். சில அரசர்கள் கொடிய குணம் உள்ளவர்களாகி  கோபத்தினால் கொடுமையாக முறையில் பிறரை கொல்பவர்களாகவும், மாமிசம் உண்பவர்களாகவும், நாத்திகம் பேசுபவர்களாகவும், தண்டிக்க தகாதவர்களை தண்டித்தும், பெண்கள், கணவர்கள் , ஆசாரியர்கள் ஆகியவர்களை கொல்பவர்களாகவும் இருக்கின்றனர். இவர்கள் நரக தண்டனை பெற்று அதை அனுபவித்து யமனால் தண்டிக்கப்படுகின்றனர். முன் ஜென்மத்தில் செய்ததை இந்த பிறவியில் அனுபவிக்கின்றனர். இது மனிதர்களுக்கு மட்டும் பொருந்தும். தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும் பொருந்தாது. அவர்கள் தவவலிமையாலும், மரணமின்மையாலும் ஒரு சரீரத்திலே கர்ம பலன் அனைத்தையும் அனுபவித்துவிடுகின்றனர். சாதாரண மனிதர்களுக்கு அவர்கள் இறந்தப்பின் அவர்களின் கர்மபலன் தெரியாமல் போய்விடும்.

 

உமை

புத்திரனை விரும்புவன் புத்திர காமேஷ்டி யாகம செய்து அந்த பிறவியிலே புத்திரனை பெறுகிறான். மனிதன் மானிட லோகத்தில் செய்த கர்ம பலனை மானிட தேகத்திலே அனுபவிக்கிறான். அது போல சில மனிதர்கள் கொலைக்காரன், திருடன் என்று அந்த மானிட தேகத்திலே தண்டிக்கப்படுகின்றனர். இது எதனால்?

சிவன்

குற்றத்தை நிமித்தமாக கொண்டு அரசன் பிரஜைகளை தண்டிப்பது அவரவர் முன் வினைப் பயனால் மட்டுமே. அன்று செய்த செய்கைகள் இன்று தண்டிப்பதற்கு காரணமாகிறது.

 

உமை

அரசர்களால் தண்டிக்கப்பட்ட மனிதர்களுக்கு அவர்களின் பாவம் போகுமா? போகாது, அதை விளக்க வேண்டும்.

தொடரும்..

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 13

உமாமகேஸ்வரஸம்வாதம்

 

உமை

பூமியில் உள்ள மனிதர்களில் சிலர் சக்தி அற்றவர்களாகவும், ஆண்மை அற்றவர்களாகவும், பயன்பாடு அற்றவர்களாகவும், இழி தொழிலில் ஆசை உள்ளவர்களாகவும் கீழான எண்ணம் உடையவர்களோடு நட்பு உடையவர்களாகவும் காணப்படுகின்றனர். அது என்ன வகையான கர்மப் பலன்?

சிவன்

முன் ஜென்மங்களில் கொடும் தொழில்களை விரும்பி பசுக்களை அதன் தன்மை இழக்கச் செய்தும், அதில் வரும் வருமானத்தை வைத்து பிழைத்துக் கொண்டும், கோபத்தினால் மனிதர்களுக்கு ஆண்மையை கெடுத்து அதில் சந்தோஷப் பட்டுக்கொண்டும், பெண்களிடத்தில் முறை தவறி நடந்து கொண்டும், அவ்வாறு பெண்களிடத்தில் பகை கொண்டும் கோள் சொல்லியும் அவர்களுக்கு துன்பம் விளைவித்தும் மற்றும் இவ்வகை நடைஉடைய மனிதர்கள் பிறகு ஒரு பிறவியில் மானிட தேகம் எடுக்கும் போது திறமை அற்றவர்களாகவும், உதவி அற்றவர்களாகவும், இழி தொழில் செய்பவராகவும், வெட்கம் கெட்டவர்களாகவும், சுறுசுறுப்பு இல்லாதவர்களாகவும் ஆகின்றனர். தம் செய்கையினால் அதன் காரண காரியங்களை ஆராய்ந்து பிறர் துயரதை விலக்கினால் அவர்கள் அந்த துயரில் இருந்து விடுபடுவார்கள். பின் ஜென்மத்திலும் தவறுபவர்கள் நரகமே அடைவர். இது ஆண் பெண் இருவருக்கும் பொதுவானது.

உமை

மனிதர்களில் சிலர் அடிமையாகி எல்லா வேலைகளையும் செய்து கொண்டும், அடி பயமுறுத்தல் போன்றவைகளை சகித்துக் கொண்டும் இருப்பவர்களாக காணப்படுகின்றனர். அது ஏன்?

சிவன்

எந்த மனிதர்கள் பூர்வ ஜென்மங்களில் பிறர் பொருளை பறித்தும், வட்டிக்கு வாங்கிய கடன், பயிர், அடைக்கலமாக கொடுக்கப்பட்ட பொருள் ஆகியவற்றை மறைத்தும், பிறர் பொருகளை அபகரித்தும், பிறரை அடித்தும், கட்டியும் துன்புறுத்தியும் அடிமை படுத்தியும் வந்தனரோ அவர்கள் மரண தண்டனை அடைந்தப்பின் யம தண்டனைகள் பெற்று பின் தற்செயலாக மானிட பிறப்பு எடுக்கும் போது பிறந்தது முதல் எல்லா வகையிலும் அடிமைகளாகவே இருப்பர். அவர்கள் யாருடைய தனங்களை அபகரித்தார்களோ அவர்களுக்கு அடிமைத் தொழில் செய்து தம் பயம் தீரும் வரை வேலை செய்கிறார்கள். சிலர் பசுக்களாகப் பிறக்கின்றனர். அவர்கள் முன் ஜென்மத்தில் உண்டான பாவம் அவ்வாறுதான் கழியும். இதைத் தவிர கர்மங்களை அழிக்க தேவர்களாலும், அசுரர்களாலும் இயலாது. பொருளை பறி கொடுத்தவனை எல்லா வகையும் திருப்தி செய்விப்பதுதான் பாவத்தில் இருந்து விடுபடும் வகை. வினையை விடுவிக்க கருதுகிறவன் எல்லா வகையிலும் துன்பங்களை பொறுத்துக் கொண்டு முறைப்படி செய்து தன் எஜமானை திருப்தி படுத்த வேண்டும். எஜமானால் அன்புடன் விடை கொடுக்கப்படுபவன் தன் பாவத்தில் இருந்து விடுபடுகிறான். அப்படிப்பட்ட குணமுள்ள வேலைக்காரனை எஜமானும் சந்தோஷப்படுத்த வேண்டும். தகுந்த காரணம் பற்றி மட்டுமே தண்டிக்க வேண்டும். கிழவர்களையும், சிறுவர்களையும், இளைத்தவர்களையும் காப்பாற்றுபவன் புண்ணியம் அடைவான்.

உமை

சில மனிதர்கள் இழிதொழிலில் விருப்பம் உள்ளவர்களாகவும்,ஏழையாகவும், மிகுந்த சிரப்படுபவர்களாகவும், விகார ரூபம் உடையவர்களாகவும், கெட்ட எண்ணம் உடையவர்களாகவும் காணப்படுகின்றனரே, அது ஏன்?

சிவன்

பூர்வ ஜென்மத்தில் அதிக அகங்காரமும் தற்பெருமையும் உடையவர்களாக பெரியோர்களை வணங்காமல்  தம் தர்மத்திற்கு உரிய காரியங்களை செய்யாமல் பிறரை பலவந்தமாக கட்டாயப்படுத்தி தன்னை வணங்கும்படி செய்தும், செல்வத்தினால் எப்பொழுதும் பிறரை அவமதித்தும், குடித்தும், கடும் சொல் முதலியவற்றை கொண்டவராகவும் இருந்த மனிதர்கள், மரண தண்டனை அடைந்தப்பின் யம தண்டனைகள் பெற்று பின் தற்செயலாக மானிட பிறப்பு எடுக்கும் போது விருப்பம் உள்ளவர்களாகவும்,ஏழையாகவும், மிகுந்த சிரப்படுபவர்களாகவும், விகார ரூபம் உடையவர்களாகவும், கெட்ட எண்ணம் உடையவர்களாகவும் காணப்படுகின்றனர். அவ்வாறு இருக்கும் மனிதர்களை விவேகம் உள்ளவன் எக்காலத்திலும் இகழவும் கோபிக்கவும் கூடாது. ஏனெனில் அவர்கள் தம் வினைப்பயன்களை அனுபவிக்கின்றனர். துயரப்படும் அம்மனிதர்கள் அது குறித்து சிந்திக்கும் போதும் வருத்தம் கொள்ளும் போதும் அவர்கள் பரிசுத்தம் அடைவார்கள்.

உமை

சில மனிதர்கள் பிறர் வாயிலை அடைந்தும் உள்ளே செல்ல முடியாமல் தடுக்கப்பட்டு நிறுத்தப்படுகின்றனர், எத்தனை முயற்சி செய்தும் அவர்களை சந்திப்பதற்கும், தம் கருத்தை சொல்வதற்கும் இயலாதவர்களாக இருக்கின்றனரே. அது ஏன்?

சிவன்

முன் ஜென்மங்களில் செல்வம் மற்றும் அதிகாரம் ஆகியவைகளைப் பெற்று இருந்தும் மனதால் குறுகி பிறரிடம் பேசாமலும் செல்வம் பற்றிய கர்வத்தினால் மற்றவர்களை உள்ளே விடாமலும், பொருளாசை, பெண்ணாசை கொண்டு எவரையும் மதிக்காமலும், தன் நிலையை மட்டுமே கொண்டும், எல்லா போகங்கள் இருந்தும் எவருக்கும் கொடுக்காமலும், திறமை இருந்தும் பிறருக்கு உதவி செய்யாமலும், புண்ணிய கர்மங்களை செய்யாமலும் இருந்த மனிதர்கள் பின்னொரு பிறப்பில் பிறர் வாயிலை அடைந்தும் உள்ளே செல்ல முடியாமல் தடுக்கப்பட்டு நிறுத்தப்படுகின்றனர், எத்தனை முயற்சி செய்தும் அவர்களை சந்திப்பதற்கும், தம் கருத்தை சொல்வதற்கும் இயலாதவர்களாக இருக்கின்றனர்.

உமை

சில மனிதர்கள் அரசர்களாலும், திருடர்களாலும் மற்றும் நீராலும் எல்லா பொருள்களும் அபகரிக்கப்பட்டவர்களாக இருக்கின்றனரே, அது ஏன்?

தொடரும்..

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 12

உமாமகேஸ்வரஸம்வாதம்

 

உமை

மனிதர்களில் சிலர் கோணல் அங்கம் உடையவர்களாகவும், சிறிதான அங்கம் உடையவர்களாவும், ஒற்றைக்கை நொண்டிகளாகவும், கூனர்களாகவும், குள்ளர்களாகவும் காணப்படுகின்றனரே, அது ஏன்?

சிவன்

முன் ஜென்மத்தில் பொருள் ஆசையினால் மதிகெட்டு விற்றல் வாங்கல் ஆகியவற்றில் தானியங்களின் அளவுகளை குறைத்தும் அவற்றில் மாறுபாடு செய்தும் விலையை வித்யாசப்படுத்தியும் விற்பனை செய்த மனிதர்களும், கோபத்தினால் பிறரை அங்கக் குறைவு ஆக்கியவர்களும், மாமிசம் உண்டவர்களும், விஷயங்களை சரியாக தெரிவிக்காத மனிதர்கள் மற்றும் இவ்வகை நடைஉடைய மனிதர்கள் பின் ஜென்மங்களில் கோணல் அங்கம் உடையவர்களாகவும், சிறிதான அங்கம் உடையவர்களாவும், ஒற்றைக்கை நொண்டிகளாகவும், கூனர்களாகவும், குள்ளர்களாகவும் காணப்படுகின்றனர்.

உமை

மனிதர்களில் சிலர் பித்துபிடித்தவர்களாகவும், பேய் பிடித்தவர்களாகவும் காணப்படுகின்றனர், அது ஏன்?

சிவன்

பூர்வ ஜென்மத்தில் கர்வமும், தான் எனும் அகங்காரமும் படைத்து பிறரை பலவிதமாக பேசியும், மிகவும் நகைத்தும் இருந்த மனிதர்களும், பொருளாசையினால் மயக்கம் தரும் இன்பப்பொருளால் பிறரை மயக்கியவர்களும், வயதானவர்களையும், மேலானவர்களையும் வீணாக பரிகாசம் செய்த மூர்க்கர்களும் சாத்திரங்களை அறிந்த போதிலும் எப்பொழுதும் பொய் சொல்பவர்களாகவும் மற்றும் இவ்வகை நடத்தை உடைய மனிதர்கள் பின் ஜென்மத்தில் பித்துபிடித்தவர்களாகவும், பேய் பிடித்தவர்களாகவும் காணப்படுகின்றனர்.

உமை

சில மனிதர்கள் குழந்தைகள் இல்லாமல் துன்பப்படுகின்றனர், பலவகை முயற்சி செய்தும் சந்ததிகளை அடைவதே இல்லையே, அது ஏன்?

சிவன்

பூர்வ ஜென்மத்தில் எந்த பிராணிகளிடத்திலும் தயை இல்லாமலும், சிசுஹத்தி செய்து கொண்டும், மிருகங்களையும், பட்சிகளையும் உண்டும், பெரியோர்களை பகைத்தும், பிறர் பிள்ளைகள் மேல் பொறாமை கொண்டவர்களாகவும், சாத்திரத்தில் சொல்லியபடி சிராத்தம் முதலியவற்றால் பித்ருக்களை வணங்காமலும் மற்றும் இவ்வகை நடத்தையும் இருக்கும் மனிதர்கள் பின் ஜென்மங்களில் வெகுகாலம் கழித்து மானிட பிறப்பு அடையும் போது குழந்தைகள் இல்லாமலும், பலவகை முயற்சி செய்தும் சந்ததிகளை அடையாமலும் இருக்கின்றர். இதில் சந்தேகமில்லை.

உமை

சில மனிதர்கள் பயமுள்ள இடங்களில் வசித்துக் கொண்டும் எப்பொழுதும் பயமும் துயரமும் உள்ளவர்களாகவும் ஏழைகளாகவும் தவம் செய்துகொண்டும் மிகவும் கஷ்டப்படுகின்றனரே, அது ஏன்?

சிவன்

பூர்வ ஜென்மத்தில் எப்பொழுதும் பிறரை திட்டிக் கொண்டும், பயமுறுத்தியும் பலதீங்குள் செய்துகொண்டும் இருந்த மனிதர்களும், ஏழைகளுக்கு தாம் நினைத்தபடி  வட்டிக்கு கொடுத்தும் இவ்வாறு அவர்களை பயமுறுத்தியும், நாய்களைக் கொண்டு வேட்டையாடி பிராணிகளை பயமுறுத்தியும் இருந்த மனிதர்கள் மரணம் அடைந்தப்பின் யமதண்டையினால் பீடிக்கப்பட்டு வெகுகாலம் நரகத்தில் கிடந்து பின் மானிடத் தேகம் அடையும் போது அநேக கஷ்டங்களும், அநேக துயரம் நிரம்பின தேசங்களில் பிறந்து எதற்கும் பயப்படுகின்றனர்.

உமை

சில மனிதர்கள் கல்வியும் செல்வமும் பெற்றவர்களாக இருந்தும் அந்நிய தேசங்களில் அவர்களின் அதிகாரங்களுக்கு உட்பட்டவர்களாக இருக்கின்றனரே, அது ஏன்?

சிவன்

சில மனிதர்கள் தனம் தானியம் போன்றவை நிரம்பியவர்களாக இருந்தாலும் சிரத்தை இல்லாமல் முறைதவறி தானம் செய்கின்றனர். உடல் சுத்தம், ஆச்சாரம் போன்றவைகளை விட்டு தகுதி அற்றவகளுக்காக தானம் செய்வோரும், பெருமைக்காகவும் பிறரை அவமதிக்க தானம் செய்வோரும் மற்றும் இவ்வகை நடத்தை உடைய மனிதர்கள் கல்வியும் செல்வமும் பெற்றவர்களாக இருந்தும் அந்நிய தேசங்களில் அவர்களின் அதிகாரங்களுக்கு உட்பட்டவர்களாக இருக்கின்றனர்.

உமை

பூமியில் உள்ள மனிதர்களில் சிலர் சக்தி அற்றவர்களாகவும், ஆண்மை அற்றவர்களாகவும், பயன்பாடு அற்றவர்களாகவும், இழி தொழிலில் ஆசை உள்ளவர்களாகவும் கீழான எண்ணம் உடையவர்களோடு நட்பு உடையவர்களாகவும் காணப்படுகின்றனர். அது என்ன வகையான கர்மப் பலன்?

தொடரும்

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 11

உமாமகேஸ்வரஸம்வாதம்

உமை
சில மனிதர்கள் தொண்டை நோய் உடையவர்களாக இருந்து துன்பப்படுகின்றனரே, அது ஏன்?

சிவன்
எந்த மனிதர்கள் முன் ஜென்மங்களில் மதி கெட்டு கட்டுவது, அடிப்பது, கொல்லுவது ஆகிய வீண் தண்டனைகளால் பிறர் உருவை அழித்தும், அவர்கள் விருப்பத்தைக் கெடுத்தும், கெட்ட ஆகாரங்களை பிறருக்கு கொடுத்தும், பகையாலும் பொருள் ஆசையாலும் மனம் போனவாறு வைத்தியம் செய்தும், பிராணிகளை எவ்வித கருணையும் இன்றி கொன்றும் மற்றும் இவ்வகை நடத்தையோடு இருந்தவர்கள் பின்னொரு ஜென்மாவில் மானிட தேகம் எடுப்பாராயின் அவர்கள் தொண்டை நோய் உடையவர்களாக இருந்து துன்பப்படுகின்றனர். மற்றும் சிலர் புண் குஷ்டம், வெண் குஷ்டம் மற்றும் தோல் சம்மந்தமான வியாதிகள் உடையவர்களாகவும் துன்புறுகின்றனர்.

உமை
சில மனிதர்கள் அங்கக் குறைபாடு உடையவர்களாகவும், முடமானவர்களாகவும் இருப்பது எந்த கர்மத்தின் பலன்?

சிவன்
முன் ஜென்மத்தில் ஆசையாலும், அஞ்ஞானத்தாலும் விலங்குகளை கொன்றும், அவற்றின் அங்கங்களை அறுத்தும், அவற்றின் விருப்பங்களைக் கெடுத்தும், அவற்றின் நடையை தடுத்தும் இறக்கும் மனிதர்கள் பின்னொரு ஜென்மங்களில் மானிடப்பிறப்பை அடையும் போது அங்கக் குறைபாடு உடையவர்களாகவும், முடமானவர்களாகவும் பிறக்கிறார்கள் அல்லது பிறந்தபின் அவ்வாறு ஆகிறார்கள்.

உமை
சில மனிதர்கள் புண்களாலும் மற்றும் அது சார்ந்த வியாதிகளால் துன்புறுகின்றனரே அது ஏன்?

சிவன்
பூர்வ ஜென்மத்தில் தனது கை வலிமை குறித்து எண்ணம் கொண்டு பிற மனிதர்களை கைகளால் குத்தியும், சூலம் போன்ற ஆயுதங்களால் கிழித்தும் கொண்ட பாவிகள் பின் ஜென்மங்களில் புண்களாலும் மற்றும் அது சார்ந்த வியாதிகளால் துன்புறுகின்றனர்.

உமை
சில மனிதர்கள் காலில் எப்பொழுதும் நோய் உள்ளவர்களாக காணப்படுகின்றனரே, அது ஏன்?

சிவன்
எந்த மனிதர்கள் பூர்வ ஜென்மங்களில் கோபமும் லோபமும் கொண்டு தேவதைகள் இருக்கும் இடத்தை காலால் உதைத்தும், முழங்காலாலும், பின்னங்கால்களாலும் பிராணிகளை துன்புறுத்தியும் ஆகிய இவ்வகையான நடவடிக்கைகள் உள்ளவராக இருக்கின்றனரோ அவர்கள் மறுஜென்மங்களில் பாத வெடிப்பு முதலிய பலவகை கால் சம்மந்தமான வியாதிகளால் துன்புறுகின்றனர்.

உமை
பூமியில் அநேக மனிதர்கள் செல்வம் உடையவர்களாக இருந்தாலும், வறுமை உடையவர்களாக இருந்தாலும் வாதத்தினாலே, பித்தத்தினாலோ அல்லது இரண்டும் சேர்ந்தோ அல்லது இது போன்று பலவகை நோய்களாலும் துன்பப்படுகின்றனரே, அது என்ன வகை வினையின் பயன்?

சிவன்
எந்த மனிதர்கள் பூர்வ ஜென்மங்களில் அசுரத் தன்மை அடைந்து கோபம் கொண்டும், யாருக்கும் கட்டுப்படாமலும் கோபம் கொண்டும், குருவை பகைத்தும், எண்ணம், செயல் ஆகியவற்றால் பிறரை துன்புறுத்தியும், பிராணிகளிடத்தில் அன்பு இல்லாமல் அதை வெட்டியும், துன்புறுத்தியும் மற்றும் இவ்வகை செய்கைகள் உடையவர்களாக இருக்கிறார்களோ அவர்கள் பின்னொரு பிறப்பில் மானிட தேகம் எடுக்கும் போது வாதத்தினாலே, பித்தத்தினாலோ அல்லது இரண்டும் சேர்ந்தோ அல்லது இது போன்று பலவகை நோய்களாலும் துன்பப்படுகின்றனர். இன்னும் சிலர், வாயும் காசம் மற்றும் தாகம் பொன்றவற்றாலும் பலவகை புற்றுக்களாலும் காலில் பலவகை நோய் உள்ளவர்களாகவும் துன்புறுகின்றனர். செய்த கர்மத்தின் பலனை யாராலும் தடுக்க இயலாது.

உமை
மனிதர்களில் சிலர் கோணல் அங்கம் உடையவர்களாகவும், சிறிதான அங்கம் உடையவர்களாவும், ஒற்றைக்கை நொண்டிகளாகவும், கூனர்களாகவும், குள்ளர்களாகவும் காணப்படுகின்றனரே, அது ஏன்?

தொடரும்..

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 10

உமாமகேஸ்வரஸம்வாதம்

உமை
சில மனிதர்கள் பிறந்தது முதல் மற்றும் சிலர் பிறந்த பின்னர் ஏதோ ஒரு காரணத்தால் பல், கழுத்து கன்னம் ஆகியவற்றில் நோயுள்ளவர்களாகவும் முகத்தில் அதிக வியாதி உடையவர்களாகவும் காணப்படுகின்றனரே அது ஏன்?

சிவன்
நாவினால் மிக்க கடும் சொற்களையும், மற்றவர்களிடத்திலும், பெரியவர்களிடத்திலும் பொய்யையும், கொடும் பழியைச் சொல்லுகிறவர்களாகவும், கோபம் கொண்டவர்களாகவும், தன்னுடைய காரியத்திற்காக பொய்யை மிகுதியாக சொல்லுகிறவர்களாகவும் இருக்கும் மனிதர்களுக்கு நாவினால் பிணிகள் உண்டாகின்றன. கெடுதலை கேட்பவருக்கும், பிறர் செவிகளை கெடுப்பவருக்கும் பலவைகயான காது நோய்களை அடைகின்றனர். பல் நோய், தலை நோய், காது நோய் அனைத்தும் வினையின் பயனே.

உமை
மனிதர்களிலே சிலர் மார்பு நோய், பக்க சூலை, வயிற்று நோய் மற்றும் உள்ள கொடிய சூலை நோயினால் பீடிக்கப்பட்டு துன்பப்படுகின்றனரே, அது ஏன்?

சிவன்
எந்த மனிதர்கள் முன் ஜென்மங்களில் காமக் குரோதம் கொண்டவர்களாகவும், பிறருக்கு அளிக்காமல் தானே ஆகாரத்தினை உண்பவர்களாகவும், நம்பியவர்களுக்கு உண்ணத்தகாத உணவுகளையும் விஷத்தையும் கொடுத்தும் ஆசாரங்களை விட்டவர்களாகவும் இருப்பவர்கள் பின் ஏதாவது ஒரு முறை மனித பிறப்பு எடுக்கும் போது பலவிதமான பிணிகளால் துயர் பெறுகின்றனர். அவர்கள் இப்படி ஆவதற்கு காரணத்தை முன்னமே செய்து கொண்டனர்.

உமை
மனிதர்கள் கல்லடைப்பு, மது மேகம் போன்ற ஆண் உறுப்பு சார்ந்த வியாதிகளால் துயருருகின்றனரே, அது ஏன்?

சிவன்
எந்த மனிதர்கள் முன் ஜென்மங்களில் காமத்தினால் பிறன் மனைவிகளை சேர்ந்தும், விருப்பம் இல்லாத விதவைப் பெண்களுடன் பலவந்தமாக சேர்ந்தும், அழகினால் கர்வப்பட்டும் இருக்கும் மனிதர்கள் மரணமடைந்து பின்னொரு பிறவியில் மனித பிறவி எடுத்து ஆண் உறுப்பு சார்ந்த வியாதிகளால் துயருருகின்றனர்

உமை
சில மனிதர்கள் இளைத்தவர்களாக காணப்படுகின்றனரே, அது ஏன்?

சிவன்
எந்த மனிதர்கள் முன் ஜென்மங்களில் மாமிச உணவை மிக விருப்பி உண்டும், தனக்கு மட்டும் சுவை உள்ள உணவை விரும்பியும், மற்றவர்கள் புசிப்பதை கெடுப்பவர்களாகவும், அயலார் சுகங்களில் பொறாமை கொண்டவர்களாகவும் அதனால் துயரம் உடையவர்களாகவும் இருந்த மனிதர்கள் பின் ஜென்மத்தில் தேக சார்ந்த வியாதி உள்ளவர்களாக நரம்பு தளர்ச்சி உடையவராக இருத்து தீவிர பலனை அனுபவிக்கின்றனர்.

உமை
சில மனிதர்கள் தொண்டை நோய் உடையவர்களாக இருந்து துன்பப்படுகின்றனரே, அது ஏன்?

தொடரும்..

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 9

உமாமகேஸ்வரஸம்வாதம்

ஓவியம் : இணையம்

உமை

சில மனிதர்கள் வீடு , மனைவி மற்றும் குழந்தைகளோடும், ஆடை ஆபரணங்களோடும், சிறந்த புத்தியோடும், அதிகாரங்களோடும், அழகு ஆரோக்கியம் போன்றவைகளோடும் மனதிற்கு இனிய போகங்கள் நிரம்பியவர்களாக வியாதி இல்லாமல் சுற்றத்தாருடன் இடையூறு இல்லாமல் தினம் தோறும் மகிழ்ந்திருக்கின்றனரே, அது எந்த கர்மத்தின் பலன்?

சிவன்

முன் ஜென்மத்தில் செல்வம் உள்ளவர்களாக இருந்தும்   கல்வியும் நல்ல ஒழுக்கம் உள்ளவர்களாகவும், தானத்திலும் கல்வியில் விருப்பம் உள்ளவர்களாகவும், எப்பொழுதும் பிறருக்கு விருப்பமானதை அறிந்து அதை தருபவர்களாகவும், சத்தியத்தையும், பொறுமையையும் விடாதவர்களாகவும், பொருளாசை, பெண்ணாசை இல்லாதவர்களாகவும், சரியானவர்களுக்கு முறையாக தானம் செய்பவர்களாகவும், விரதங்களை செய்பவர்களாகவும் பிறர் துன்பத்தை தன் துன்பம் போல் நினைத்து அதனை விலக்க நினைப்பவர்களாகவும், இனிய ஒழுக்கம் உள்ளவர்களாகவும், தேவர்களை எக்காலத்திலும் பூஜிப்பவர்களாகவும் இருப்பவர்கள் மறு ஜென்மத்தில் அப்புண்ணீயங்களை அனுபவிக்க மேற்கூறியவாறு பிறக்கிறார்கள். அழகு, பொருள், தைரியம், ஆயுள், சுகம் அதிகாரம், தேகபலம் மற்றும் கல்வி அனைத்தும் ஆகிய எல்லா நலங்களும் தானத்தால் உண்டாகும். எல்லாம் தவத்தாலும் தானத்தாலும் உண்டாகும் என்பதை நீ அறிந்து கொள்.

உமை

மனிதர்களில் சிலர் செல்வம் அற்றவர்களாகவும், மிகத் துயரம் உள்ளவர்களாகவும், கொடுப்பதை அனுபவிக்க இயலாதவர்களாகவும், ஆதி ஆத்மிகம், ஆதி பௌதீகம், ஆதிதெய்வீகம் ஆகிய பயம் உள்ளவர்களாகவும், பிணியாலும் பசியாலும் வருந்துபவர்களாகவும், கெட்ட மனைவியால் அவமதிக்கப்படுபவர்களாகவும். எப்பொழுதும் இடையூற்றை அனுபவிப்பர்களாகவும் காணப்படுகின்றனரே அது ஏன்?

சிவன்

மனிதர்களில் சிலர் செல்வம் அற்றவர்களாகவும், மிகத் துயரம் உள்ளவர்களாகவும், கொடுப்பதை அனுபவிக்க இயலாதவர்களாகவும், ஆதிஆத்மிகம் (மற்ற உயிர்களால் நாம் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள்), ஆதிபௌதீகம் இயற்கையினால் நான் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் (நீர், நிலம், காற்று, ஆகாயம் தீ),  ஆதிதெய்வீகம் (நாம் செய்த வினைகளை இறையின் துணை கொண்டு அதை அனுபவித்தல்) ஆகிய பயம் உள்ளவர்களாகவும், பிணியாலும் பசியாலும் வருந்துபவர்களாகவும், கெட்ட மனைவியால் அவமதிக்கப்படுபவர்களாகவும். எப்பொழுதும் இடையூற்றை அனுபவிப்பர்களாகவும் காணப்படுகின்றனர். தாம் செய்த நல்வினையும் தீவினையும் முறையே சுகம் துக்கம் முதலியவற்றை உண்டாக்குகின்றன.

உமை

பிறவிக் குருடரும், பிறந்தபின் கண் போனவரும் உலகின் காணப்படுகின்றனரே அது ஏன்?

சிவன்

எந்த மனிதர்கள் காமத்தினால் பிறர் வீடுகளில் அலைந்து கொண்டும், பிறர் மனைவிகளை கெட்ட எண்ணங்களுடன் பார்த்துக் கொண்டும், கோபமும் ஆசையும் கொண்டவர்களாக மற்ற மனிதர்களின் கண்களை கெடுத்தும், பொருள்கள் பற்றி நன்கு அறிந்தும் அது மற்றி மாற்றுக் கருத்து உரைப்பவர்களாக இருக்கும் மனிதர்கள் இறந்தபின் யமனால் தண்டிக்கப்பட்டு வெகு காலம் நரகத்தில் இருந்து மானிட ஜென்மத்தை அடையும் போது பிறவிக் குருடர்களாகவும், பிறந்தபின் கண் கெட்டவர்களாகவும் கண் நோய் உடையவர்களாகவும் பிறக்கின்றனர். அதில் சந்தேகமில்லை.

உமை

சில மனிதர்கள் பிறந்தது முதல் மற்றும் சிலர் பிறந்த பின்னர் ஏதோ ஒரு காரணத்தால் பல், கழுத்து கன்னம் ஆகியவற்றில் நோயுள்ளவர்களாகவும் முகத்தில் அதிக வியாதி உடையவர்களாகவும் காணப்படுகின்றனரே அது ஏன்?

தொடரும்…

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 8

உமாமகேஸ்வரஸம்வாதம்

உமை 

மானிடர்களில் சிலர் கல்வியும் ஆத்ம ஞானமும் புத்திக் கூர்மையும் பேசும் திறமை ஆகியவை பெற்றிருந்தும் ஒழுங்காக முயற்சி செய்தும் தரித்திர்களாக காணப்படுகின்றனரே அது ஏன்?

சிவன்

எந்த மனிதர்கள் முன் ஜென்மங்களில் கல்வி அறிவு பெற்றிருந்தும் யாருக்கும் ஆதரவு தராமல் இருந்தும், அன்ன தானம் செய்யாமலும் தம் காரியங்களை மட்டும் பெரிதாக எண்ணி அதை பாராட்டிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் மறு ஜென்மங்களில் அறிவும் புத்திக் கூர்மையுடன் இருந்தும் வறியவராகவே இருக்கிறனர். விதையாதது முளையாது

உமை 

மிக்க செல்வம் உள்ள மனிதர்களும், உலகின் கல்வி அறிவும்,பகுத்தறிவும், புத்தி கூர்மையும், மன உறுதி இல்லாத வீணர்களாகவே காணப்படுகின்றனர், அது ஏன்?

சிவன்

முன் ஜென்மங்களில் கல்வி அறிவு அற்றவர்களாக இருந்தும், பகுத்தறிவு அற்றவர்களாக இருந்தும், ஏழைகளுக்கு உதவி செய்து  தானம் தருமங்களை செய்பவர்கள் அடுத்து வரும் பிறப்புகளில் அதை அப்படியே அனுபவிக்கின்றனர். மனிதன் கற்றவனாக இருந்தாலும், கல்லாதவனாக இருந்தாலும் தானத்தின் பலனை அடைகிறான்.தானமானது கல்வி அறிவு பார்ப்பது இல்லை. எப்படியும் அதன் பலனை தந்து விடும்.

உமை 

மனிதர்களில் சிலர் புத்தி கூர்மை உள்ளவர்களாகவும், கேட்டதை மறவாதவர்களாகவும், வார்த்தைகளை தெளிவாக உச்சரிப்பவர்களாகவும் இருக்கின்றனரே அது ஏன்?

சிவன்

ஞானத்திற்காக குருவிற்கு நன்றாக பணிவிடை செய்து அந்த குருவிடம் இருந்து முறைப்படி வித்தைகளை கற்றுக் கொண்டு பிறருக்கும் அம்முறை தவறாமல் அதை கற்பித்தும், தன்னுடைய ஞானத்தினால் கர்வப்படாமல் மனம், வாக்கு ஆகியவற்றால் அடக்கமுள்ளவர்களாகி  கலைகள் நிலை பெறும் முயற்சியை செய்து கொண்டு இருக்கிறார்களோ அவர்கள் மரணமடைந்து அடுத்துவரும் பிறப்புகளில் புத்தி கூர்மை உள்ளவர்களாகவும், கேட்டதை மறவாதவர்களாகவும், வார்த்தைகளை தெளிவாக உச்சரிப்பவர்களாகவும் இருக்கின்றனர்

உமை 

சில மனிதர்கள் பல வகையிலும் முயற்சி செய்தும் கேள்வியும், கல்வியும் புத்தி கூர்மையும் இல்லாதவர்களாக இருக்கின்றனரே, அது ஏன்?

சிவன்

எந்த மனிதர்கள் பூர்வ ஜென்மங்களில் கல்வியினால் கர்வம் கொண்டும், தற்புகழ்ச்சி செய்து கொண்டும், ஞானம் அடைந்ததால் தான் என்ற அகங்காரத்துடன் மதி கெட்டவர்களாகி எப்பொழுது பிறரை விட தனக்கு அதிகம் வித்தை தெரியும் என சொல்லிக் கொண்டும், பிறரை இகழ்ந்தும் அவர்கள் மேல் பொறாமை கொண்டும் அப்படிப்பட்டவர்கள் அநேக ஜன்மங்களுக்குப் பின் மானிட தேகம் எடுக்கும் போது பல வகையிலும் முயற்சி செய்தும் கேள்வியும், கல்வியும் புத்தி கூர்மையும் இல்லாதவர்களாக இருக்கின்றனர்

உமை 

சில மனிதர்கள் வீடு , மனைவி மற்றும் குழந்தைகளோடும், ஆடை ஆபரணங்களோடும், சிறந்த புத்தியோடும், அதிகாரங்களோடும், அழகு ஆரோக்கியம் போன்றவைகளோடும் மனதிற்கு இனிய போகங்கள் நிரம்பியவர்களாக வியாதி இல்லாமல் சுற்றத்தாருடன் இடையூறு இல்லாமல் தினம் தோறும் மகிழ்ந்திருக்கின்றனரே, அது எந்த கர்மத்தின் பலன்?

தொடரும்..

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 7

உமாமகேஸ்வரஸம்வாதம்

உமை :
மனிதர்களில் சிலர் அழகு உள்ளவர்களாகவும், லட்சணங்களுடன் கூடிய அவயங்கள் உடையவர்களாகவும், பார்வைக்கு இனியவர்களாகவும் காணப்படுகின்றனர் அது ஏன்?

சிவன் :
எந்த மனிதர்கள் முன் ஜென்மங்களில் இனிமையாக பேசுபவர்களாகவும், அசைவ உணவுகளை விடுத்து தர்மத்திற்காக அலங்காரங்களையும் வஸ்திரங்களையும் தானம் செய்து கொண்டும், பூமியை சுத்தப்படுத்திக் கொண்டும் இருக்கிறார்களோ அவர்கள் மறு ஜென்மத்தில் ஆசைபடத்தக்க அழகுள்ளவர்களாக பிறக்கிறார்கள்.

உமை :
மனிதர்களில் சிலர் விகார ரூபமுள்ளவர்களாக இருக்கிறார்களே அது ஏன்?

சிவன் :
மனிதர்கள் முன் ஜென்மத்தில் அழகிய வடிவம் பெற்றிருந்து அதன் காரணமாக கர்வமும் தான் மேல் எனும் எண்ணமுடையவர்களாகவும், அழகில்லாதவர்களை நகைத்தும், அவர்களை மனம் வருந்தச் செய்தும், மாமிசங்களை விருப்பப்பட்டு உண்டும், பொறாமை அனாச்சாரம் முதலிய நடவடிக்கைகளோடு இருந்தவர்கள் தண்டிக்கப்பட்டு மானிட ஜென்மம் அடையும் போது விகாரமுள்ளவர்களாகி அழகில்லாமல் விகார ரூபமுள்ளவர்களாக பிறக்கிறார்கள்.

உமை :
சிலர் அழகும் ஐஸ்வர்யமும் இல்லாமல் இருந்தாலும் மனதை கவரும் தன்மை உடையவர்களாகவும் பெண்களால் விரும்பப்படுபவர்களாகவும் இருப்பது ஏன்?

சிவன் :
எவர்கள் முந்தைய ஜென்மங்களில் இனிய சுபாவம் உள்ளவர்களாகவும், தன் மனைவியிடத்தில் திருப்தி உள்ளவர்களாகவும், அவர்களை விட்டு விலகாததன் பொருட்டு மன உறுதி உள்ளவர்களாகவும், மற்றவர்கள் வேண்டியபோது பானம், அன்னம் போன்றவற்றை கொடுப்பவர்களாகவும் சிறந்த நடத்தையோடு இருப்பவர்களாகவும் இருக்கிறார்களோ அவர்கள் மறுஜென்மத்தில் அழகுடையவர்களாக பிறக்கிறார்கள்.

உமை :
மனிதர்களில் செல்வம் போன்றவற்றை பெற்றிருந்தும் இன்னாதவர்களாக இருக்கின்றனரே அது ஏன்?

சிவன் :
முன் ஜென்மத்தில் எண்ணம், சொல் மற்றும் செயல் ஆகியவற்றால் பிறரை துன்புறுத்தியும், யாரையும் காப்பாற்றாமலும் இருக்கிறார்களோ அவர்கள் செல்வம் போன்றவற்றை பெற்றிருந்தும் இன்னாதவர்களாக இருக்கின்றனர்.

உமை :
மானிடர்களில் சிலர் கல்வியும் ஆத்ம ஞானமும் புத்திக் கூர்மையும் பேசும் திறமை ஆகியவை பெற்றிருந்தும் ஒழுங்காக முயற்சி செய்தும் தரித்திர்களாக காணப்படுகின்றனரே அது ஏன்?

தொடரும்..

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 6

(

இந் நிகழ்வுகள் மகாபாரதம் அனுசாஸன பர்வத்தில் இடம் பெற்றுள்ளவை

தொடக்கம் 204 அத்யாயம்.

கூடி இருக்கும் ரிஷிகள் கிருஷ்ணரை பார்த்து ‘உலகில் ஆச்சரியமானது ஒன்றை நீங்கள் கண்டிருந்தாலும், கேட்டிருந்தாலும் அதை உரைக்க வேண்டும்’ என்றனர்.

‘நான் மானிட வடிவத்தில் இருப்பதால் எதுவும் உரைப்பதிற்கு இல்லை, அதனால் என் அறிவும் வரையறைக்கு உட்பட்டது என்றார்.

எனவே ரிஷிகள் அனைவரும் நாரதரே உக்கிரமான தவம் உடையவர், கிருஷ்ணருக்கு அன்பானவர், பழைய சரித்திரங்கள் அனைத்தும் அறிந்தவர் என்று நிச்சயித்து அவரை அணுகினார்கள்

அவர் உமா மகேஷ்வர ஸம்வாதம் குறித்து சொல்லத் தொடங்கினார்.

)

உமை : 

மூன்று விதமான மனிதர்கள் எப்போதும் காணப்படுகிறார்கள். சிலர் எவ்வித முயற்சியும் இன்றி உயர்ந்த அதிகாரத்தையும் செல்வத்தையும் அடைகின்றனர். சிலர் முயற்சி செய்து பாக்கியங்களை அடைகின்றனர். சிலர் எவ்வித முயற்சி செய்தும் ஒன்றையும் அடையாமல் இருக்கின்றனர். அது ஏன்?

சிவன் : 

உலகில் எந்த மனிதர்கள் தானத்தையும் தர்மத்தையும் முக்கியமாக நினைத்து தாமே தேடிப் போய் தானம் முதலியவைகளை வாங்கச் செய்கிறார்களோ அவர்கள் அடுத்து வரும் பிறவிகளில் முயற்சி இல்லாமலே அதன் பலன்களை அனுபவிக்கின்றனர்.

எந்த எந்த காலங்களில் யாசிக்கும் போது தானம் அளிக்கப்பட்டதோ அதன் பலனை அடுத்துவரும் பிறப்பில் சிறிது சிரமப்பட்டு முயற்சிக்குப் பின் அந்த அந்த காலகட்டங்களில் பெறுகின்றனர்.

மனிதர்கள் கெட்ட எண்ணம் கொண்டவர்களாக யாசிப்பவர்களுக்கு எவ்வகையிலும் எந்த ஒன்றையும் கொடாமல் கோபிக்கின்றனரோ அவர்கள் மறு பிறப்பில் எவ்வித முயற்சி செய்தும் ஒன்றையும் அடையாமல் இருக்கின்றனர்.

விதை விதைக்காமல்  முளை  முளைப்பதில்லை. அது போலவே தான தர்ம பலன்களும். மனிதன் எதை எதைக் கொடுக்கிறானோ அதை அதை மட்டுமே அடைகிறான்.

உமை : 

‘சிலர் வயது முதிர்ந்து, தேகங்கள் தளர்ச்சி அடைந்த பின் அனுபவிக்க தகாத காலத்தில் செல்வங்களையும் போக பாக்கியங்களையும் அடைகின்றனர், எது ஏன்?

சிவன் : 

சிலர், செல்வம் பெற்றிருந்தும் தர்ம காரியங்களை வெகு நாட்கள் மறந்திருந்து, தனது உயிருக்கு முடிவுக்காலம் வரும்போது பிணியால் துன்பப்படும் போது தானங்களை கொடுக்கவும் தர்மங்களை செய்யவும் தொடங்குகின்றனர். அவர்கள் மறு ஜென்மங்களில் கஷ்டப்படுபவர்களாகப் பிறந்து இளமை கடந்தப்பின் முதுமை அடைந்து முன் பிறவிகளில் செய்த தான தர்ம பலன்களை அனுபவிக்கின்றனர். இவ்வாறாக அவர்களுக்கு செல்வங்களும் போக பாக்கியங்களும்அவரவர்களின் கர்மம் காலம் கடந்து வருகிறது.

உமை : 

சிலர் போக பாக்கியம் பெற்றிருந்தும் அவற்றை அனுபவிக்க இயலாதவர்களாக இருக்கிறார்களே அது ஏன்?

சிவன் : 

எவர்கள் வியாதியால் பீடிக்கப்பட்டு, பிழைப்பதில் எண்ணம் விட்டப் பிறகு தான தர்மம் செய்ய ஆரம்பிக்கிறார்களோ, அவர்கள் அடுத்துவரும் பிறவிகளில் அதன் பலங்களை அடைந்து நோய்வாய் பட்டவர்களாக அனுபவிக்க இயலாதவர்களாக ஆகின்றனர்

உமை : 

மனிதர்களில் சிலர் அழகு உள்ளவர்களாகவும், லட்சணங்களுடன் கூடிய அவயங்கள் உடையவர்களாகவும், பார்வைக்கு இனியவர்களாகவும் காணப்படுகின்றனர் அது ஏன்?

தொடரும்

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 5

உமாமகேஸ்வரஸம்வாதம்

(

இந் நிகழ்வுகள் மகாபாரதம் அனுசாஸன பர்வத்தில் இடம் பெற்றுள்ளவை

தொடக்கம் 204 அத்யாயம்.

கூடி இருக்கும் ரிஷிகள் கிருஷ்ணரை பார்த்து ‘உலகில் ஆச்சரியமானது ஒன்றை நீங்கள் கண்டிருந்தாலும், கேட்டிருந்தாலும் அதை உரைக்க வேண்டும்’ என்றனர்.

‘நான் மானிட வடிவத்தில் இருப்பதால் எதுவும் உரைப்பதிற்கு இல்லை, அதனால் என் அறிவும் வரையறைக்கு உட்பட்டது என்றார்.

எனவே ரிஷிகள் அனைவரும் நாரதரே உக்கிரமான தவம் உடையவர், கிருஷ்ணருக்கு அன்பானவர், பழைய சரித்திரங்கள் அனைத்தும் அறிந்தவர் என்று நிச்சயித்து அவரை அணுகினார்கள்

அவர் உமா மகேஷ்வர ஸம்வாதம் குறித்து சொல்லத் தொடங்கினார்.

)

உமை : 

மூன்று விதமான மனிதர்கள் எப்போதும் காணப்படுகிறார்கள்.  எவ்வித  முயற்சியும் இன்றி உயர்ந்த அதிகாரத்தையும் செல்வத்தையும் அடைந்து அனுபவிக்கின்றனர், சிலர் முயற்சி செய்து உயர் நிலைகளை அடைகின்றனர்.  மற்றவர்கள் எந்த முயற்சி செய்தாலும் ஒன்றையும் அடைய இயலாதவராக  இருக்கின்றனர், அது ஏன்?

சிவன் : 

பிரம்மாவிடத்தில் விருப்பு வெறுப்புகள் இன்மையால் அவர் உலகில் உள்ள மனிதர்களை சரி சமமாகவே படைத்தார். கால வித்யாசத்தினால் மாறு பாடு அடைந்தார்கள். எனவே அவர்கள் பிரம்மாவிடம் சென்று காரணம் அறிய விரும்பினார்கள்.அப்போது பிரம்ம தேவர், ‘என்னை குற்றம் சொல்லாதீர்கள்,உங்கள் கர்மத்தை நினையுங்கள்.உங்கள் நல்லதும், தீயதும் உங்களால் தீர்மானிக்கப்படுகிறது. தானே தன் வினைப்பயன்களை அனுபவிக்கவேண்டும். மற்றொருவர் அனுபவிக்க தகாது’ என்று வாக்குரைத்தார்.  ஆகவே உமையே முன் ஜன்மங்களில் தர்மம் செய்தவர்கள் அதன் தொடர்ச்சியாக உயர்ந்த அதிகாரத்தையும் செல்வத்தையும் அடைந்து அனுபவிக்கின்றனர். மற்றவர்களின் தூண்டுதலால் தர்மம் செய்பவர்கள் அடுத்துவரும் பிறப்புகளில்  முயற்சி செய்து உயர் நிலைகளை அடைகின்றனர். செல்வத்தாலும், பதவிகளாலும் செருக்கு கொண்டு தம்மை மட்டுமே நினைப்பவர்கள் அடுத்துவரும் பிறப்புகளில் எந்த முயற்சி செய்தாலும் ஒன்றையும் அடைய இயலாதவராக  இருக்கின்றனர் என்றார்.

உமை : 

‘மனிதர்களில் சிலர் மிக்க செல்வம் மற்றும் வசதிகள் இருந்தும் அதை அனுபவிக்க இயலாதவர்களாக இருக்கிறார்களே அது ஏன்? என்றாள்

சிவன் : 

தர்மம் செய்தால் கூட தன் விருப்பமின்றி சிரத்தை இல்லாமல் செய்பவர்கள் அடுத்துவரும் பிறவிகளில் மிக்க செல்வம் மற்றும் வசதிகள் இருந்தும் அதை அனுபவிக்க இயலாதவர்களாக இருக்கிறார்கள்.

உமை : 

சில மனிதர்கள் தனம் இல்லாமல் இருந்தாலும் சுகப்படுபவர்களாகவே இருக்கின்றனரே, அது ஏன்? என்றாள்.

சிவன் : 

எவர்கள் தர்மத்தில் விருப்பமும் தயையும் உள்ளவர்களாகி பிறர் துன்பத்தை அறிந்து தமது வறுமையிலும் பிறர்க்கு உதவி செய்கிறார்களோ அவர்கள் அடுத்து வரும் பிறப்புகளில்தனம் இல்லாமல் இருந்தாலும் சுகப்படுபவர்களாகவே இருக்கின்றனர்.

உமை : 

மூன்று விதமான மனிதர்கள் எப்போதும் காணப்படுகிறார்கள். சிலர் எவ்வித முயற்சியும் இன்றி உயர்ந்த அதிகாரத்தையும் செல்வத்தையும் அடைகின்றனர். சிலர் முயற்சி செய்து பாக்கியங்களை அடைகின்றனர். சிலர் எவ்வித முயற்சி செய்தும் ஒன்றையும் அடையாமல் இருக்கின்றனர். அது ஏன்? என்றாள்.

தொடரும்

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 4

உமாமகேஸ்வரஸம்வாதம்

உமை :  நான்கு வகையான வழிமுறைகளானபிரம்மச்சாரியன், கிரகஸ்தன், வான பிரஸ்தன் மற்றும் சந்நியாசி இவர்களின் கடமைகளை கூறுங்கள்.

 

சிவன் :எல்லா வகையிலும் கிரகஸ்தர ஆஸ்ரமமே முதன்மையானதும்  முக்கியமானதும்ஆகும். நீராடுதல், தன் மனைவியோடு திருப்தியாக இருந்தல், தானம்,யாகம் போன்றவை விட்டப்போகாமல் காத்தல், விருந்தினர்களை உபசரித்தல், மனம் வாக்கு செயல் ஆகிய எல்லாவற்றாலும் ஒன்றாக இருத்தல், பெரும்  துன்பங்களையும் ஏற்றுக் கொள்ளுதல்  ஆகியவை முக்கிய தர்மங்கள்.

மனவுறுதியுடன் காட்டில் இருந்தல், நல்ல பழங்களை உண்ணுதல், தரையில் படுத்தல்,  சடை தரித்தல், தோல் ஆடை அணிதல், தேவர்களையும் விருந்தினர்களையும்  உபசரித்தல் ஆகியவை வானபிரஸ்தனின் முக்கிய கடமைகள்.

வீட்டை விட்டு வெளியே வசித்தல், பொருள் இல்லாமல் இருத்தல், பொருளீட்ட முயற்சிக்காமலும் இருத்தல், கள்ளமில்லாமல் இருத்தல், எங்கும்  யாசித்து  உணவு பெறுதல், எந்த தேசம் சென்றாலும் தியானத்தை கைவிடாமல் இருந்தல். பொறுமை தயையுடன்  இருந்தல், எப்பொழுதும் தத்துவ ஞானத்தில் பற்று  கொண்டு இருத்தல் போன்றவை  சந்நியாசியின் தர்மங்கள்.

 

உமை :  இந்த ரிஷிகள் தவம் இயற்றுதலை முதன்மையாகக் கொண்டுள்ளனர்.  அது குறித்து விளக்க வேண்டும்.

 

சிவன் : கிரகஸ்தனாக இருந்து நன் மக்களைப் பெறுவதால் பித்ரு கடன் நீங்கும்.  உறுதியுடன் மனதை அடக்கி மனைவியுடன் வானப்ரஸ்தத்தில்  வசிக்க வேண்டும். சாஸ்திரத்தில் சொல்லப்பட்டவாறு(தன் குருவின் வழி – என்று நான் பொருள் கொள்கிறேன்) தீஷை எடுத்துக் கொள்ள வேண்டும். சிறந்த புண்ணிய நதிகளில் நீராட வேண்டும். மனம் சலியாமல் அனுட்டானம் செய்ய வேண்டும்.  விருந்தினர்களை  அன்புடன் வரவேற்று, இருக்கை அளித்து அவர்களுக்கு  அன்னம் இடவேண்டும். இது வான பிரஸ்தனின் கடமைகள்.

வனத்தை ஆச்சாரியன் போல் கருதி வசிக்க வேண்டும்.விரதங்களையும்(உணவினை விலக்குதல்), உபவாசக்களையும்(இறை நினைவோடு இருத்தல்) மிகுதியாக கொள்ளவேண்டும். ரிஷிகளில் சிலர் மனைவிகளோடு இருக்கிறார்கள். அவர்கள் விந்திய மலைச் சாரலிலும், நதிக் கரையிலும் வசிக்கிறார்கள். அவர்களும் தவ  சீலர்களே. கொல்லாதிருத்தல், தீங்கு செய்யாதிருத்தல், பிற உயிர்கள் இடத்தில் அன்போடு இருத்தல், தன் மனைவியோடு மட்டும் சேர்ந்து இருத்தல்  ஆகியவைகளும் இவர்களது தர்மத்தில் அடக்கம்.

 

உமை :  மூன்று விதமான மனிதர்கள் எப்போதும் காணப்படுகிறார்கள். எவ்வித  முயற்சியும் இன்றி உயர்ந்த அதிகாரத்தையும் செல்வத்தையும் அடைந்து அனுபவிக்கின்றனர், சிலர் முயற்சி செய்து உயர் நிலைகளை அடைகின்றனர்.  மற்றவர்கள் எந்த முயற்சி செய்தாலும் ஒன்றையும் அடைய இயலாதவராக  இருக்கின்றனர், அது ஏன்?

 

தொடரும்..

 

*வாருணை  – மதிமண்டலத்தில் ஊறும் அமுதம்

 

புகைப்படம் : இணையம்

 

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 3

உமாமகேஸ்வரஸம்வாதம்
உமை :  உமது நிறம் செம்மட்டை நிறமானதும் விகாரமும் பயங்கரமானதும் சாம்பல் பூசப்பட்டதாகவும் விகாரமான கண்கள் உடையதாகவும் கூரான  கோரைப்பற்கள் உடையதாகவும் ஜடை உடையதாகவும் புலியின் தோல் உடுத்தியதாகவும் உமது நிறம் செம்மட்டை நிறமானதும் விகாரமும் பயங்கரமானதும் சாம்பல் பூசப்பட்டதாகவும் விகாரமான கண்கள் உடையதாகவும் கூரான கோரைப்பற்கள் உடையதாகவும் ஜடை உடையதாகவும் புலியின் தோல் உடுத்தியதாகவும் இருப்பது ஏன்?
 
சிவன் :  உலகில் குளிர்ச்சி, வெம்மை போன்று இருமைகள் இருப்பதால், அதைச் சார்ந்த உயிர்கள் சந்திரன் போன்று குளிர்வும், சூரியன் போன்று வெம்மையும் உடையதாக இருக்கின்றன. விஷ்ணுவானவர் குளிர் பொருந்திய வடிவம் உடையவராக இருக்கிறார். நான் வெம்மை பொருந்திய வடிவில் நிலையாக இருக்கிறேன். உக்கிர வடிவமும், சிவந்த கண்களும், சூலமும் கொண்ட இந்த தேகத்தால் எப்பொழுதும் உலகினைக் காக்கிறேன். இந்த ரூபம் உலகின் நன்மைக்காக ஏற்படுத்தப்பட்டது. வேறு வடிவம் கொண்டால் உலகின் இயக்கங்களில் தடுமாற்றம் உண்டாகும். அதன் பொருட்டே இவ்வடிவம்.
 
உமை :  நீங்கள் சந்திரனை பிறையாக அணியக் காரணம் என்ன?
 
சிவன் :தட்ச யாகத்தின் பொருட்டு கோபமுற்று இருந்தேன். அதனால் தேவர்கள் என்னால் துரத்தப்பட்டார்கள். என்னால் உதைக்கப்பட்டும் கூட சந்திரன் என்னிடத்தில் நல்வார்த்தை பேசி என்னிடம் வேண்டிக் கொண்டான். அன்று முதல் சந்திரனை என் தலையில் அணிந்து கொண்டேன்.
 
இதன் பிறகு பல விதமான துதிகளால் ரிஷிகளும், முனிவர்களும் ஈசனையும், உமா தேவியையும் துதித்தனர்.
 
உமை :  நான்கு வகையான வழிமுறைகளான பிரம்மச்சாரியன், கிரகஸ்தன், வான பிரஸ்தன் மற்றும் சந்நியாசி இவர்களின் கடமைகளை கூறுங்கள்.

உமை :   இந்த ரிஷிகள் தவம் இயற்றுதலை முதன்மையாகக் கொண்டுள்ளனர். அது குறித்து விளக்க வேண்டும்.
தொடரும்..

              *வாருணை  – மதிமண்டலத்தில் ஊறும் அமுதம்
               புகைப்படம் : இணையம்
 

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 2

உமாமகேஸ்வரஸம்வாதம்
(
இந் நிகழ்வுகள் மகாபாரதம் அனுசாஸன பர்வத்தில் இடம் பெற்றுள்ளவை
தொடக்கம் 204 அத்யாயம்.
கூடி இருக்கும் ரிஷிகள் கிருஷ்ணரை பார்த்து ‘உலகில் ஆச்சரியமானது ஒன்றை நீங்கள் கண்டிருந்தாலும்கேட்டிருந்தாலும் அதை உரைக்க வேண்டும்‘ என்றனர்.
நான் மானிட வடிவத்தில் இருப்பதால் எதுவும் உரைப்பதிற்கு இல்லைஅதனால் என் அறிவும் வரையறைக்கு உட்பட்டது என்றார்.
எனவே ரிஷிகள் அனைவரும் நாரதரே உக்கிரமான தவம் உடையவர்கிருஷ்ணருக்கு அன்பானவர்பழைய சரித்திரங்கள் அனைத்தும் அறிந்தவர் என்று நிச்சயித்து அவரை அணுகினார்கள்
அவர் உமா மகேஷ்வர ஸம்வாதம் குறித்து சொல்லத் தொடங்கினார்.
)

        உமை :  வேறு வாகனங்கள் இருக்கையில் நீங்கள் ஏன் ரிஷபத்தை வாகனமாக கொண்டுள்ளீர்கள்?
சிவன்  : முன் சிருஷ்டியில் பசுக்கள் வெள்ளை நிறமுடையனவாக இருந்தன. அப்போது உலக நன்மைக்காக ஒற்றைக்காலில் நின்று தவம் செய்து கொண்டு இருந்தேன். அப்போது அந்த பசுக்கள் நான் இருந்த இடம் வந்து அந்த இடத்தை இடித்தன. அதனால் கோபம் கொண்டு அப்பசுக்களை எரித்துவிட்டேன். அதில் இந்த ரிஷபம் தன் தவறை உணர்ந்து என்னிடம் வேண்டிக் கொண்டது.
 
அது முதல் பசுக்கள் அடக்க உள்ளவைகளாகவும், பல நிறமுடையவைகளாகவும் ஆயின. சாபம் விலக்கப்பட்டதால் இப் பசு மாத்திரம் வெள்ளை நிறமுடையதாகவும், எனக்கு வாகனமாகவும் ஆனது.அதனால் தேவர்கள் என்னை பசுபதியாகச் செய்தனர்.
உமை :  மங்களகரமான வீடுகளும், அதில்  அழகிய விலங்குகளும் பிராணிகளும் இருக்கையில் நீர் ஏன் மயிர்களாலும், எலும்புகளாலும் அருவருக்கத்தக்க மண்டை ஓடுகள் நிரம்பியதும் , நரிகளும் கழுகளும் சேர்ந்திருக்கும் பிணப்புகையினால் மூடப்பட்டதுமான மிகக் கொடிய பயங்கரமான மயானத்தில் சந்தோஷமாக இருக்கீறீர்? அது எதனால் என்று எனக்கு சொல்லக் கடவீர்.
சிவன்  : முன்னொரு யுகத்தில் வெகு சுத்தமான இடத்தை நான் தேடி அடைந்த போது சுத்தமான இடம் கிடைக்கவில்லை. அப்போது பூதசிருஷ்டி உண்டானது. கொடிய கோரப்பற்களை உடைய பிசாசுகளும், பிற உயிர்களை கொன்று உண்ணும் பூதங்களும் உலகம் எங்கும் திரிந்தன. இவ்வாறு பிராணிகள் இல்லாததால் உலகை இப் பூதங்களிடம் இருந்து காப்பதற்காக பிரம்ம தேவர் இப் பூத, பிசாசங்களை அழிக்குமாறு வேண்டிக் கொண்டார். பிராணிகளின் நன்மைக்காக நான் இதை ஏற்றிக் கொண்டேன்.
 
இம் மயானத்தை விட பரிசுத்தமான இடம் வேறு எதுவும் இல்லை. மனித சஞ்சாரம் இல்லாததால் இம் மயானம் மிகப் புனிதமானது. எனவே பூதங்களை மயானத்தில் நிறுத்தினேன். அவைகளை விட்டுப் பிரிய மனம் இல்லை. எனவே தவம் செய்பவர்களும், மோட்சத்தை விரும்புவர்களும் பரிசுத்தமான இம் மயானத்தை விரும்புகிறார்கள். வீரர்களில் இடமாக இருப்பதால இதை நான் எனது இடமாகக் கொண்டேன்.
 
காலைப் பொழுதிலும், அந்தி சந்தியிலும், ருத்ர தேவதையான திருவாதிரை நட்சத்திரத்திலும் தீர்க்க ஆயுளை விரும்புவர்கள் செல்லக் கூடாது. இன்னும் என்ன கேட்க விரும்புகிறாய்?
உமை :  உமது நிறம் செம்மட்டை நிறமானதும் விகாரமும் பயங்கரமானதும் சாம்பல் பூசப்பட்டதாகவும் விகாரமான கண்கள் உடையதாகவும் கூரான கோரைப்பற்கள் உடையதாகவும் ஜடை உடையதாகவும் புலியின் தோல் உடுத்தியதாகவும் உமது நிறம் செம்மட்டை நிறமானதும் விகாரமும் பயங்கரமானதும் சாம்பல் பூசப்பட்டதாகவும் விகாரமான கண்கள் உடையதாகவும் கூரான கோரைப்பற்கள் உடையதாகவும் ஜடை உடையதாகவும் புலியின் தோல் உடுத்தியதாகவும் இருப்பது ஏன்?
 
தொடரும்..
                           
                               *வாருணை  – மதிமண்டலத்தில் ஊறும் அமுதம்
               புகைப்படம் : இணையம்

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 1

உமாமகேஸ்வரஸம்வாதம்
(

இந் நிகழ்வுகள் மகாபாரதம் அனுசாஸன பர்வத்தில் இடம் பெற்றுள்ளவை
தொடக்கம் 204 அத்யாயம்.
கூடி இருக்கும் ரிஷிகள் கிருஷ்ணரை பார்த்து ‘உலகில் ஆச்சரியமானது ஒன்றை நீங்கள் கண்டிருந்தாலும்கேட்டிருந்தாலும் அதை உரைக்க வேண்டும்‘ என்றனர்.
நான் மானிட வடிவத்தில் இருப்பதால் எதுவும் உரைப்பதிற்கு இல்லைஅதனால் என் அறிவும் வரையறைக்கு உட்பட்டது என்றார்.
எனவே ரிஷிகள் அனைவரும் நாரதரே உக்கிரமான தவம் உடையவர்கிருஷ்ணருக்கு அன்பானவர்பழைய சரித்திரங்கள் அனைத்தும் அறிந்தவர் என்று நிச்சயித்து அவரை அணுகினார்கள்

அவர் உமா மகேஷ்வர ஸம்வாதம் குறித்து சொல்லத் தொடங்கினார்.

)

உமை : பகவானே உமது கீழ்திசை முகம் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறதே, வடக்கு மற்றும் மேற்கு திசை முகங்கள் பார்க்க அழகாக இருக்கிறது, தென் திசை முகம் ஜடைகளால் மூடப்பட்டு பயங்கரமாக இருக்கிறது அது ஏன்?
சிவன்    : கிழக்கில் உள்ள முகம் எப்பொழுதும் தவம் செய்து கொண்டிருக்கும்; தென் திசை முகம் பிரஜைகளை(உயிர்களை) சம்ஹாரம் செய்யும். மேற்கு திசை முகம் எப்பொழுதும் ஜனங்களின் காரியங்களை கவனித்துக் கொண்டிருக்கும். வட திசை முகம் எப்பொழுதும் வேதம் ஓதிக் கொண்டிருக்கும். இதன் காரணமாகவே வெவ்வேறு திசை முகங்கள் வெவ்வேறு விதமாக இருக்கிறது. இன்னும் என்ன கேட்க விரும்புகிறாய்?
உமை :    உமது கழுத்து மயில் போன்று கரு நீலம் உடையாதாக இருப்பது எதனால்?  
சிவன்  : முன்னொரு யுகத்தில் தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த பொழுது எல்லா உலகங்களையும் அழிக்கும் விஷம் உண்டாயிற்று. தேவர்கள் முதலானவர்கள் அதைக் கண்டு அஞ்சினர். லோகத்தின் நன்மைக்காக அந்த விஷத்தை நான் அருந்தினேன். அதனானே தான் என் கழுத்து நீல நிறமானது, அதனாலே எனக்கு நீல கண்டன் என்ற பெயர் ஏற்பட்டது. இன்னும் என்ன கேட்க விரும்புகிறாய்?
உமை அனேக ஆயுதங்கள் இருக்க நீர் ஏன் பினாகத்தை வைத்து கொள்ள கருதுவது ஏன்?
சிவன்  : முன்னொரு காலத்தில் கண்வர் என்னும் மகரிஷி ஒருவர் இருந்தார். கடுமையாக தவம் செய்ததன் காரணமாக அவர் தலையில் நாளடைவில் புற்று உண்டானது.அதிலிருந்து மூங்கில் முளைத்தது.  அதனை பொறுத்துக் கொண்டு அவர் தனது தவத்தினை தொடர்ந்து செய்து வந்தார். தவத்தினால் பூஜிக்கப்பட்ட பிரம்ம தேவர் அவருக்கு வரம் அளித்து பின் அந்த மூங்கிலை எடுத்து வில்லாக செய்தார். என்னிடத்திலும் விஷ்ணுவிடத்திலும் சாமர்த்தியம் இருப்பதை அறிந்து இரண்டு வில் செய்து எங்களிடம் அளித்தார். பினாகம் என்பது என் வில். சார்ங்கம் என்பது விஷ்ணுவின் வில். அவ்வாறு செய்தது போக மீதமிருந்த மூங்கிலையும் வில்லாக செய்தார். அதுவே காண்டீவம். குற்றம் அற்றவளே, இந்த ஆயுதங்களின் வரலாற்றை உனக்குச் சொன்னேன், இன்னும் என்ன கேட்க விரும்புகிறாய்?
உமை வேறு வாகனங்கள் இருக்கையில் நீங்கள் ஏன் ரிஷபத்தை வாகனமாக கொண்டுள்ளீர்கள்?
தொடரும்
*வாருணை  – மதிமண்டலத்தில் ஊறும் அமுதம்
புகைப்படம் : இணையம்

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும்

( நீண்ட கால விருப்பம் இது. இது குறித்து எழுத நினைக்கும் போதெல்லாம் இதன் எல்லை அற்ற விரிவு என்னை மௌனமாக்கி விடும். காரணங்கள் அற்று ஒரு உந்துதலில் இதை எழுத ஆரம்பித்திருக்கிறேன். இதனை எழுத எல்லா காலங்களிலும் எல்லா இடங்களிலும் நீக்க மற நிறைந்திருக்கும் சிவனும், சக்தியும், சிவனுக்கு நிகரா இருப்பினும் என்றும் தன்னை தன்னை வெளிப்படுத்தாது அருள் காட்டும் எனது குருவருளும் துணை செய்யட்டும் )
இந் நிகழ்வுகள் மகாபாரதம் அனுசாஸன பர்வத்தில் இடம் பெற்றுள்ளவை
தொடக்கம் 204 அத்யாயம்.
கூடி இருக்கும் ரிஷிகள் கிருஷ்ணரை பார்த்துஉலகில் ஆச்சரியமானது ஒன்றை நீங்கள் கண்டிருந்தாலும், கேட்டிருந்தாலும் அதை உரைக்க வேண்டும்என்றனர்.
நான் மானிட வடிவத்தில் இருப்பதால் எதுவும் உரைப்பதிற்கு இல்லை, அதனால் என் அறிவும் வரையறைக்கு உட்பட்டது என்றார்.
எனவே ரிஷிகள் அனைவரும் நாரதரே உக்கிரமான தவம் உடையவர், கிருஷ்ணருக்கு அன்பானவர், பழைய சரித்திரங்கள் அனைத்தும் அறிந்தவர் என்று நிச்சயித்து அவரை அணுகினார்கள்.
அவர் உமா மகேஷ்வர ஸம்வாதம் குறித்து சொல்லத் தொடங்கினார்.
ஒரு முறை அனைத்தும் அறிந்த தேவி, விளையாட்டாக சிவனின் கண்களை மூடினார். உலகத்தினை நிறைவு செய்யும் பிரளம் போன்ற நிகழ்வு உண்டானது. எனவே சிவனிடத்தில் இருந்து பிரளயாக்கினிக்கு நிகரான ஒளி நிரம்பிய மூன்றாவது கண் உண்டானது.
அந்த ஒளி இமயமலையை எரித்துவிட்டது. இதனால் உமை துயருற்றாள். சிவன் குளிர்ந்த மனத்துடன் மீண்டும் இமயமலையை முன்போல் தோற்றுவித்தார்.
உமை : பகவானே, இது எனக்கு மிகவும் ஆச்சரியம் ஊட்டுவதாக இருக்கிறது. அக்கினி என்பிதாவான இமயமலையை எரித்து விட்டது, மீண்டும் நீங்கள் பார்த்தவுடன் அது முன்போல் ஆனது. அது எவ்வாறு?
சிவன் : நானே எல்லா உலகங்களுக்கும் முதல்வன் என்றறி. எல்லா உலகங்களும் விஷ்ணுவுக்கு எப்படியோ அப்படியே எனக்கும் உட்பட்டவை. விஷ்ணு படைப்பவர், நான் காப்பவன். சிறுமி ஆகிய நீ இதை அறியாமல் என் கண்களை மூடினாய்.சந்திர சூரியர்கள் இல்லாமையால் உலகம் இருளில் மூழ்கியது. எனவே உலகை காக்க மூன்றாவது கண்ணை தோற்றுவித்தேன்.
(யோக மார்கத்தில் இருப்பவர்கள் அனைவரும் மூன்றாவது நேத்ரம் எத்தனை முக்கியமானது என்று அறிவார்கள். இது குறித்து குருமுகமாக அறிக.)
உமை : பகவானே உமது கீழ்திசை முகம் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறதே, வடக்கு மற்றும் மேற்கு திசை முகங்கள் பார்க்க அழகாக இருக்கிறது, தென் திசை முகம் ஜடைகளால் மூடப்பட்டு பயங்கரமாக இருக்கிறது அது ஏன்?
தொடரும்
*வாருணை  – மதிமண்டலத்தில் ஊறும் அமுதம்
புகைப்படம் : இணையம்

சமூக ஊடகங்கள்