அமுதமொழி – பிலவ – ஆனி – 2 (2021)


பாடல்

சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாமவரை
ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர்-மாந்தர்
குறைக்குந் தனையுங் குளிர்நிழலைத் தந்து
மறைக்குமாங் கண்டீர் மரம்

மூதுரை – ஔவையார்

கருத்து – தீங்குகளை மனதில் கொள்ளாமல்  அவர்களைக் காக்கும் சான்றோர்கள் குணம் பற்றி உரைக்கும் பாடல்.

பதவுரை

மாந்தர்களால் வெட்டுப்பட்டு தன்னுடைய அவயங்கள் ஆகிய கிளைகள் குறையும் போதும் தன்னை வெட்டுபவனுக்கு நிழலைத் தந்து காக்கும் மரத்தைப் போல, அறிவுடைய சான்றோர்கள் தங்கள் உயிருக்கே தீங்கு நேரினும் அந்த தீங்குகளை மனதில் கொள்லாமல் அவ்வாறு தீங்கு செய்பவனையும் இயன்ற வரைக் காக்கவே செய்வர்.

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.