அமுதமொழி – சார்வரி – கார்த்திகை- 15 (2020)


பாடல்

காயம் அறுங்கால் கருதியமெய் யாவிவிட்டுப்
போயோர் தனுவிற் புகுகையால் – ஆயகலைய்
தந்திரமா யோசித்துத் தானியத்தால் ஆகுதியை
மந்திரத்தாற் செய்வன் மகிழ்ந்து

சிவாச்சிரமத் தெளிவு – அம்பலவாண தேசிகர் 

கருத்துஉடலில் மந்திரத்தால் ஆகுதி செய்தல் பற்றிய  பாடல்.

பதவுரை

உடலானது அறுபட்டு போகும் காலத்தில், மெய் என்று கருதிய உடலை விட்டு ஆவி பிரிந்து போய்  வேறொரு உடலில் புகும்; ஆகையால் கற்ற அனைத்து கலைகளிலும் இருக்கும் சிறப்புகளை யோசித்து தீர்மானமாக தானியம் கொண்டு ஆகுதியை வளர்ப்பது போல் குருவால் உபதேசிக்கப்பட்ட மந்திரத்தால் இந்த உடலில் ஆகுதி செய்து மகிழ்ந்து இருக்க வேண்டும்.

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.