
பாடல்
மேவும் உன்றன் அடியாருள்
விரும்பி யானும் மெய்ம்மையே
காவி சேருங் கயற்கண்ணாள்
பங்கா உன்றன் கருணையினால்
பாவி யேற்கும் உண்டாமோ
பரமா னந்தப் பழங்கடல்சேர்ந்து
ஆவி யாக்கை யானெனதென்
றியாது மின்றி அறுதலே
எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்
கருத்து – பாவியாகிய தன்னை விடுவிக்கும் எண்ணம் உண்டோ என வினவும் பாடல்.
பதவுரை
கருங்குவளை மலரினை ஒத்த மீன் போன்ற கண்ணையுடைய உமையம்மையின் பாகனே! உன்னுடனே பொருந்தி இருக்கும் அடியார்களில் ஒருவனாக நானும் உண்மையிலே விரும்பி உன்னை அடைந்து உயிரும், அதற்கு ஆதாரமான உடம்பும், நான் எனது என்னும் பற்றுக்களும் சிறிதுமில்லாது அற்றுப்போகும்படி செய்து, உன்னுடைய பெரிய திருவருளால் எப்பொழுதும் நிலைபெற்று இருக்கும் பேரின்பமாகிய பழையகடலை கடக்க பாவியாகிய எனக்கும் உலகியலில் இருந்து அறுதல் உண்டாகுமோ?
விளக்க உரை
- காவி – கருங்குவளை