அமுதமொழி – விகாரி – மாசி – 13 (2020)


பாடல்

மூலம்

வேதா கமசித்ர வேலா யுதன் வெட்சி பூத்ததண்டைப்
பாதார விந்தம் அரணாக அல்லும் பகலுமில்லாச்
சூதான தற்ற வெளிக்கே யொளித்துச்சும் மாவிருக்கப்
போதா யினிமன மேதெரி யாதொரு பூதர்க்குமே

பதப்பிரிப்பு

வேத ஆகம சித்ர வேலாயுதன் வெட்சிபூத்த தண்டைப்
பாத அரவிந்தம் அரண் ஆக அல்லும் பகலும் இல்லாச்
சூதானது அற்ற வெளிக்கே ஒளித்துச் சும்மா இருக்கப்
போதாய் இனி மனமே தெரியாத ஒரு பூதருக்குமே

கந்தர் அலங்காரம் – அருணகிரிநாதர்

கருத்துமுருகப் பெருமானின் திருவடிபற்றி சும்மா இருத்தல் எனும் அநுபூதி நிலையினை வேண்டி நிற்கும் பாடல்.

பதவுரை

காலத்தால் முற்பட்டதாகிய வேதங்களாலும், சமய நெறிமுறைகளை எடுத்துச் சொல்லும் ஆகமங்களாலும் துதிக்கப்படுகின்றவனும், அழகிய வேலை ஆயுதமாக கொண்டவனும், மலர்ந்த வெட்சிப் பூக்கள் போன்ற தண்டையை அணிந்த செந்தாமரை மலர் போன்ற திருவடிகளை உடைய முருகப் பெருமானை  காவலாகக் கொண்டு, தந்திரங்கள் அற்று இரகசியமாகவும் உபாயங்களாலும் அறியக்கூடியதும், இரவும் பகலும் இல்லாது ஆன பரவெளியில் கரைந்து சும்மா இருத்தல் எனும் அநுபூதி நிலையில் நிலைத்து நிற்கும் பொருட்டு இனியாவது வருவாயாக மனமே.

விளக்க உரை

  • வேதங்களாலும், ஆகமங்களாலும் துதிக்கப்படுபவன் என்பவை முருகப்பெருமான காலத்தால் முற்பட்டவன் என்பதை விளக்கும்.

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *