பாடல்
இனிவார் சடையினில் கங்கையென்
பாளைஅங் கத்திருந்த
கனிவாய் மலைமங்கை காணில்என்
செய்திகையிற் சிலையால்
முனிவார் திரிபுரம் மூன்றும்வெந்
தன்றுசெந் தீயின்மூழ்கத்
தனிவார் கணையொன்றி னால்மிகக்
கோத்தஎம் சங்கரனே
பதினொன்றாம் திருமுறை – திருஇரட்டைமணிமாலை – காரைக்காலம்மையார்
கருத்து – சங்கரனை நிந்தாத் துதி செய்தல்.
பதவுரை
கோபம் கொண்ட அசுரர்களின் முப்புரத்தையும் செந்தீயினால் வேகுமாறு எரித்த சங்கரனே, உன் சடையினில் தங்கியுள்ள இனிமையத் தரத்தக்க கங்கையை இடபாகத்தில் இருக்கும் பாகம் பிரியாத மலைமங்கை என அழைக்கப்படும் உமாதேவியார் காணநேர்ந்தால் நீ என்ன செய்வாய்?
விளக்க உரை
- `காணின் என் செய்தி` – `நாணித் தலை குனிவை போலும்` எனினும், `உயிர்களின் நன்மைக்காக அன்றிப் பிறிதொன்றையும் செய்யாதவன்நீ` என்பதை உணர்த்தும். `இதுவும் ஒரு நன்மைக்கே` என்பது உணர்ந்து அவனும் எதுவும் செய்யப் போவதில்லை; நீயும் நாணுதற்குக் காரணம் இல்லை` என்பது இப்பாட்டின் உள் உறையும் சிறப்பு. (வட மொழியில் – நிந்தாத் துதி, தமிழில் பழிப்பது போலப் புகழ்தல்)
- முனிவார் – கோபிப்பவர்
- வார்கணை- நீண்ட அம்பு