நிஜமும் நிழலும்


எதோ ஒரு கணத்தில்
எனது குரல்
கடவுளுக்கு கேட்டிருக்க கூடும்.
இல்லை எனில் நிகழ்ந்திருக்குமா
இனிய எண்ணப் பரிமாற்றம்.
இல்லை எனில் நிகழ்ந்திருக்குமா
வேதனையற்ற சந்தோஷ சிரிப்புகள்.
இல்லை எனில் நிகழ்ந்திருக்குமா
புன்னகைப் பூக்கள்.
அனைத்தும் தாண்டி
அடுத்த அறையினில்
என் மகளின் படிப்புக் குரல்
‘கிட்டாதாயின் வெட்டன மற’


சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply