பாடல்
தண்டாமல் ஈவது தாளாண்மை தண்டி
அடுத்தக்கால் ஈவது வண்மை – அடுத்தடுத்துப்
பின்சென்றான் ஈவது காற்கூலி பின்சென்றும்
ஈயானெச் சம்போல் அறு
தனிப்பாடல்கள் – ஔவையார்
கருத்து – பல வகைத் தானங்களும், அவற்றின் பலன்களும் பற்றியப் பாடல்.
பதவுரை
பிறர் கேட்கமால் அவர் நிலை அறிந்து தானம் கொடுப்பது பெருமை உடையது; அவர்களின் நிலையைக் கேட்டு அறிந்து அவர்களுக்கு தானம் கொடுப்பது குறைந்த பெருமை உடையது; பலமுறைக் கேட்டு பின் தானம் கொடுப்பது தர்மத்தின் கால்பகுதி, கேட்டும் கொடுக்காதவர், கழிவு இல்லாத பழைய வினை போன்றவர் என்று அவர் உறவை அறுத்து விடுக.
விளக்க உரை
- ஈதல் – தானம் கொடுத்தல்.
- எச்சம் – மீதம், எஞ்சி இருப்பது, வாரிசு, பறவைகளின் கழிவு