புகைப்படம் : திருவாடுதுறை ஆதினம்
சக்தி கணபதி
வடிவம் | பச்சை நிறத்தவளான தேவியைப் பரஸ்பரம் ஆலிங்கனம் செய்த திருக்கோலம். தேவியும் அவ்வாறே பரஸ்பரம் தழுவிக் கொண்டிருப்பார். |
மேனி வண்ணம் | மாலை நேரச் சூரியனின் இளமஞ்சள் நிறத் திருமேனியை உடையவர் |
திருக்கைகள் | பாசம், அங்குசம் ஆகியவற்றைத் தாங்கி அஞ்சேல் எனும் அபயகரமும் உடையவர் |
பலன் | வழிபடும் பக்தர்களின் அச்சத்தைப் போக்குபவர் |
மந்திரம்
ஆலிங்க்ய தேவீம் ஹரிதாம் நிஷண்ணம் பரஸ்பராஸ்லிஷ்ட கடெளநிவேஸ்ய:|
ஸந்த்யாருணம் பாஸஸ்ருணிம் வஹந்தம் பயாபஹம் ஸக்தி கணேஸமீடே: ||
விளக்கம்
மாலை நேர செவ்வந்தி வானம் போன்ற நிறம் உடையவராகவும், பச்சை நிறமான தேவியை தழுவிக் கொண்டவராகவும், அவ்வாறே தேவியாலும் பரஸ்பரம் தழவிக் கொள்ளப்பட்டவராகவும், பாசம், பூமாலை இவற்றை தாங்கிய திருக்கரத்துடன் அபய முத்திரை கொண்டிருப்பவருமான கணபதியை வணங்குகிறேன்.